Monday, March 31, 2014

திறந்தவெளிப் படிப்பு

உளவியல், இந்தியக் கலாசாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேஷன்ஸ் இது போன்ற துறையில் 12ஆம் வகுப்புப் படிக்க வேண்டுமா? தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling) அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தவறியவர்களும்/பாதியில் விட்டவர்களும் இந்தப் பள்ளியில் இணைந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தைப் பயிலலாம்.

பொதுவாகத் திறந்தவெளிப் படிப்பு என்றால் படிப்புக்கு மதிப்பு இல்லை என நினைப்பார்கள். ஆனால் இங்குப் பாடத்திட்டம் மாநில பாடத்திட்டத்துக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கும் இடையிலான தரம் கொண்டதாக இருக்கும். தேர்வில் தவறிய மாணவர்கள் மட்டும் கல்வி மையம் மட்டுமல்ல இது. தேசிய திறந்தநிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்து ஐ.ஐ.டி. ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று ஐ.ஐ.டி. உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருபவர்கள் உண்டு. அதேபோல், அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேருவோர் அநேகர்.


எவ்வித அடிப்படைக் கல்வித் தகுதி இல்லாதவர்களும் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து நேரடியாக 10-ம் வகுப்புத் தேர்வு எழுதலாம். அதன் பிறகு அவர்கள் விரும்பினால் பள்ளியில் பிளஸ்-1 சேரலாம். அல்லது 2 ஆண்டு கழித்து தொடர்ந்து பிளஸ்-2 தேர்வு எழுதி பிறகு கல்லூரியில் சேரலாம். தேசியத் திறந்தநிலைப் பள்ளிக்கு நாடு முழுவதும் 19 மையங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிக்கான சென்னை மண்டலம் அண்மையில்தான் தொடங்கப்பட்டது. சென்னை மண்டல இயக்குனர் பி. ரவி அட்மிஷன் நடைமுறைகளை விவரிக்கிறார்:

குறைந்தபட்சம் 14 வயது நிரம்பிய எவர் வேண்டுமானாலும் தேசியத் திறந்தநிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு சேரலாம். எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும். இதற்கு அவர்களே சுயஉறுதிமொழி அளிக்கலாம். வயது வரம்பு ஏதும் கிடையாது.

பிறந்த தேதிக்கு மட்டும் அத்தாட்சி சமர்ப்பிக்க வேண்டும். தேசியத் திறந்தநிலைப் பள்ளியின் இணையதளத்தில்
 (www.nios.ac.in) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 5 பாடங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் ஒன்று அல்லது 2 பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல்-தொழில்நுட்பம், சமூக அறிவியல், பொருளாதாரம், வர்த்தகக் கல்வி, மனையியல், உளவியல், இந்திய கலாசாரம்,

ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேசன்ஸ-இவற்றில் தங்களுக்குப் பிடித்தமான 3 அல்லது 4 பாடங்களைத் தேர்வுசெய்து கொள்ளலாம். மேலும், விருப்பமான ஒரு தொழில்கல்விப் பாடத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

அட்மிஷன், புத்தகம் உள்ளிட்ட அனைத்துக்கும் சேர்த்து கட்டணம் ரூ.1,030. பெண்கள் என்றால் ரூ.780, எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.580 மட்டுமே. கட்டணத்தை ஆன்லைனில் நெட்-பேங்கிங் மூலமாகவோ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவோ செலுத்திவிடலாம். அட்மிஷன் போட்டுவிட்டால் வீட்டு முகவரிக்கு புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
இதேபோல், பிளஸ்-2 சேர வேண்டுமானால் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 15 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். தேர்வுக்கட்டணம் ரூ.1,130. பெண்களுக்கு ரூ.930. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் மற்ரும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.655 மட்டும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்று அல்லது 2 பாடங்களையும், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்கவுண்டன்சி, ஓவியம், மனையியல், உளவியல், சுற்றுச்சூழல், மாஸ் கம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆபரேஷன்ஸ் ஆகிய 18 பாடங்களில் ஏதேனும் 3 அல்லது 4 பாடங்களை தேர்வுசெய்து படிக்கலாம். விரும்பம் இருந்தால் கூடுதலாக 2 பாடங்கள் எடுத்தும் படிக்கலாம்.
வகுப்புகளுக்கு விருப்பம் இருந்தால் செல்லலாம். கட்டாயமில்லை. சேர்க்கை மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஒன்று. செப்டம்பர் 1 முதல் பிப்ரவரி 28 வரை ஒன்று இரு நிலைகளில் நடக்கிறது. தமிழ்வழியில் பாடங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இப்பணி முடிந்ததும் தமிழக மாணவர்கள் தமிழ்வழியிலும் படிக்கலாம்.

சந்தேகங்களுக்கு: சென்னை மண்டல அலுவலகத் தொலைபேசி எண்: 044-28442237 
0

இணையதள இணைப்பு


உலகத்தின் மூலை முடுக்குகளுக் கெல்லாம் ஃபேஸ்புக்கை கொண்டு செல்ல‌ அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு நிரம்ப ஆசை போலும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக பல இடங்களில் இணையதள இணைப்புக் கிடைப்பதில்லை. எனவே, இணையதள வசதி இல்லாத இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணைக்க தற்போது முயற்சி எடுத்துள்ளார் ஜூகர்பெர்க்.


ஆங்கிலத்தில் 'ட்ரோன்' என்றழைக்கப்படும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் மூலம் அனைவருக்கும் இணைய வசதி ஏற்படுத்தித் தர ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை ஃபேஸ்புக்கின் சகோதர நிறுவனமான‌ 'இன்டர்நெட் டாட் ஆர்க்' எனும் அமைப்பு நாசா உட்பட ஆறு இதர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து நடைமுறையில் கொண்டு வர முயன்று வருகிறது.


இந்த 'இன்டர்நெட் டாட் ஆர்க்' நிறுவனத்தில் 'கனெக்டிவிட்டி லேப்' எனும் துறை உள்ளது. இது இத்திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு வழிவகைகளை வகுத்துத் தரும்.
அதில் ஒன்று சூரிய ஒளி மூலம் இயங்கும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள். இதற்காக, 'செஃபைர்' எனும் உலகின் நீளமான, சூரிய ஒளியால் இயங்கும் ஆளில்லாத விமானத்தை வடிவமைத்த இங்கிலாந்து நாட்டின் அசென்டா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஃபேஸ்புக்.

ஆளில்லாத விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தும் இந்த முயற்சியில் ஃபேஸ்புக் மட்டுமல்லாமல், கூகுள் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. அதனுடைய திட்டத்திற்கு 'புராஜெக்ட் லூன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பலூன்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தித் தர கூகுள் முயன்று வருகிறது. 

Wednesday, March 26, 2014

gk

* ‘பேய் பிடித்த வீடு’ என நம்பப்படுகிற வீட்டை, அந்த விஷயத்தைக் கூறாமல் விற்பனை செய்வது, நியூயார்க்கில் சட்டப்படி குற்றம்!

* புலியின் தோலில் அதன் மென்மயிர்களைப் போலவே டிசைன் கீற்றுகள் காணப்படுகின்றன.

கோலா விலங்குகளும் மனிதர்களும் ஒரே விதமான விரல் ரேகைகளையே கொண்டுள்ளனர்.

* சாலமாண்டார் என்கிற ஊர்வன வகை உயிரிகளில் சில, தாம் இழந்த வால், கால் பகுதிகளை மட்டுமல்ல... கண்ணின் பகுதிகளைக்கூட திரும்ப வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை!

* பெண் கழுதையையும், ஆண் வரிக்குதிரையையும் கலப்பினம் செய்து ‘ஜீடாங்’ என்ற உயிரினம் உருவாக்கப்பட்டுள்ளது.

* ஸ்லிங்கி என்ற சுருள் வளையத்தை (ஒரிஜினல்) 6வது மாடியின் ஜன்னலிலிருந்து தரை வரை நீட்சியடையச் செய்ய முடியும்.

* ஆண் தீக்கோழி சிங்கத்தைப் போலவே கர்ஜிக்கும்.

* சைபீரியாவில் குளிர் அதிகமாகும்போது, உங்கள் மூச்சுக்காற்று வெளியே வந்த உடனேயே, ஐஸ் ஆகிவிடும்!

* பகடைக்காய்களில் எதிரெதிர் பக்கங்களின் கூட்டுத்தொகை எப்போதும் 7 ஆகவே இருக்கும்.

* எலிபென்ட் சீல் விலங்குகளில் சில, நீர்மூழ்கிக் கப்பல்களுக்குக் கீழேயும் கூட ‘டைவ்’ அடித்துச் செல்லும்.

Monday, March 24, 2014

விண்வெளி


Posted Image


சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை செட்யூல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், ஐந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால் பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள்.

* காலை 6 மணி:

நாளின் துவக்கம். பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். ( அதாவது ஐ.எஸ்.எஸ் ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும். எழுந்து கொள்ள வேண்டும்.

* காலை 7 மணி:

உடல் நலம் பேணல் (Hygiene), காலை உணவு, பல் துலக்குதல். பேஸ்டால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம். தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள்.

* காலை 7.30 மணி:

கான்பெரன்ஸ் ஐ.எஸ்.எஸ் ல் எல்லோரும் ஒரே இடத் தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத் தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக்காண கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்னைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.
* காலை 8 மணி:

பயிற்சி நேரம் எடையற்ற நிலையில் உடல் பல பிரச்னைகளை சந்திக்கும். அதனால் கட் டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள் இது கால் சதைப்பாகங்களுக்கு மற்றும் உடலின் நரம்புகளுக்கு உறுதி அளிக்கிறது. இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள்.
* மதியம் 1 மணிக்கு:
உணவு இடை வேளை. இந்த மதிய உணவு அவர்களின் விருப்ப உணவாக பூமியில் முன்னதாக தீர்மானிக்கப்பட்ட மூன்றில் ஒன்றாக இருக்கும். விருப்ப உணவு ஏற்கனவே தயார் செய்யப்பட்டு பேக்கிங்கில் இருக்கும். சிலவற்றை உடனடியாக சாப்பிடும் வகையிலும் சிலவற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து ஓவனில் சூடாக்க வேண்டி இருக்கும்.

* மதியம் 2 மணி:
வேலை துவக்கம் ஐ.எஸ்.எஸ் ல் உள்ள கிப்போ சோதனைக்கூடத்தில் விண்வெளி மருந்து, உயிரியல், புவி சூழ்நிலை ஆய்வு, பொருள் உருவாக்கம், புரோட்டீன் படிம உருவாக்க பெட்டியில் சில சோதனைகள் இப்படி,...
* மாலை 5 மணிக்கு:

உடற்பயிற்சி. இரண்டு ட்ரெட்மில்கள், இரண்டு நிலையான சைக்கிள், ஒரு எடை தூக்கி பயிற்சி செய்யும் சாதனம் இவைதான் நிரந்திர பயிற்சி சாதனங்கள். எந்த பயிற்சி செய்வதாக இருந் தாலும் அவர்கள் தரையோடு இருக்கும் ஸ்ட்ராப்பில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

* மாலை 6 மணிக்கு:

வேலை. விண்வெளி நிலையத்திற்குள்ளே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய சோதனைக்கூடம் கொலம்பஸ். இது மைக்ரோ கிரேவிட்டி சயன்ஸ் க்ளோவ் பாக்ஸ் என அழைக்கப்படுகிறது. இங்கு சில சோதனைகளை செய்கிறார்கள். விண்வெளி வீரர்களுக்கு அவர் கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உண வுகளை தேவையான அளவிற்கு வழங்கப்படுகிறது. ஒருவாரம் அல்லது ஒருமாதம் தங்குவதாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் உணவுகள் வினியோகிக்கப்படுகிறது. கூடுதலாக ஆரஞ்சு பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் டயட் என்று சொல்லப்படுகிற நிலையை அவர்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* இரவு 8.30 மணி:

கான்ஃபரன்ஸ் (கலந்துரையாடல்) தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தோடு அன்றைக்கு மேற்கொள்ளப்பட்ட பணி விவரங்கள், அடுத்த நாள் மேற்கொள்ளப்போகும் பணி இவற் றை விவாதிக்க வேண்டியிருக்கும். விண்வெளி நடை பயில (ஸ்பேஸ் வாக்) மேற்கொள்ளப்படுகிறது. அடு த்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு கான்ஃபரன்ஸ் முறையில் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

* இரவு 9.30 மணி:
ஓய்வு நேரம் துவக்கம். இப்போது எடையற்ற நிலையில் சில விளையாட்டுகளையும் விளையாடுகிறார்கள். புத்தகம் படித்தல், டிவிடி பார்த்தல், இசை கேட்டல், லேப்டாப்பின் மூலம் தங்கள் குடும்பத்தினரோடு பேசி நேரத்தைக் கழிக்கலாம். ஒலி ஒளிகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

* இரவு 10மணி:

தூக்கம். கேஷுவல் டிரஸில் தங்களுக் கென கொடுக்கப்பட்டிருக்கும் தூங்குவதற்கான குழாய் படுக்கையில் உறங்கலாம். கண்கள் மற்றும் காதுகளை மறைக்கும் பிரத்தியேக முகமூடிகளை அணிந்து கொள்கிறார்கள். இந்த பை போன்ற படுக்கை மிதந்து சென்றுவிடாமல் இருக்க பெல்டுகளால் இணைக்கப்பட்டிருக்கும். அறிவியல் உலகிற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல கஷ்டங்களுக்கு தம்மை பழக்கி கொண்டு, சுக துக்கங்களை மறந்து அவர்கள் ஆற்றும் பணிகள் மிகவும் அற்புதமானவை. 
0

இன்டர்நெட்

Posted Image



சென்ற மார்ச் 12 ஆம் நாளுடன், இன்டர்நெட் தொடங்கி 25 ஆண்டுகள் முடிந்துள்ளது. இணையம் என அழைக்கப்படும் World Wide Web என்ற திட்டம், முதலில் ஒரு இயற்பியல் இளம் விஞ்ஞானியால், ஆய்வு கட்டுரையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் இயங்கிய CERN என்ற சோதனைச் சாலையில் பணியாற்றிய Tim BernersLee, எவ்வாறு ஓர் எளிய வழியில், உலகில் இயங்கும் கம்ப்யூட்டர்களை இணைக்கலாம் என்ற கருத்தினை வெளியிட்டார்.

இதுவே, பின்னர் உலகளாவிய திட்டமாக மாற்றப்பட்டு, இன்று பல நூறு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு சாதனமாக இணையம் இயங்குகிறது.

முதலில் இந்த கருத்தினை டிம் பெர்னர்ஸ் லீ வெளியிட்ட போது, அது எப்படி சாத்தியமாகும்? என்ற கேள்வியுடன் பல முனைத்தாக்குதல்கள் இருந்தன. அவருடைய திட்டக் கருத்தினை அனைவரும் இது நடக்காத ஒன்று என ஒதுக்கித் தள்ளினர்.

ஆனால், அமெரிக்க இராணுவம் தன்னுடைய தேவைகளுக்காக, இந்த திட்டக் கருத்துரையைக் கவனத்துடன் படித்துப் பயன்படுத்த முன் வந்தது. 1969 ஆம் ஆண்டில், Arpanet என்ற இணைய முன்னோடித் திட்டத்தினைச் செயல்படுத்தியது.

அந்த திட்டம், இராணுவ நடைமுறைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், டிம் பெர்னர்ஸ் லீ தந்த திட்டம், பொதுமக்களுக்கானதாகும். எந்த சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களையும் ஒரு மைய வலையில் இணைத்து, ஒன்றுக்கொன்று பைல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் வகையில் அவரின் திட்டம் இருந்தது.

இந்த வகையில் இணையம் உருவாக்கப்பட்ட போது, அப்படியே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதைக் காட்டிலும், அதற்குப் போட்டியாக அமெரிக்காவில் CompuServe, பிரான்ஸ் நாட்டில் Minitel என்ற இணைய திட்டங்கள் இயக்கத்திற்கு வந்தன. ஆனால், அவை அதிகக் கட்டணம் செலுத்தி மட்டுமே கிடைக்கும் வகையில் இருந்தன. ஆனால், பெர்னர்ஸ் லீ கொடுத்த திட்டம், மக்களுக்கு இலவசமாக இணையத்தினைத் தருவதாக இருந்தது.

1990 ஆம் ஆண்டில், மின்னோஸ்டா பல்கலையில் அதற்குச் சொந்தமான Gopher system என்னும் இணைய திட்டம் செயலாக்கத்தில் இருந்தது.
ஆனால், இதனை முறியடிக்கும் வகையில், அப்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த அல் கோர், அரசின் துறைகள், பெர்னர்ஸ் லீ தந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். Whitehouse.gov என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது. இதுவே இணையத்தை அரசு அங்கீகாரம் செய்தமைக்கு எடுத்துக் காட்டாகும்.

1993ல் இணையம் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அப்போது கோபர் சிஸ்டம் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப் பட்டது.
பெர்னர்ஸ் செயல்படுத்திய இணைய திட்டத்தில், பொது மக்கள் தாங்கள் விரும்பியதை, தங்களுடைய மற்றும் இணைய இணைப்பில் இருந்த கம்ப்யூட்டர்களில் பதிவு செய்து மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கும் சுதந்திரம் இருந்தது.

ஆனால், அந்த நேரத்தில், இணையம் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவ முடியும் என்று கற்பனையாகக் கூட மக்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று கூகுள் மற்றும் யாஹூ மிகவும் சிறப்பாகப் புகழ் பெற்றுள்ளது என்றால், அதற்கு மக்கள் விரும்பும் தகவல்களை அவை தங்களின் சர்வர்களில் அமைத்துத் தந்து வருவதே காரணமாகும்.

இந்த கால கட்டத்தில் தான், பெர்சனல் கம்ப்யூட்டர் நம் வாழ்வின் பல நிலைகளை மாற்றி அமைத்தது. அத்துடன் இணையமும் இணைந்து கொண்டது. இணையவலையில் உள்ள பைல்களை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற செயல்பாடு பல தொழில் பிரிவுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இசை, திரைப்படங்கள், செய்தி எனப் பல தொழில் பிரிவுகள் என்ன செய்வது என அறியாமல் திகைத்தன. யார் வேண்டுமானாலும், எதனையும் கேட்டு பயன் பெறலாம்; அவர்களே பதிப்பிப்பவர்களாகவும் இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டபோது, இத்தகைய தகவல்களை வழங்கும் தொழில் பிரிவுகள் தங்களின் செயல்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. தொடர்ந்து இந்த நிலை பல தொழில் பிரிவுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

ஆனாலும், இணைய வலை மக்களுக்குத்தான் அதிக சக்தியை வழங்கியது. அவர்களே அனைத்து பிரிவுகளின் எஜமானர்களாக மாறினர். அரசு குறித்த விமர்சனங்கள் அனைவராலும் தரப்பட்டன. எந்த அரசின் நடவடிக்கையும் மக்களின் கவனத்திற்கு மறைக்க இயலாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து உருவான இணையம், அரசு மற்றும் அது போன்ற மையங்களுக்கு சில பாதுகாப்பு வசதிகளை அளித்தது. சிலவற்றை மக்களுக்குத் தெரியாமல் இவை அமைத்தன. இருந்தும் மக்கள் இணையம் தரும் சக்தியை உணர்ந்தே உள்ளனர்.

இன்று ஸ்மார்ட் போன் போன்ற கையடக்க சாதனங்கள் வழியாக இணையத்தை எந்த நேரமும் அணுக முடியும் என்ற நிலை மக்களுக்கு அளவற்ற சக்தியையும், சுதந்திரத்தையும் தந்துள்ளது என்பதனை மறைக்க, மறுக்க முடியாது.
3

Sunday, March 23, 2014

neethikal






































நீதிகள்

உலக நீதி! குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டியவை!
படிக்காமல் ஒருநாளும் இருக்காதே!
பிறர் மனம் வருந்தும்படி எதையும் சொல்லாதே!
பெற்ற தாயை என்றும் மறவாதே!
வஞ்சனையாய் தீமை செய்வாரோடு சேராதே!
போகத் தகாத இடங்களுக்குப் போகாதே!
ஒருவர் நம்மை விட்டுப் போனபின்பஅவரைப்பற்றி
இழிவாகப் பேசாதே!



நீ பார்க்கும் போது புன்னகை செய்யும் உதடுகளை விட உன்னை பார்க்காத போது கண்ணீர் சிந்தும் கண்களை நேசி அது தான் உண்மையான அன்பு



சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகம் சோதிக்கபடுகிறான்!
பிறரை அதிகமாக
நேசிப்பவன் மட்டுமே
அதிகம் கயப்படுகிறான்!



கொஞ்சம் படித்தால் சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப் படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.
வசிப்பது உள்நாடோ வெளிநாடோ, பண்பாடு மாறாமல், சொந்த மண்ணையும் மொழியையும் மறவாமல் இருக்கும் வரை நாம் நாமாகவே இருப்போம்.




முதுமையில் எவ்வளவு சொத்து இருந்தாலும் , மனைவி இழந்து விட்டால் அவனை தவிர ஏழை உலகில் யாரும் இல்லை !



ஒருநாள்தான் வாழ்வு , என்றாலும் மலர்கள் பூக்கத்தானே செய்கின்றன! அதுவும், தனக்கே உரிய அழகும், நிறமும் மாறாமல்,மனதை மயக்கும் மணத்தை வீசி, காலா காலமாக, இயற்கையோடு இணைந்து நடப்பதை கண்டும், இந்த மனிதப் பிறவிகள் மட்டும் இயற்கைக்கு மாறாக,ஏன், எதிரியாக நடந்து
கொண்டு தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்!
புரியவில்லையே! பகுத்தறிவு , என்று, ஒன்று இருப்பதுதான் காரணமோ!!!?



1."கடன்காரான் " ஆவதை விட "பிழைக்கத் தெரியாதவன் " எவ்வளவோ மேல் .
2."டை " கட்டிய பணக்காரனை விட "கை " கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .
3."கெட்டவன் " ஆவதைவிட "கையாலாகாதவன் " எவ்வளவோ மேல் .
4."வல்லவன் " ஆவதைவிட " நல்லவன் "எவ்வளவோ மேல் .
5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .
6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .
7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ "வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன் " எவ்வளவோ மேல் .
8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை "விட நெறி தவறாத "எறும்பு " எவ்வளவோ மேல் .
9.வெற்றிகளி ன் "கர்வங்களை " விட தோல்வியிலும் "நம்பிக்கை " எவ்வளவோ மேல் .
10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல்.



தோல்விகள் நல்ல பாடங்களை தருபவை -- படிப்போம் ..
வெற்றிகள் கண்ணாடி போன்றவை --- பாதுகாப்போம் ...
நல்ல உறவுகளும் நல்ல நட்பும் விலை மதிப்பற்றவை - தக்க வைத்து கொள்வோம் .



பூக்கின்ற எல்லாப் பூக்களும் பிஞ்சாவதில்லை! எல்லா பிஞ்சுகளும் காயாவதில்லை! எல்லாக் காய்களும் கனியாவதில்லை! எனவே, வாழ்கையில், நாம் எண்ணும் எண்ணங்களும், செய்ய முற்படும் செயல்களும் பலபலவே
ஆனாலும், சிலசிலவே வெற்றி பெறும் ,என்பதை உணர வேண்டும்! அதுதான் அமைதியான வாழ்கைக்கு வழி கோலும்




கண்ணை நம்பாதே!

கண்ணை நம்பாதே!
1. கீழே உள்ள படத்தை பாருங்கள்.
2. இரண்டு மூடிகளும் ஒரே சாம்பல் நிறத்தில் உள்ளனவா?
3. இல்லை என்ன?
4. இப்பொழுது இரண்டு மூடிகளும் சந்திக்கின்ற நடுபக்கத்தை உங்கள் ஒரு விரலால் மறையுங்கள்.
5. உற்றுப்பாருங்கள்.
6. ஆச்சரியமாய் இருக்கிறதா? 

Wednesday, March 19, 2014

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

 

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்).
லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், “ஐ.சி.எஸ்” பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். “சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்” என்று வீர உரை நிகழ்த்தினார். அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை “நேதாஜி” (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை.
1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட “பார்வர்டு பிளாக்” என்ற அமைப்பை உருவாக்கினார். இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.
உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது.
ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.
1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். “சயாதீன்” என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.
காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார்.
காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.
நேதாஜியின் வீர சாகசம் :
இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர். 1941 டிசம்பர் 7-ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின. பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக்கொண்டு, “இந்திய தேசிய ராணுவம்” அமைக்கப்பட்டது.
போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார். ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். “இது ஆபத்தானது” என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8-ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர்.
எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக்கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது. ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28-ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை,
மே 6-ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது.
சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார். மே 16-ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய வியூகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, “தேசிய மாணவர் படை”யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது.
1943 அக்டோபர் மாதம், “சுதந்திர இந்திய அரசாங்க”த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.
அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.
நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக “பாங்கி” தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. “இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?” என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். “ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்” என்று நேதாஜி கூறியதும், “இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்” என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.
இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர். நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று! நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர்.
பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், “ஜான்சிராணிப்படை” என்ற பெயரில் இயங்கியது.
இதில் 1,200 பெண்கள் இருந்தனர். “தற்கொலைப்படை” ஒன்றும் இயங்கியது. இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.
“டெல்லி சலோ!” என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. “ஜான்சிராணிப்படை” பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. “விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்” என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால்…
நேதாஜி போன விமானம் மாயமாய் மறைந்தது
போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக் கொண்டிருந்தார்.
1945 ஏப்ரல் 30-ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண் அடைந்தது.
ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை. எனவே, 1945 ஆகஸ்ட் 6-ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12-ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத் தீர்மானித்தது.
அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15-ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, “ஜான்சி ராணிப்படை”யில் உள்ள பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது.
“ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார்.
1945 ஆகஸ்ட் 16-ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு. “ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்” என்பதே அந்தச் செய்தி. அடுத்த செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. “நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்.”
இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். அதன் பின்னர் மின்னல் வேகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-1945 ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். துணைத்தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்) ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.
ஆகஸ்ட் 18 காலை 10 மணி: விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்படத்தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும், விமானத்தில் இருந்த ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா, வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார். சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது.
அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னைக் கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாகப் பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார். கடைசி நேரத்தில், “இன்னொருவர் வரலாம்” என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். எனவே ஹபிப்-வுர்-ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து நேதாஜி “ஜெய் ஹிந்த்” என்று கூறினார். விமானம் புறப்பட்டது. அது எந்த இடத்துக்குப் போகிறது என்று அறிவிக்கப்படவில்லை. நேதாஜியின் கடைசி விமானப் பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை.
ஆகஸ்ட் 19-ந்தேதி, ஜப்பான் ரேடியோ “நேதாஜி இறந்துவிட்டார்” என்ற திடுக்கிடும் செய்தியை அறிவித்தது.
ஜப்பானிய ரேடியோ கூறியதாவது:-”சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945 ஆகஸ்ட் 16-ந்தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார். 18-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார். நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப்-வுர்-ரகிமானும், மற்றும் 4 ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்” இவ்வாறு ஜப்பானிய ரேடியோ அறிவித்தது.
இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும், முத்துராமலிங்க தேவர் உள்பட பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை.
டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்” என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967-ல், 350 “எம்.பி.”க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும்படி, ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர். அதன்படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை கமிஷன்” அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்

Tuesday, March 18, 2014

z3x china ed demo video


ஆப்பிள் கணினி


Posted Image

நம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் கணினி தான் அதிகமாக பயன்படுத்துகிறோம் ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும் அதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும்.அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்க்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு விண்டோஸ் கணினியை ஆப்பிள் ஆக மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

நாம் விண்டோவ்சின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம் இதற்க்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும் பின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான்.
இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.

இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.பின்னர் உங்கள் கணினியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.



DOWNLOAD LINK
http://www.multiupload.nl/ZYXGZEAYVT



இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினி முதலில் இருந்தது போல மாறிவிடும். 
0

Saturday, March 15, 2014

இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம்


Posted Image


கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமா? அதற்கான எளிய வழியை மொசில்லா (Mozilla) முன் வைத்துள்ளது. பிரபலமான இணைய உலாவியான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் மொசில்லா அமைப்பு இதற்காக 'லைட்பீம்' (Light Beam) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

Posted Image

பயர்பாக்ஸ் உலாவிக்கான சேர்க்கையாக (add on) அறிமுகமாகியுள்ள இந்த சேவையை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் இணையத்தில் உலாவும்போது எப்படி எல்லாம் உங்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காணிப்பின் விவரங்களை இந்த சேவை காட்சிரீதியாக தோன்றச் செய்கிறது.
லைட்பீம் சேவையை உலாவியில் இயக்கியதும், இணையதளத்திற்கு செல்லும் போதெல்லாம் அந்த தளத்தில் இருந்து உங்களைப் பற்றிய விவரங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பது வரைபட சித்திரமாக காட்டப்படுகிறது. எந்த தளங்கள் எல்லாம் தகவல்களை சேகரிக்கின்றன என்பதை இந்த வரைபடம் உணர்த்தும். முதல் தளத்தில் இருந்து அடுத்த தளத்திற்கு செல்லும் போது அந்த தளத்தில் எப்படி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதும், இந்த தளங்களிடையே உள்ள பரஸ்பர தொடர்பையும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்தால் கண்காணிப்பின் இயல்பு பற்றிய மேலதிக விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த வரைபடத் தோற்றம் தவிர, கடந்த 24 மணி நேரத்தில் எந்த தளங்கள் விவரங்களை சேகரித்தன என்பதையும் தெரிந்து கொள்ளும் வசதி இருக்கிறது.
இணையத்தில் கண்காணிப்பு எப்படி செயல்படுகிறது, நீங்கள் உலாவும் தளங்கள் எப்படி மற்ற தளங்களுடன் உங்கள் இணைய நடவடிக்கை விவரங்களை பகிர்ந்து கொள்கின்றன போன்ற விஷயங்களை இதன் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். கண்காணிப்பை அடையாளம் காட்டும் இந்த சேவை மூலமான தகவல்கள் எதுவுமே சேகரிக்கப்படுவதில்லை என்கிறது மொசில்லா. ஆனால் நீங்கள் விரும்பினால் இந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முன் வரலாம். கண்காணிப்பு விவரங்களை புரிந்து கொள்வதற்கான பொது கையேட்டிற்கு இதன் மூலம் பங்களிக்கலாம் என்கிறது மொசில்லா.

கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கொல்யூஷன் எனும் வசதியின் நீட்சியாக இந்த லைட்பீம் உருவாகி இருக்கிறது.
லைட்பீமை தரவிறக்கம் செய்ய https://addons.mozil...eam/?src=search



1

ADOBE PHOTOSHOP


நீங்கள் ADOBE PHOTOSHOP பயன்படுத்தி சிறிய இமேஜை(BITMAP) பெரியதாக SCALE பண்ணும் பொழுது கண்டிப்பாக அதனுடைய QUALITY குறையும். இனி உங்களுக்கு அந்த கவலையே வேண்டாம்.
உங்கள் இமேஜை பெரியதாக்கும் பொழுது (upto 300000 pixels) எந்தவிதமான QUALITY யும் குறையாமல் PIXEZOOM என்ற‌ PLUGIN பார்த்துக் கொள்கிறது.

இதனில் ஒரு வருத்தம் என்னவென்றால் இந்த PLUGIN னை ADOBE PHOTOSHOP CS3 யிலிருந்துதான் பயன்படுத்த முடியும். அதற்கு முந்தைய வெளியீடுகளில் பயன்படுத்த முடியாது.


கீழே கொடுக்கப் பட்டுள்ள இணையதள தொடர்பில் PLUGIN னை பதிவிறக்கம் செய்து சேமித்துக்கொள்ளவும். இந்த PLUGIN னை நிறுவும் முன் ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது PLUGIN னை நிறுவிக்கொள்ளவும்.


ADOBE PHOTOSHOP CS3 அல்லது CS4 ரினை OPEN செய்து பெரியதாக்க வேண்டிய இமேஜை கண்டிப்பாக OPEN செய்து கொள்ளவும். இப்பொழுது FILE MENU விற்கு சென்று EXPORT ற்கு வந்தால் PIXEZOOM தெரியும், அதனை CLICK செய்தால் SERIAL NUMBER கேட்கும். அப்பொழுது KEYGEN னை RUN செய்து SERIAL NUMBER ரினை டைப் செய்யவும்.


அவ்வள‌வுதான் இப்பொழுது இமேஜை எவ்வளவு பெரியதாக்க வேண்டும் என்பதை நிர்ண‌யம் செய்து கொண்டு, தேவையான FORMAT ல் சேமித்துக்கொள்ளவும்


Posted Image
PIXEZOOM : download link


விண்டோஸ் எக்ஸ்பி பாஸ்வர்ட்

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?

அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.

இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.

அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,

ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.


முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்ற

Posted Image

நம்மிடம் இருக்கும் வீடியோ கோப்புகளை ஒரு பார்மட்டில் இருந்து வேறு வகையான பார்மட்டு(format )க்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண(2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண(3D) வீடியோக்களாக மாற்றலாம்.


இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.


Posted Image


எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமாண தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயே இவ் முப்பரிமாணத் தன்மையை பார்வையிட முடியும்.

முப்பரிமாண கணணி மானிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக you-tube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான பார்மட்டுக்களிலும் மாற்றிக் கொள்ளலாம்.


Article Tutorials


Step 1


Posted Image

Select the media fileSelect the media file
Click the media source (video, audio, photo) you want to convert. To convert a video, for example, select the Video icon and browse to the desired video.


Step 2

Posted Image

Select the Output
Click the Select Output button. Choose the output format or device. To convert a video to 3D, for example, select 3D from the Type drop-down list box and click Done.



Step 3

Posted Image
Click the Start Button
Select the video in the Task List and click Start to convert the video. After the video is converted, mouse-over the image and click the Play button to view the video in 3D.



Posted Image
Posted Image

www.TamilRockers.net. ArcSoft MediaConverter 8.0.0.16 + Serial Key.rar
Posted Image