Monday, May 2, 2016

‪#‎கோட்சேக்கள்வருகிறார்கள்‬.!!


இதோ கோட்சேக்கள்
ஒவ்வொருவராய்
விழித்தெழ முனைகிறார்கள்
பிணவறையில் இருந்து.!!
புதிதாய்
பூமிக்கு வருபவர்கள்
பரிசுத்தவான்களாய்த்தான் இருப்பார்கள்
கருவறையில் இருந்து பிறக்கையில்..!!
ஆனால்,
தன் சுய குணத்தையே
கொண்டிருப்பார்கள் -
வரலாற்றின் கல்லறையில்
இருந்து பிறப்பவர்கள்..!!
இதோ கோட்சேக்கள்
ஒவ்வொருவராய்
புறப்படத் தயாராகி விட்டார்கள்.!!
தலைவனுக்கான முகமூடியை
அழகாய் - அம்சமாய்
அமைதி பேசும் நாவு
கொண்டதைப் போல்
அமைத்து விட்டால்,
பின்,
கொலைக்களத்தின் கொடூரங்களை
கொல்லைப் புற வழியே
தொண்டர்கள் நிறைவேற்றுவார்கள்
குண்டர்களாய் மாறி..!!
அன்புள்ள காந்தி மகான்களே..!!
உங்கள் உயிர் பறிக்க
அவர் தம் துப்பாக்கி உயருமுன் -
அவர்களையும் மாற்றுங்கள்
அகிம்சை வாதிகளாய்..!!
இல்லையேல்
கழுவில் ஏற்றுங்கள் - அவர் தம்
கரங்களின் வலிமையை..!!
அதிலும் தொல்வியெனில்
தாமதிக்காமல்
மயானங்களை அழகு படுத்துங்கள் -
கோட்சேக்கள் தொடர்ந்து துயில..!!
அவர் தம்
ஆன்மாக்கள்
தொடர்ந்து துயிலட்டும்..!
மீண்டும்
மீண்டு வரும் ஆசைகளின்றி.!!
வரலாற்றை
புரட்டும் கரங்களால்
இருட்டுப் பங்கங்களை
திருட்டுத் தனமாய்
குறுக்கு வழியில்
மீண்டும் நிகழ்த்த
ஆசையுள்ளோர் யார் இங்கே.??
இந்த பூமியில்
இனி
கோட்சேக்கள்
பிறக்க வேண்டாம்..!
கோட்சேக்களாயும்
எவரும் இருக்க வேண்டாம்.!!
நம் சமாதானப் புறாக்கள்
வெள்ளை நிறத்திலேயே
இருந்து விட்டு
போகட்டும்.!!

- Abbas Al Azadi
LikeShow More Reactions
Comment
Comments
Senthil Nathan கோட்சேக்கள் பிறப்பதில்லை-உருவாக்கப்படுகிறார்கள் உருவாக்கப்படுவத்தின் அவசியத்தை சிதைத்துவிட்டால் உறுவாவதில்லை-கோட்சேக்கள் ஒருமதத்தில் மட்டுமெல்லாம் பிறப்பதில்லை. தன் மதம் அழியக்கூடாது என்று கொலை செய்பவன் அனைவருமே கோட்சே தான்.சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் வேண்டும். யாரும் கோட்சேவை விழித்தெழ செய்ய முனையாதீர்கள்.
Mani Kandan i like senthil anthan comment. godse "s are make not born. gandhi's make godsey's...
Abbas Al Azadi காந்திகள் பிறக்காமல் இருக்க வேண்டும் நினைப்பது அமைதியை நேசிப்பவர்களின் பண்பா.?
Senthil Nathan கண்டிப்பாக கிடையாது Abbas Al Azadi அவர்களே, அவரின் பெரும் நோக்கம் அமைதியை நோக்கியது தான். அதன் வழியில் சில கருத்து தவறானது . அதன்விளைவு கோட்சே
Abbas Al Azadi welcome brother

No comments:

Post a Comment