Tuesday, May 3, 2016

ராம்பாலின் ஆசிரமத்திலிருந்து துப்பாக்கிகள்

ராம்பாலின் ஆசிரமத்திலிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல்!
ஹரியானா மாநிலம் பர்வாலாவில் கைதுச் செய்யப்பட்ட சாமியார் ராம்பாலின் ஆசிரமத்திலிருந்து ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆசிரமத்தின் அலமாரிகளிலிருந்து 32 போர் ரிவால்வர்கள், 19 ஏர் கன்கள், இரண்டு டி பி எல் போர், இரண்டு 315 போர் ரைஃபிள்கள், 32 போர் ரிவால்வர்களுக்கான 28 லைவ் கேட்ரிட்ஜ்கள்,12 போர் ரைஃபிள்களுக்கான 50 லைவ் கேட்ரிட்ஜ்கள், 315 போர் ரைஃபிள்களுக்கான 25 லைவ் கேட்ரிட்ஜ்கள், ஒரு சில்லி க்ரேனேடு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவை இரண்டு அறைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரிய சுவர்கள், கண்காணிப்பு டவர்கள் உள்பட ஒரு கோட்டைக்கு சமமான அளவில் ராம்பாலின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது.ராம்பாலின் பாதுகாப்பு அதிகாரிகளுக்காகவே தனியாக அறை உள்ளது.பக்தர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பக்தர்களை பரிசோதிப்பதற்காக நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது.நீச்சல் குளம், 24 ஏ.சி அறைகள், மாதத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு, உணவு தயாரிப்பதற்கான விசாலமான சமையலறை, ஒரே தடவையில் ஆயிரம் ஃப்ரெட்டை தயாரிக்கும் இயந்திரம் ஆகியன ஆசிரமத்தில் உள்ளன.ராம்பாலுக்காக தனியாக தயாரிக்கப்பட்ட ஹைட்ராலிக் நாற்காலி, பக்தர்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட தனி பகுதியும் ஆசிரமத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
LikeShow More Reactions
Comment
8 comments
Comments
Senthil Nathan
Write a comment...
Senthil Nathan குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கபடவேண்டும். அவர்களுக்கு ஜாதி மத சாயம் பூசி காக்கவோ தூற்றவோ வேண்டாம். புனிதமான பெயர்களை பயன்படுத்தி தீயமைகளை செய்வோரை ஒழித்தல்என்பது என் இனத்துக்கும் நம் நாட்டுக்கும் செய்கின்ற நன்மையாகும்.
Abu Abdullah கருப்புப்பணம் வெளிநாட்டில் மட்டும் பதுக்கபடவில்லை இதுபோன்ற ஆசிரமங்களிலும் மடங்களிலும் பதுக்கபட்டிருக்கும்
நாகை தாஜ் அப்படி என்ன இவர் BJP,RSS ற்கு துரோகம் செய்தார் என்று தான் நமக்கு தெரியவில்லை ?????????
அபூ அஹம்மது எஹ்யா மாஷாஅல்லா. நமது பத்திரிக்கை நன்பர்கள் இந்த செய்தியை மக்களிடம் காண்பித்தற்க்கு நன்றி. மனிதன் சிந்திக்காத வரைக்கும் சாமியார்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

No comments:

Post a Comment