Sunday, August 10, 2014

flipkart ஆக்கமும் வளர்ச்சியும்


W5Ipz4Q.jpg


சிறிய மளிகைக் கடைக்காரர்கள் சூப்பர் மார்க்கெட்களைப் பார்த்து பயந்தார்கள். பின்னர் கார்ப்பரேட் கம்பெனிகள் வந்தன. சமீபத்தில் எஃப்டிஐ, அதாங்க சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு. அதைப் பார்த்துப் பயந்தார்கள். இப்போது அனைவரும் ஆன்லைன் வணிக நிறுவனங்களைப் பார்த்துப் பயப்படும் அளவுக்கு ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

புத்தகங்கள், மளிகை, ஜூவல்லரி, ஆடைகள், காலணி, மொபைல் என அனைத்தையும் ஆன்லைனில் வாங்கத் தொடங்கியுள்ளார்கள். இதனால் எல்லா வணிக நிறுவனங்களும் இணையம் மூலம் பொருள்களை விற்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


இதற்கு முன்னோடியாக அமேசான் (அமெரிக்கா), அலிபாபா (சீனா) உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் ஃபிளிப்கார்ட்டைச் சொல்லலாம்.


ஆரம்பம்


d3bMEmP.jpg

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகிய இருவரும் 2007-ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இருவரும் டெல்லி ஐஐடியில் படித்தார்கள். அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்தார்கள். பின்னர் வெளியேறி 4 லட்ச ரூபாய் முதலீட்டில் பிளிப்கார்ட்டைத் தொடங்கினார்கள்.


ஆரம்பத்தில் புத்தங்களை மட்டுமே விற்று வந்தார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் leaving microsoft to change the world என்னும் புத்தகத்தை முதன்முதலில் வாங்கியுள்ளார்.

பிஸினஸ் செய்வதற்கு முதலீடு தேவை இல்லை, ஐடியா மட்டுமே போதும் என்பதற்கு இவர்கள் சரியான உதாரணம். இவர்களது ஐடியாவைப் பார்த்து வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன. முதல் 18 மாதங்களுக்குத் தங்களுக்கான சம்பளத்தை இவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.


கிரெட் கார்ட் அல்லது டெபிட் கார்டு வைத்திருப்பர்கள் மட்டுமே ஆன்லைன் பொருள்களை வாங்க முடியும் என்பது தடையாக இருந்துவந்தது. அதனால் கேஷ் ஆன் டெலிவரி திட்டத்தை 2010-ம் ஆண்டு கொண்டுவந்தார்கள். பொருளை ஆர்டர் செய்துவிட்டுத் தேவை இல்லை என்று சொல்லலாம், வீடு பூட்டியிருக்கலாம் எனப் பல ரிஸ்க் இருந்தாலும் பன்சால் ஜோடி துணிந்தது. இது நிறுவனத்துக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது.


முதலீடு திரட்டல்


பிஸினஸ் வளர்வதற்கு வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடம் பேசி நிதி திரட்டினார்கள். 2009-ம் ஆண்டு 10 லட்சம் டாலர் முதலீட்டை ஆக்செல் பார்ட்னர் நிறுவனம் பிளிப்கார்டில் முதலீடு செய்தது. தவிர டைகர் குளோபல், நாஸ்பர், மார்கன் ஸ்டேன்லி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளிப்கார்டில் முதலீடு செய்திருக்கின்றன.


கடந்த ஏழு வருடங்களில் 176 கோடி டாலர் அளவுக்கு ஃபிளிப்கார்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. உலகளவில் அதிகளவு முதலீட்டை திரட்டிய இந்திய நிறுவனம் பிளிப்கார்ட்தான்.


வளர்ச்சி

gIkWn0Q.jpg



திரட்டிய முதலீட்டை பிஸினஸில் முதலீடு செய்வது ஒரு வகையான வளர்ச்சி என்றால், நிறுவனங்களைக் கையகப்படுத்தி வளர்வதும் இன்னொரு வகையான வளர்ச்சி. இன் ஆர்கானிக் குரோத் என்பார்கள். ஃபிளிப்கார்ட் இந்த வேலையையும் செய்து வருகிறது.


மிக சமீபத்தில் 2,000 கோடி ரூபாய் கொடுத்து மிந்த்ரா டாட் காம் MYNTRA.com நிறுவனத்தை வாங்கியது. 2012-ம் ஆண்டு லெட்ஸ்பை(Letsbuy.com) என்னும் நிறுவனத்தை வாங்கியது. இது தவிர இன்னும் சில நிறுவனங்களையும் ஃபிளிப்கார்ட் வாங்க இருக்கிறது.

இப்போது ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்று விளம்பரப்படுத்திப் பொருள்களை விற்க ஆரம்பித்திருக்கிறது. இப்படி விற்பதால் அதிக அளவு தள்ளுபடி கொடுக்க முடிவதால் மோட்டோ நிறுவன செல்போன்களை ஃபிளிப்கார்ட்டில் வாங்க கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் சீனாவின் Xiaomi Mi3 செல்போன் சில வினாடிகளில் விற்றுத் தீர்ந்தது. இதை அறிமுகப்படுத்திய அன்று ஃபிளிப்கார்ட் இணையதளம் கொஞ்சம் ஆடித்தான் போனது.

6000 கோடி ரூபாய் (2013-14) அளவுக்கு வருமானம் இருந்தாலும் ஃபிளிப்கார்ட் இன்னும் லாப பாதைக்குத் திரும்பவில்லை. இது குறித்து கேட்டதற்கு, “லாபம் ஒரு விஷயமே இல்லை. என்றைக்கு விரிவாக்கப் பணிகளை நிறுத்துகிறோமோ அப்போதே லாப பாதைக்குத் திரும்பிவிடலாம். ஆனால் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது” என்கிறார் அதன் தலைமைச் செயல் அதிகாரி சச்சின் பன்சால்.

4 லட்ச ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 42,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

15 கோடிக்கும் மேலானவர்கள் இணையத்தைப் பயன்படுத்தினாலும், இதில் 10 சதவீதம் நபர்கள்தான் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குகிறார்கள். ஆன்லைன் வணிகம் 2020-ம் ஆண்டு 7,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது 2020-ல் ஃபிளிப்கார்ட் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும், லாப பாதையில் திரும்பி இருக்கும். சிறந்த தொழில்முனைவோராக உயர்வது எப்படி இருப்பது என்று ஐஐஎம் கல்லூரிகளில் சிறப்பு வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கலாம்.

ஆனால்... ஃபிளிப்கார்ட் யாரும் செய்யாததைச் செய்யவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஆன்லைன் வணிகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிளிப்கார்ட் ஒரு எர்லி பேர்டு. அது மட்டுமல்லாமல் சரியான சமயத்தில் வந்த பேர்டும்கூட.

Saturday, August 9, 2014

kallanai

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….

Thursday, August 7, 2014

whatsapp on your pc

Step 1: download (BlueStack) for windows 






Step 2: After Finishing the Download Double Click on Downloaded File, Click Continue, Click Install.


Step 3: Now download whatsapp APK File







Step 4: After Finishing the Download Double Click on Downloaded WhatsApp APK file.


Step 5: Now whatsApp will install in your PC.


Step 6: Now Open BlueStacks (Click on BlueStacks icon in your Desktop)


Step 7: Now in BlueStacks >> Click on My Apps.


Step 8: Now you’ll see WhatsApp >> Click on it.


Step 9: Accept Terms and Condition 


Step 10: Type your Mobile Number in the Field


Note: First type your Country Code like 91 for India and then your Mobile Number


Step 11: Now WhatsApp will try to verify your number, but it will show fail message.


Step 12: Now click on Call Me >> You’ll receive a automatic call with a confirmation number, write down that number .


Step 13: Now type the received number in verification field and your done!



enjoy ........ whatsapp on your pc

மானிடவியல் (ஆந்த்ரோபாலஜி)


ppmVKs2.jpg

மனித இனத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, பழக்கவழக்கம், நம்பிக்கைகள் பற்றி ஆராய்வதே 'ஆந்த்ரோபாலஜி' (மானிடவியல்) படிப்பாகும். மனிதனின் பல நிலைகளிலான பரிணாம வளர்ச்சி, சமூக மேம்பாடு, கலாசார மாறுபாடு போன்றவற்றின் படிநிலை வளர்ச்சியை ஆராய்ந்து, ஒட்டுமொத்த மனித இனத்தை வரையறுப்பதே இந்த படிப்பு.

 

* வகைகள்:


clFMHVs.jpg

கலாசார ஆந்த்ரோபாலஜி என்பது மனிதர்கள் எவ்வாறு குழுவாகவும், சமூகமாகவும் இணைந்து வாழ தொடங்கினார்கள் மற்றும் எவ்வாறு அவர்களின் கலாசாரம் மேம்படத் தொடங்கியது என்பதை பற்றி ஆராய்வதாகும். 

மேலும், ஒவ்வொரு சமூகம் மற்றும் பகுதிகளுக்கு இடையே உள்ள கலாசார வேறுபாடுகள், அந்த மாற்றங்களுக்கான காரணங்கள், மொழிகளின் பரிணாம வளர்ச்சி போன்றவை பற்றிய விரிவான படிப்பை இந்த பிரிவில் மேற்கொள்ளலாம்.

வரலாற்றுக்கு முந்தைய ஆந்த்ரோபாலஜி என்பது அகழ்வாராய்ச்சி செய்து தோண்டி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள், சிலைகள், எலும்புகள், நாணயங்கள் போன்ற பலவித ஆதாரங்களில் இருந்து வரலாற்றை கட்டமைப்பதாகும்.

பவுதீக மற்றும் உயிரியல் ஆந்த்ரோபாலஜி என்பது மனிதனின் உயிரியியல் தோற்றம் பற்றி, அதாவது பிற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் உள்ள உயிரியியல் தொடர்பு குறித்து ஆராய்வதாகும். மேலும், வெவ்வேறு இன வகைகளாக பிரிந்திருக்கும் மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு இடையிலான உடல் வேறுபாடுகளைப் பற்றியும், வேறுபட்ட சூழ்நிலைகளுக்கேற்ப அவர்களின் வாழ்வு முறைகள் குறித்து ஆராய்வதும் இந்த வகை.

துணைநிலை ஆந்த்ரோபாலஜி என்பது, இத்துறையின் பிற பிரிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து, அதன் மூலமாக மருத்துவ சிகிச்சை, பிறப்பு கட்டுப்பாடு போன்ற முக்கிய திட்டங்களை முடிவு செய்வதாகும்.

மொழியியல் ஆந்த்ரோபாலஜி என்பது கலாசார ஆந்த்ரோபாலஜியுடன் நெருங்கிய தொடர்புடையது. பேச்சு மற்றும் எழுத்து மொழிகளின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு குறித்து ஆராய்வதாகும். மேலும், கலாசார கலப்புகள் ஒரு மொழியில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதை பற்றியும் இத்துறை ஆராய்கிறது. இந்த பிரிவு ஒப்பீட்டு ஆய்வோடு தொடர்புடையது.


 

* தேவைப்படும் பண்புகள்:


Osv8L5f.jpg

ஒரு ஆந்த்ரோபாலஜி நிபுணர் என்ற முறையில் ஒருவர் நடுநிலையானவராகவும், வெளிப்படை தன்மை கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். நீண்டதூர பயணம், தோண்டுதல் உள்ளிட்ட கடினமான வேலைகளுக்கு ஏற்ற உடல் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர, தனது கண்டுபிடிப்புகளை எழுத்தில் பதிவு செய்து வைக்க வேண்டிய அவசியம் இருப்பதால், அவருக்கு கண்டிப்பாக எழுத்து திறமையும் இருக்க வேண்டும்.

 


* இத்துறையில் நுழைவது எப்படி?

பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் பாடம் படித்தவர்கள், பலவித கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் பி.எஸ்சி., ஆந்த்ரோபாலஜி சேரலாம். இதே பிரிவில் எம்.எஸ்சி., மற்றும் பிஎச்டி வரை மேற்படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

 

* வேலைவாய்ப்புகள்:

KbRDmQC.jpg

ஆந்த்ரோபாலஜிகள் சர்வே ஆப் இந்தியா, திட்ட கமிஷன், உலக சுகாதார நிறுவனம், யுனெஸ்கோ மற்றும் யுனிசெப், குற்ற ஆய்வு அறிவியல் துறைகள், குற்ற புலனாய்வு துறைகள், மியூசியங்கள், கலை கண்காட்சியகங்கள், நூலகங்கள், ஆவண காப்பகங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகள் உள்ளன. மேலும் பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியும் இத்துறையில் கிடைக்கிறது. இதைத்தவிர, ஏதேனும் ஒரு தூரமான பகுதியில், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைப் பற்றி ஆராய அல்லது ஏதேனும் பழமையான வரலாற்று அம்சத்தை பற்றி ஆராய நீங்கள வெளிப்புற வேளையில் ஈடுபட வேண்டியிருக்கும். வசதியற்ற மற்றும் கரடுமுரடான இடங்களில் நடைபெறும் இதுபோன்ற வேலைகளுக்கு அதிக உடல் சக்தி தேவைப்படும்.

 
* சம்பளம்:
 
இத்துறையில் பணியைப் பொறுத்து சம்பள விகிதங்கள் மாறுபடும். ஒரு ஆராய்ச்சியாளர் தனது பணியை பொறுத்து நல்ல ஊதியம் பெறுவார். பல வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் இந்திய ஆந்த்ரோபாலஜி ஆராய்ச்சி பணிகளை ஆதரிக்கின்றன. ஆராய்ச்சி சாராத பணிகளுக்கு பொதுவாக நல்ல சம்பளம் கிடைக்கிறது. மியூசியம் மற்றும் நூலக பணிகளிலும் நல்ல ஊதியம் கிடைக்கிறது. இவை தவிர கார்பரேட் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு துறைகளிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான பணிகளிலும் நல்ல ஊதியம் கிடைக்கிறது.

கர்நாடகா பல்கலைக்கழகம், அசாம் பல்கலை, கல்கத்தா பல்கலை, டெல்லி பல்கலை, வித்யாசாகர் பல்கலை ஆகியவை ஆந்த்ரோபாலஜி கற்பிக்கப்படும் முக்கிய கல்வி நிறுவனங்கள் ஆகும்.

80 வயது லரிசா-ஆண்களால் 48 ஆண்டுகள் வீழ்த்த முடியாத அரிய சாதனை!

Men can not defeat the very rare achievement for 48 years!

How to get rid of wrinkles
MORE VIDEOS
தடம் பதித்த தாரகைகள்

லரிசா லடினினா


2012... லண்டன் ஒலிம்பிக்ஸ். லரிசா லடினினா மிகவும் உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்பட்டார். அவர் எந்தப் போட்டியிலும் பங்கு  பெறவில்லை. அவருடைய உறவினர்களோ, நண்பர்களோ கூட கலந்துகொள்ளவில்லை. பின் எதற்கு இந்தப் பரவசம்? நீச்சல் உலகின் ராஜாவாக வலம்  வரும் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் பங்கேற்கும் போட்டிதான் அது. ஏற்கெனவே 16 தங்கப் பதக்கங்களுடன் களமிறங்கிய பெல்ப்ஸ், இந்தப்  போட்டியிலும் பதக்கம் பெற்றபோது, ‘அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்றவர்’ என்ற சாதனையை எட்டினார். பெல்ப்ஸ் முறியடித்த சாதனைக்குச்  சொந்தக்காரர்தான் லரிசா லடினினா!

18 ஒலிம்பிக் பதக்கங்களை வென்று, 48 ஆண்டுகள் வரை வேறு யாரும் தொடாத உச்சத்தில் இருந்தவர் சோவியத் யூனியனின் லரிசா லடினினா!  “பெல்ப்ஸ் என் சாதனையை முறியடிப்பார் என நிச்சயம் தெரியும். சாதனை என்பதே இன்னொருவர் முறியடிப்பதற்குத்தானே? என்ன... ஒரு  பெண்ணின் சாதனையை ஆண் முறியடிப்பதற்கு அரை நூற்றாண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது” என்று சிரித்தார் லரிசா.‘அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்ற பெண்’ என்ற சாதனை இன்னும் லரிசாவை அலங்கரித்துக்கொண்டுதான் இருக்கிறது!

1934 டிசம்பர் 27... 

அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனில் பிறந்தார் லரிசா. இரண்டாம் உலகப் போரில் நாட்டுக்காக உயிர் துறந்தவர்  லரிசாவின் அப்பா. அம்மாதான் வேலை செய்து படிக்க வைத்தார். தான் படிக்கவில்லை என்றாலும் தன் மகள் படித்து, நல்ல நிலைக்கு வர வேண்டும்  என்பதால், மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார். லரிசாவுக்கு பாலே நடனத்தின் மீது ஆர்வம். அதற்கான சிறப்புப் பள்ளியில் சேர்த்து, படிக்க வைத்தார்  அம்மா. அந்தப் பள்ளியோ, விரைவில் மூடப்பட்டது. அக்காலகட்டத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் பள்ளிகள் மிகவும் பிரபலமாக இருந்தன. லரிசாவும் தன்  விருப்பத்தை பாலேயிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸுக்கு மாற்றிக்கொண்டார். 12 வயதில் பயிற்சியை ஆரம்பித்தார். ஆர்வமும் கடின உழைப்பும் அவரைச்  சிறந்த ஜிம்னாஸ்டாக மாற்றின.

1954... 

19 வயது லரிசா ரோமில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் குழுவாகக் கலந்துகொண்டு, தங்கப்பதக்கத்தோடு திரும்பினார். எல்லோரின்  கவனமும் அவர் பக்கம் திரும்பின. அன்றைய பொதுவுடைமை ஆட்சியில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.  திறமையானவர்களையும் ஆர்வம் உள்ளவர்களையும் அடையாளம் கண்டு, சிறந்த முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. லரிசாவும் கடினமான  பயிற்சிகளை மேற்கொண்டார்.

1956... 


மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அன்று ஜிம்னாஸ்டிக்ஸில் கொடிகட்டிப் பறந்த ஹங்கேரியைச் சேர்ந்த ஆக்னஸ் கெலிட்டியைத்  தோற்கடித்துத் தங்கம் வென்றார். தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் லாரிசா 4 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என்று பதக்கங்களை   அள்ளிக்கொண்டு வந்தார். பதக்க வேட்டையில் சோவியத் யூனியனின் கொடி பறக்க ஆரம்பித்தது.

1957ல் 


நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களைக் குவித்தார். 1958 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில்  பங்கேற்றார் லரிசா. 5 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. இதில் மிக முக்கியமான விஷயம்... அவர் அப்போது 4 மாத கர்ப்பினியாக  இருந்தார். லரிசா கர்ப்பமாக இருந்த விஷயம் அவருடைய மருத்து வருக்கு மட்டுமே தெரியும். பயிற்சியாளர் உள்பட யாருக்கும் இந்த விஷயத்தை  அவர் சொல்லவே இல்லை. கர்ப்பமாக இருந்தால் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்ய அனுமதி கிடைக்காது என்பதால் ஆபத்து என்று தெரிந்தும் விளையாடினார்  லரிசா. மகள் பிறந்த ஏழே மாதங்களில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத் தையும் வென்றார்!

“இந்தப் பதக்கங்கள் எல்லாம் நானும் அம்மாவும் சேர்ந்து வாங்கியவை!” என்று அவருடைய மகள் பிற்காலத்தில் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்! திருமணம், குழந்தை, குடும்பம் என்று எந்த விஷயமும் லரிசாவின் லட்சிய வாழ்க்கைக்குக் குறுக்கே நிற்க முடியவில்லை. பயிற்சி... பயிற்சி...  பயிற்சிதான் எப்பொழுதும். இந்தக் கடினப் பயிற்சி பற்றி பல்வேறு விமர்சனங்கள் சோவியத் மீது வந்தபோது, “பயிற்சிகள்  கடினமானவைதான்.  ஆனால், இதன் மூலம் நானும் என் நாடும் பெருமைகொள்ள முடிகிறது என்பதால், இந்தப் பயிற்சிக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது” என்கிறார் லரிசா.

1960ல், 

ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றார் லரிசா. 1962 உலக  சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் வென்றார்.

1964... 


30 வயதை எட்டியிருந்தார் லரிசா. இதுதான் அவருக்குக் கடைசி ஒலிம்பிக் போட்டி. டோக்கியோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 2 தங்கம்,  2  வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 6 பதக்கங்களைத் தட்டினார். ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் அவர் பெற்ற பதக்கங்கள் 9 தங்கம், 5 வெள்ளி,  4 வெண்கலம். மொத்தம் 18 பதக்கங்கள்! இப்படியாக ஜிம்னாஸ்டிக்ஸ் உலகில் கம்பீரமான தேவதையாக வலம் வந்தார் லரிசா. உலக அரங்கிலும்  சோவியத் யூனியனிலும் சாதனையாளராகக் கொண்டாடப்பட்டார். முக்கியமான பல விருதுகளால், அவர் கௌரவிக்கப்பட்டார்.

1965...

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 4 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்களுடன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார் லரிசா. ஜிம்னாஸ்டிக்  பயிற்சியாளர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. ‘தான் மிகச் சிறந்த வீராங்கனை மட்டுமல்ல... மிகச்சிறந்த பயிற்சியாளரும் கூட’ என்பதை  அவருடைய செயல்கள் உணர்த்தின. அவர் பயிற்சியாளராக இருந்த 10 ஆண்டுகளில் 10 ஒலிம்பிக் பதக்கங்கள் சோவியத் யூனியனுக்குக் கிடைத்தன.  அதற்குப் பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் திறம்படச் செயல்பட்டார்.

‘‘இன்று 5 வயதிலேயே பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு, 10 ஆண்டுகளில் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர்களாக வெளி வருகின்றனர். அந்தக் காலத்திலும்  பயிற்சிக் காலம் இதே 10 ஆண்டுகள்தான். ஆனால், நான் 12 வயதில் பயிற்சியை ஆரம்பித்தேன். அன்று வெறும் தரையில் போட்டி நடக்கும்.  விழுந்தால் காயம் உறுதி. இன்று அடிபடாத அளவுக்கு ஸ்பிரிங் மேடைகள் வந்துவிட்டன. இந்த முன்னேற்றம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’’ என்கிறார்  லரிசா. 

‘‘அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் நிலவிய பதக்கப் போட்டி, சோவியத் யூனியன் சிதைந்த பிறகு குறைந்து போனது. இன்று  சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேதான் போட்டி. வாலண்டினா, லரிசா போன்ற எளிய பின்னணியில் இருந்து வந்த பெண்களும்  சாதனையாளர்களாக வலம் வந்தது அன்றைக்கு இருந்த பொதுவுடைமை அரசாங்கத்தால்தான்...’’ என்று ஏக்கத்துடன் சொல்கிறார் 80 வயது லரிசா.

தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்:



How to get rid of wrinkles
MORE VIDEOS
*தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய் ஏற்படுத்தும் 

*டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழிவகுக்கும்.தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

ஒருபோதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம்.

*ஒருவர் குடித்த டம்ளர் சுகாதாரக் கேடு என்று நினைத்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு டம்ளர் வைத்துக்கொள்ளலாம். உறவினர்கள் வந்தால் அவர்களுக்கு தனி டம்ளர் கொடுத்து அதை கூடு தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:

*மனிதரின் உடம்புக்கு நாளுக்கு தேவைப்படும் தண்ணீர் அளவு உணவு பொருட்களை உட்கொள்ளும் போது குடித்த தண்ணீரை தவிர, 1000 முதல் 2000 மில்லி லீட்டர் தண்ணீர் அதாவது 6 முதல் 8 கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக் காலத்தில் அல்லது தீவிர உடல் பயிற்சி செய்த பின் அல்லது வெளியே கடும் வெயிலில் வேலை செய்யும் போது கூடுதலான தண்ணீர் குடிப்பது மிக அவசியமானது.

எப்போது தண்ணீர் குடிக்கலாம்:

*தாகம் உணர்ந்த பின் தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் தண்ணீர் பற்றாகுறை நிலவும்.தினமும் அடிக்கடி தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக குடித்தால் போதும்.தாகம் உணரும் போது தண்ணீர் குடித்தால் உடம்புக்கு நீர் பற்றாகுறை ஏற்பட்டது எந்பது பொருள். இந்த நிலையில் தண்ணீர் குடித்தால் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்.

*ஆகவே நாளுக்கு ஒழுங்கான முறையில் பல முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.காலை பல் சுத்தம் செய்த பின் வெறும் வயிற்றுடன் ஒரு கோப்பை கொதித்து ஆறிய தண்ணீர் குடிக்க வேண்டும். முற்பகல் 10 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும். மதிய சாப்பாட்டுக்கு பின் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்க வேண்டும்.

*பிற்பகல் 3 மணியளவில் ஒரு கோப்பை தண்ணீரையும் இரவு சாப்பாடு உட்கொள்வதற்கு முன் ஒரு கோப்பை தண்ணீரையும் குடிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன் மீண்டும் ஒரு கோப்பை தண்ணீர் குடிக்கலாம்.காலை வெறும் வயிற்றுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்போது தண்ணீர் குடித்தால் தண்ணீர் இறைப்பை மூலம் ரத்தத்துடன் சீக்கிரமாக சேரும்.

*கட்டின ரத்தம் தண்ணீருடன் இணைந்த பின் லேசாகிவிடும். ரத்தம் ஓட்டம் சீர்மையாகிவிடும். இதய நோய் மூளை ரத்த தடுப்பு நோய் நிகழ்வது தடுக்கப்பட முடியும்.இரவு சாப்பாப்டுக்கு முன் தண்ணீர் குடித்தால் உணவு உட்கொள்ளும் அளவு இயல்பாகவே குறையும். எடை குறைப்பதற்கு துணை புரியும்இரவு அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

*எடைக்குறைக்கும் மருந்தை விட தண்ணீர் அறிவியல் முறையில் குடிப்பது பொருளாதார சிக்கனமாகும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் ரத்த அடர்த்தி குறைவதற்கு நன்மை தரும். முதியோருக்கு இந்த கோப்பை தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானது. உடல் பயிற்சி செய்யும் போது பெருமளவில் வியர்வை வெளியேறும்.

*தாகம் உணர்ந்த போது தண்ணீர் குடித்தால் அப்போது உடம்பில் நீர் சமநிலை குறைந்துவிட்டது.ஆகவே உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் தண்ணீர் குடிக்க வேண்டும்.பயிற்சி செய்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் தண்ணீரை கூடுதலாக குடிக்க தேவையில்லை.

குறைந்த அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். கொஞ்சம் நேரம் கழிந்த பின் தண்ணீர் மீண்டும் குடிக்க வேண்டும். வியர்வை அதிகமாக வெளியேறினால் உப்பான தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் நலனுக்கு நன்மை தரும்.

*தண்ணிர் கசப்பில்லாத சிறந்த மருந்து குடிக்க மறந்திடாதீங்க

Tuesday, August 5, 2014

ஹால்மார்க் தங்கம்...சுத்த தங்கமல்ல!-உஷார் ரிப்போர்ட்

B5mrsU1.jpg


தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை உள்ள நகையான்னு பார்த்து வாங்குங்கள் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இப்போது ஹால்மார்க் முத்திரையிட்ட தங்க நகைகள்கூட அசல் தங்க நகைகள் அல்ல என்று சொல்கிற அளவுக்கு சில விஷயங்கள் நடந்திருக்கின்றன.

இது என்ன, புதுக் குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

ஹால்மார்க் நகையை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு பிஐஎஸ் (Bureau of Indian Standards)அனுப்பியுள்ள ஆணையின்படி, ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது தரக்குறைவு ஏற்பட்டால், அதற்கு நகை விற்பனை செய்யும் கடைக்காரர்தான் பொறுப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் இந்த ஆணைக்கு தற்காலிக தடை  வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மற்ற விவரங்களை தெரிந்துகொள்ளும்முன், ஹால்மார்க் முத்திரை பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் குறித்து தங்க நகைமதிப்பீட்டாளர் மற்றும் ஜெம் அண்டு ஜுவல்லர் டெக்னாலஜி ட்ரைனிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன் விளக்குகிறார்.

''ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். நகை தயாரிப்பாளர் செய்துதரும் நகையின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் சென்டருக்கு அனுப்பி முத்திரை இட்டு வாங்க வேண்டும். இதில் தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிப்பதுதான் இந்த முத்திரை. அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும். ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டதால் மட்டும் தரம் உயர்ந்த தங்கம் என நினைக்கக்கூடாது. எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருக்கிறது என்று பார்ப்பது அவசியம்.

ஹால்மார்க் முத்திரை போடுவதற்கு கட்டணம் உண்டு. அதாவது, ஒரு நகைக்கு ரூ.25   முதல் ரூ.150 வரை

கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகையையும் தனித்தனியாக ஹால்மார்க் முத்திரை போட மாட்டார்கள். மொத்த மாக நகைகளை அனுப்புவார்கள். அனைத்து நகைகளையும் ஹால்மார்க் முத்திரை போட்டபின், அதிலிருந்து ஏதாவது ஒரு நகையை எடுத்து அதை டெஸ்ட் செய்வார்கள்.



0JC2hKW.jpg?1



அதாவது, தேர்ந்தெடுக்கப்படும் நகையை முதலில் உரைகல் மூலம்  உரசுவார்கள்.  அதன்பிறகு எக்ஸ்ஆர்எஃப் மெஷினில் சோதனை செய்வார்கள். இதில் இரண்டிலும் 916 தரத்தில் நகை இருந்தால், அடுத்த கட்ட சோதனை செய்வார்கள். தேர்ந்தெடுக்கும் நகையில் அனைத்து பாகங்களிலிருந்தும் தங்கத்தை சுரண்டி எடுப்பார்கள். அதை ஆசிட் டெஸ்ட் செய்வார்கள். இதிலும் 916 தரம் உறுதி செய்யப்பட்டால், அனைத்து நகைகளுக்கும் 916 தரத்துக்கான முத்திரை இட்டுத் தருவார்கள். இதில் ஏதாவது தரம் குறைந்த நகைகள் இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது'' என்றவர். ஹால்மார்க் சென்டர் செயல்படும் விதத்தையும் அங்கு நடக்கும் தவறுகளையும் எடுத்துச் சொன்னார்.


''ஹால்மார்க் முத்திரையை அரசு நிறுவனங்கள் நேரடியாக போட்டு தருவதில்லை. இந்த வேலையை லைசென்ஸ் பெற்ற தனியார்நிறுவனங்கள்தான் செய்கின்றன.


உள்ளூரில் கோல்டு டெஸ்ட் லேப் நடத்தி மூன்று ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் ஹால்மார்க் சென்டர் அமைக்க முடியும். இதற்கு பிஐஎஸ்ன் வழிக்காட்டலின்படி, லேப் அமைக்க வேண்டும். இதற்கு பிஐஎஸ் 25%  மானியம் வழங்கும். இந்த ஹால்மார்க் லேப் அமைக்க ரூ.7580 லட்சம் வரை செலவாகும். என்றாலும், இந்த லேப்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவே.



zYrla7b.jpg

ஹால்மார்க் நகைகளை விற்பதற்கு நகைக்கடைகள் பிஐஎஸ்-ஸிடமிருந்து அனுமதி வாங்கவேண்டும். இதற்கு  மூன்று ஆண்டு வருமான வரிதாக்கல் செய்த விவரம், எந்த வகையான நகைகளை எந்த தரத்தில் விற்பனை செய்கிறார்கள் என்ற விவரத்தை தந்து, அனுமதி பெறலாம். பெரிய நகைக்கடைகள் வருமான வரி தாக்கல் விவரத்தை தந்துவிடும். ஆனால் , சின்ன சின்ன கடைகளால் தரமுடியாது. ஏனெனில் பெரும்பாலான நகைக் கடைகள் விற்பனை செய்யும் நகை களுக்கு முறையான ரசீது தருவதில்லை. வருமான வரியும் சரியாக செலுத்துவதில்லை.


பிஐஎஸ் லைசென்ஸ் பெற்ற கடைகளுக்கு மட்டும்தான் ஹால்மார்க் தர முத்திரையை போட்டுதர வேண்டும். ஆனால், சில ஹால்மார்க் சென்டர்கள் போட்டி காரணமாகவும், அதிக வருமானம் பார்க்கவும் அனுமதி பெறாத கடைகளின் நகைகளுக்கு முத்திரை போட்டு தருகின்றன. அதாவது, கூடுதலாக பணம் வாங்கிக்கொண்டு இதை செய்கின்றன. இது சட்டப்படி தவறுதான்'' என்றார்.


இந்த நிலையில், ஹால்மார்க் குறித்து பிஐஎஸ் வெளியிட்ட ஆணையை எதிர்த்து வழக்கு தொடுத்தது குறித்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமனிடம் கேட்டோம்.


''கடந்த மே மாதம் பிஐஎஸ் சட்டத்தில் (Bureau of Indian Standards Act)சில திருத்தங்களை செய்த பிஐஎஸ் அமைப்பு, ஹால்மார்க் முத்திரை இட்ட நகைகளை விற்பனை செய்யும்போது அந்த நகையின் தரத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கு அந்த கடைதான் முழுப் பொறுப்பு எனச் சொல்லியுள்ளது.

அடுத்து, பிஐஎஸ் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது நகையை வாங்கியபிறகு ஏதாவது தரக்குறைபாடு இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தந்்தால், அந்த கடைக்கு அபாரதம் விதிக்கப்படும். நகைக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நகையை பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை யிடும்போது குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டாலும் அபராதம் விதிக்கப்படும். இப்படி மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

பிஐஎஸ் சொல்லியுள்ள இந்த விஷயங்கள் எதுவுமே நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. அதாவது, எந்த நகைக் கடைக்காரரும் தனது நகையை நேரடியாக செய்வதில்லை. பொற் கொல்லர்கள் செய்துதரும் நகையை தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி, வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். இந்த நகைகளுக்கு அரசு நிறுவனம் பிஐஎஸ் முத்திரை வழங்குகிறது. இதில் தரக்குறைவு ஏற்பட்டால் நகை வியாபாரி கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?


நகைக் கடைகள் விற்பனை செய்யும் ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளின் விவரம், அவற்றின் வரவு செலவு கணக்கு ஆகியவற்றை குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல நகைக்கடைகளில் இன்னும் கம்ப்யூட்டர் இன்னும் வரவில்லை. இதில் எப்படி ஐந்தாண்டுகளுக்கான விவரங்களை பாதுகாப்பாக வைக்க முடியும்?  


gWJbfAq.jpg


இதுபோன்ற திருத்தங்கள் கொண்டுவருவது தவறில்லை. ஆனால், அதை நடைமுறையில் அமல்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அல்லது இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசத்தை யாவது தரவேண்டும்' என்றார்.

நகை வாங்குபவர்கள் சேதாரம் குறைவாக உள்ளதா, கிஃப்ட் தருகிறார்களா, அதிக டிசைன்கள் உள்ளதா என்பதை கவனிப்பதோடு,  தங்கத்தின் தரம் குறித்தும் கொஞ்சம் அக்கறை கொள்வது நல்லது. அதாவது, உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான கடைகளில் நகை வாங்குவது நல்லது.

ஹால்மார்க் முத்திரையில் இவ்வளவு பிரச்னை இருக்கிறதே என்று நினைத்து அதைத் தவிர்க்க வேண்டாம். ஹால்மார்க் முத்திரை இருந்தால்தான் தரக்குறைவு இருப்பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இந்த முத்திரை இல்லையெனில் இது குறித்து எங்குமே முறையிட முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது.

அதேபோல, ஹால்மார்க் நகையில் அந்த கடையின் லைசென்ஸ் எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையினுடையதுதானா என்பதையும் உறுதி செய்துக்கொள்வது நல்லது

கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது?

ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.


நம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே? பின் எப்படி வைரஸ் தாக்க முடியும் என்ற எண்ணம் எல்லாம் இப்போது நம்பிக்கை தர முடியாது. எந்த வளையத்தை உடைத்துக் கொண்டு வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டரைத் தாக்கும் என யாரும் கணித்துச் சொல்ல முடியவில்லை. எனவே, நாம் தான் விழிப்பாக இருந்து, வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால், உடனே சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன; அவை தெரிந்தால் என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம்.


KAmtWgq.jpg

இப்போது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன. இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன. முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன. இவை பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்கள், பேட்ச் பைல் என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன. இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடுகளே, நமக்கு நம் கம்ப்யூட்டரில் மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள். அவற்றைப் பார்க்கலாம்.

 

போலியான ஆண்ட்டி வைரஸ் தகவல்கள்: 


qRC6pTh.gif



திடீரென நம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கம் இருப்பதாகவும், உடனடியாக கம்ப்யூட்டர் முழுமையும் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என பிரபலமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அல்லது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் நிறுவனங்கள் பெயரில் நமக்கு அஞ்சலில் செய்திகள் வரும். ஸ்கேன் செய்திட நம்மைத் தூண்டி, தயாராக யெஸ் பட்டன் ஒன்று தரப்படும். இதில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படுகிறது என்ற போர்வையில், வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் தன் முழு செயல்பாட்டினை மேற்கொண்டு, கம்ப்யூட்டரை முடக்கிவிடும். அல்லது, கம்ப்யூட்டரைப் பல வைரஸ்கள் பாதித்துள்ளதாகப் பட்டியலிட்டு, இவற்றை நீக்க, இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை வாங்கிக் கொள்ளுங்கள்.


விலை மலிவு தான் எனக் கூறி, அதனை வாங்கிட நீங்கள் சம்மதிக்கும் நிலையில், உங்கள் கிரெடிட் கார்ட், வங்கி அக்கவுண்ட் எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளும். பின் புதிய வைரஸ் புரோகிராம் பதியப்பட்டுள்ளதாகவும், வைரஸ்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் காட்டப்படும். ஆனால், உங்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி மற்றும் கிரெடிட் கார்ட் பதிவுகளைப் பயன்படுத்தி, உங்கள் பணம் திருடப்படும். சில நாட்கள் இடைவெளியில்தான், பொதுவாக, நாம் வங்கிக் கணக்கினைப் பயன்படுத்துவதால், இந்த மோசடியை நாம் அறியும்போது, நம் பணம் மொத்தமாகத் திருடப்பட்டிருக்கும்.

இவ்வாறு நமக்குப் போலியான செய்திகள் காட்டப்பட்டால், உடனே கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் பைல்களை சேவ் செய்து, இயக்கத்தை நிறுத்தி, மின்சக்தியையும் நிறுத்தவும். அடுத்து, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கவும். நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பினை நீக்கவும். அடுத்து, அண்மையில் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் அல்லது புரோகிராம்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடவும். அவற்றின் வழியாகத்தான் இந்த மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம் கம்ப்யூட்டருக்குள் நுழைந்திருக்கும். இந்த புதிய புரோகிராம்களை நீக்கிய பின்னர், கம்ப்யூட்டரை ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்குக் கொண்டு சென்று இயக்கவும். ரெஸ்டோர் செய்யப்படும் நாள், இந்த புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த நாளுக்கு முன்பிருந்தால் நல்லது. ரெஸ்டோர் செய்த பின்னர், வழக்கம் போல கம்ப்யூட்டரை இயக்கி, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும். மால்வேர் புரோகிராமின் மிச்ச மீத நச்சு நடவடிக்கைகளுக்கான பைல்கள் இருப்பின் அவை கண்டறியப்படும். அவற்றை நாம் அழித்துவிடலாம்.



தேவையற்ற பிரவுசர் டூல்பார்கள்:

EUZG8IB.jpg?1



 நம் பிரவுசரில் திடீரென நாம் இன்ஸ்டால் செய்திடாமலேயே, புதிய டூல்பார்கள் காட்சி அளிக்கும். நாம் “இது எப்படி வந்தது?” என்ற எண்ணத்துடன், அவற்றை அலட்சியப்படுத்தித் தொடர்ந்து செயல்படுவோம். இந்த டூல் பார்கள், நல்லதொரு நிறுவனத்தின் உண்மையான புரோகிராம் என்பதை உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றால், அது உங்களுக்குத் தேவை எனில், தொடர்ந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும். இல்லை எனில், அதனை உடனடியாக, முழுமையாக நீக்குவதே நல்லது. ஏனென்றால், இதுவும் மால்வேர் புரோகிராமின் ஒரு அவதாரமாகவே இருக்கும். பொதுவாக, டூல்பார்களை நீக்க அனைத்து பிரவுசர்களும் வழிகளைக் கொண்டுள்ளன. அவற்றை இயக்கி, இன்ஸ்டால் செய்யப்பட்ட டூல் பார்களில் இது இருந்தால், உடனடியாக நீக்கவும். ஆனால், பட்டியலில் இது இல்லை என்றால், நிச்சயம் இது மால்வேர் என்பது உறுதியாகிறது. மற்ற வழிகள் மூலம் இதனை நீக்கலாம்.

 

இணையத்தில் மாற்று வழி செல்லத் தூண்டுதல்: 




பல வேளைகளில், இணையத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கையில், வேறு ஒரு இணையதளம் செல்லுமாறு நாம் தூண்டப்படுவோம். கம்ப்யூட்டரை ஹேக் செய்திடுபவர்கள் பலர் இதனைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு மாற்றுவழிப் படுத்தி, குறிப்பிட்ட இணைய தளத்தைப் பார்ப்பதற்காக நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு கிளிக் செயல்பாட்டிற்கும், அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இது போன்ற நிகழ்வுகளும், போலியான டூல்பார்களால் மேற்கொள்ளப்படும். எனவே மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றி இந்த டூல் பார்களை நீக்கவும்.

 

பாப் அப் செய்திகள்: 


zfv4LD7.jpg



சில இணைய தளங்களைப் பார்வையிடுகையில், திடீர் திடீரென ஏதேனும் பாப் அப் செய்திக் கட்டங்கள் காட்டப்பட்டு, அதில் தரப்படும் தகவல்கள், நம்மை சில லிங்க்குகளில் கிளிக் செய்திடக் கேட்டுக் கொள்ளும். சர்வே எடுப்பதாக்க் கூறிக் கொண்டு, நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்களை கேட்டு வாங்கும். சர்வேயில் கலந்து கொண்டால், ஆப்பிள் ஐபோன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று நமக்கு ஆசை காட்டும். இது போன்ற செய்திகளை உருவாக்கித் தருவதும் சில டூல்பார்களே. எனவே, மேலே காட்டியுள்ளபடி, இந்த புதிய டூல்பார்களை நீக்குவதே, இதிலிருந்து தப்பிக்கும் வழியாகும்.



நண்பர்களுக்கு உங்கள் பெயரில் அஞ்சல்: 


eVOKrDP.png




உங்கள் மின் அஞ்சல் முகவரியிலிருந்து, உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அஞ்சல் செல்லும். அதில் நீங்கள் வெளிநாடுவந்திருப்பதாகவும், பணம் முழுவதையும் தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் செய்தி இருக்கும். அந்த நாட்டு வங்கிக் கணக்கு ஒன்று தரப்பட்டு, அதில் பணம் செலுத்தி உதவும்படி தகவல் தரப்படும். இப்படிப்பட்ட அஞ்சல்கள் அனுப்பப்பட்டால், உங்கள் கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு, வைரஸ் வசம் சென்றுவிட்ட்து என்று உறுதியாகக் கூறலாம்.


சில வேளைகளில், இத்தகைய அஞ்சல்களில், அனுப்பியவரின் பெயராக உங்கள் பெயர் இருக்கும். ஆனால், அனுப்பிய அஞ்சல் முகவரி உங்களுடையதாக இருக்காது. அதனைப் பார்த்து நாம் இது போலி என அறிந்து கொள்ளலாம். அவ்வகையில், அஞ்சல் முகவரி வேறாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்படவில்லை; ஆனால், அஞ்சல் முகவரிகள் திருடப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்று உணர்ந்து கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் நிச்சயம் அஞ்சல் வழியாகவோ, அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு, இது குறித்துக் கூறுவார்கள். உடனே விழித்துக் கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடவும். தேவையற்ற இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை அழிக்கவும். டூல்பார்களையும் நீக்கவும்.
 

இணைய பாஸ்வேர்ட் மாற்றம்: 

இணைய இணைப்பிற்கு மற்றும் சில இணைய தளங்களுக்கு நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் திடீரென மாற்றப்பட்டிருக்கும். நம்மால், இந்த சேவை எதனையும் பயன்படுத்த முடியாது. இது எப்போது நடக்கும்? இதற்குக் காரணம் நீங்களாகத்தான் இருப்பீர்கள். உங்களுக்கு இந்த சேவையை வழங்கும் நிறுவனத்தின் பெயரில் உங்களுக்கு அஞ்சல் ஒன்று வந்திருக்கும். அதில், அனைத்து சந்தாதாரர்களின் பதிவுகள் அனைத்தும் புதுப்பிக்கப் படுவதாகவும், அதற்காக உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் தரவும் என்று கேட்கப்படும். அதனை உண்மை என நம்பி, நீங்களும் தந்திடுவீர்கள். இவற்றைப் பெற்ற அந்த தீயவர்கள், உங்கள் இணைய சேவை மற்றும் தளங்களுக்கான பாஸ்வேர்ட்களை முற்றிலுமாக மாற்றி, உங்களை அலைக்கழிப்பார்கள். அல்லது குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி கேட்டுக் கொள்வார்கள். நீங்கள் பணம் செலுத்தியவுடன், பணத்தை எடுத்துக் கொண்டு, வங்கிக் கணக்கைத் தொடராமல் விட்டுவிடுவார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும், உங்கள் இணைய சேவை பாதிக்கப்பட்டிருப்பதனை அறிவிக்கவும். ஏனென்றால், அவர்களுக்கு உங்கள் யூசர் அக்கவுண்ட்டிலிருந்து போலியான தகவல்கள் அனுப்பப்படலாம். அடுத்து, உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனத்திடம், உங்கள் அக்கவுண்ட் முடக்கப்பட்டிருப்பதனை அறிவித்து, அதனை முடக்கி, பின் மீண்டும் நீங்கள் பயன்படுத்தும் வகையில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைப் புதியதாக அமைக்கும் வசதியைக் கேட்டுப் பெறவும். பெரும்பாலான இணைய சேவை நிறுவனங்கள் இது போன்ற அவசர உதவியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, நமக்கு உதவும்.

பொதுவாக, இணைய தளங்கள் இது போன்ற தகவல்களைக் கேட்டுப் பெறுவதில்லை. எனவே, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டால், அந்த தளத்தினை, அஞ்சலில் தரப்பட்ட லிங்க் வழி அணுகாமல், நேரடியாக இணையம் வழி அணுகி, அப்படிப்பட்ட தகவல் தரப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.



மவுஸ் பாய்ண்ட்டர் தானாகச் செயல்படுதல்:


TLqMY30.gif



 சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், உங்கள் மவுஸ் பாய்ண்ட்டர் தானாக நகர்ந்து சென்று, சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பட்டால், நீங்கள் வைரஸ் புரோகிராமினால் மாட்டிக் கொண்டீர்கள் என்பது உறுதியாகிறது. பொதுவாக ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட்டால், மவுஸ் தாறுமாறாகச் செயல்படும். ஆனால், இவ்வாறு ஆப்ஷன் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பட்டால், அது நிச்சயம் வைரஸ் புரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். இவை பெரும்பாலும், சில புரோகிராம்களையே இன்ஸ்டால் செய்திடும். நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் விட்டு வைத்திருக்கையில், அதனை இயக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பார்க்க நேர்ந்தால், கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்கவும்.

பின்னர், ரெஸ்டோர் வழியில் சென்று, கம்ப்யூட்டரைச் சரிப்படுத்தவும். அதற்கு முன்பாக, இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், உங்கள் அனைத்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை மாற்றவும். நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால், உடனடியாக காவல் துறைக்குத் தெரியப்படுத்தி, சைபர் கிரைம் பிரிவு வழியாகத் தீர்வு காணவும். வங்கிக் கணக்கின் இணைய சேவையினை நிறுத்தி வைக்குமாறு, வங்கிக்கு கடிதம் தரவும்.

 

எதிர்பாராத சாப்ட்வேர் பதிவு: 




கம்ப்யூட்டரில் நாம் எதிர்பாராத நிலையில் புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று பதியப்பட்டுள்ளதாகத் தெரிகிறதா? நிச்சயமாக, அது வைரஸ் புரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். அல்லது, நீங்கள் பதிந்த புரோகிராம் நிறுவனமே, இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராமினை பதிந்து வைக்கும். நீங்கள் பயன்படுத்திய முதல் புரோகிராமினைப் பதிகையில் தரப்படும் நிபந்தனைகளில், இது போன்ற தேவைப்படும் புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் பதிவதற்கான அனுமதியை, நீங்கள் அறியாமலேயே பெற்றிருக்கும்.



செயல் இழக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர்: 




நம் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர் ஆகியவற்றை நாம் அணுக முடியாமல் உள்ளதா? அல்லது அவை செயல் இழந்து உள்ளனவா? நிச்சயமாக, கம்ப்யூட்டர் நம் கட்டுப்பாட்டினை விட்டுப் போய்விட்டது. உடனடியாக, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, மேலே தரப்பட்டுள்ள அனைத்து வழிகளையும் மேற்கொள்ளவும். பின்னர், ரெஸ்டோர் வழியாகக் கம்ப்யூட்டரை முந்தைய நாள் ஒன்றுக்குக் கொண்டு செல்லவும். இதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


வங்கிக் கணக்கில் பணம் குறைகிறது: 


நிச்சயமாய் நம் இணைய வழி வங்கி சேவையினைப் பயன்படுத்தி, ஹேக்கர் செய்திடும் வேலை தான் இது. பெரும்பாலும், நம் அக்கவுண்ட்டில் உள்ள அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும். வெளிநாட்டு வங்கி மூலம், அந்நாட்டுக் கரன்சிக்கு மாற்றி உங்கள் பணம் எடுக்கப்பட்டிருக்கும். 

உடனடியாக, வங்கி, காவல் துறைக்கு இதனைத் தெரியப்படுத்தி, உடனடி நடவடிக்கைக்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். சில வங்கிகள், இது போன்ற நிகழ்வுகளில், நமக்கு இழப்பீடு தரும் வகையில் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொண்டிருக்கும். இருந்தாலும், எச்சரிக்கை நடவடிக்கை தேவை.


இணையக் கடைகளிலிருந்து குற்றச் சாட்டு:


சில வர்த்தக் இணைய தள நிறுவனங்களிடமிருந்து நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு ஏன் இன்னும் பணம் செலுத்தவில்லை; தவணைப் பணம் செலுத்தவில்லை என அஞ்சல் மற்றும் கடிதங்கள் வரும். நிச்சயமாய், உங்கள் கம்ப்யூட்டர் கைப்படுத்தப்பட்டு, அதன் மூலம், மிகப் பெரிய அளவில் பொருட்கள் வாங்கப்பட்டு, அவை உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாமல், வேறு ஒரு முகவரிக்கு அனுப்பப் பட்டிருக்கும். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு செயலாக இருக்கும். முதலில், இணைய தள நிறுவனத்தில் நம்பிக்கையை உருவாக்கி, பின்னர், மொத்தமாக நம் அக்கவுண்ட்டில் பொருட்களை வாங்கி இருப்பார்கள். சில இணைய தளங்கள், தவணை முறையிலும் பொருட்களைத் தருவதால், இந்த ஏமாற்று வேலை, திருடர்களுக்கு எளிதாகிறது. இது தெரிந்தவுடன், உடனடியாக வங்கி இணைய சேவையின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை மாற்றவும். வங்கி, காவல்துறைக்கு தெரியப்படுத்தி, நடவடிக்கை எடுக்கச் சொல்லவும்.

மேலே சொல்லப்பட்ட திருட்டு நடவடிக்கைகள் மூன்று கட்டமைப்புகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அவை, சரி செய்யப்படாத பிழைக் குறியீடுகள் கொண்ட சாப்ட்வேர் புரோகிராம், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் புரோகிராமினை இயக்குதல் மற்றும் திருட்டு மின் அஞ்சல்களுக்கு உடன்பட்டு செயல்படுதல் ஆகும். இந்த மூன்று விஷயத்திலும் நாம் சற்றுக் கவனமாக இருந்தால், நம் கம்ப்யூட்டர் முடக்கப்படுவதனை, நம் பணம் திருடப்படுவதனைத் தடுக்கலாம். நமக்கு இதெல்லாம் நடக்காது என்று மெத்தனமாக இல்லாமல், தொடர்ந்து விழிப்புடன் இருப்பதே, இத்தகைய நிலைகளைத் தடுக்கக் கூடிய வழிகளாகும்.