Friday, February 28, 2014

புதிய கோள்கள்


கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புரிந்து வருகிறது.. 'இந்த ஆராய்ச்சிதான் நாங்கள் கனிம வளங்கள் நிறைந்த,செல்வச்செழிப்பான,மனிதர்கள் வாழத்தகுந்த புதிய கிரகங்களை கண்டறிய உதவி புரிந்தது' என்று நாசாவின் விண்வெளி ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். அப்புதிய 715 கோள்களும் 305 வெவ்வேறான நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன.

இந்த புதிய கண்டுபிடிப்பால் கிட்டதட்ட இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது. முதல் கிரகம் 1995ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய கிரகங்களில் 95 சதவீத கோள்கள் பூமியை போன்றே பரப்பளவு, தண்ணீர், நிலப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அங்கு மனிதர்களின் வாழ்க்கை ஆதாரத்திற்கான நிலைமை நிலவுவதாக கூறப்படுகிறது.

மின்னணுக் கழிவுகள்

கணினி, தொலைக்காட்சிப் பெட்டி, வானொலி, தொலை நகலி, கால்குலேட்டர், தொலைபேசி, செல்போன், ரிமோட், கைக்கடிகாரங்கள், பிசிபி(பிரிண்டட் சர்க்யூட் போர்டு) எனப்படும் எலக்ட்ரானிக் போர்டுகள், அச்சிடும் கருவிகள் (பிரிண்டர்), எம்பி3 பிளேயர், கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் காலாவதியான கழிவுகள் மின்னணுக் கழிவுகள் ஆகும். மேலும் பயன்படுத்த முடியாத செயலிழந்த மின்கலங்களையும் (பேட்டரி) இவற்றுடன் சேர்க்கலாம்.

Posted Image

உலக நாடுகளிடையே சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குவது, தனது நாட்டில் சேரும் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறுசுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். ஆனால் பல வளர்ந்த நாடுகள் அவ்வாறு செய்யாமல், வேறு நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளன.

வளர்ந்த நாடுகள் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக்கொண்டு, இந்தியா போன்ற நாடுகளுக்கு செயல் திறன் குறைந்த கணினிப்பொருள்களையும், பிற மின்னணுப் பொருள்களையும் அனுப்பி விடுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளால் மின்னணுக் கழிவுகள் சேருவது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கும் விலை மலிவான மின்னணுப் பொருள்கள் இந்தியாவுக்குள் அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்னையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் ஈ வேஸ்ட்டை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Posted Image

2011ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் மட்டும் 28,789 டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளதாகவும், இதில் கம்ப்யூட்டர் கழிவுகள் மட்டும் 60 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. பெரும்பாலும் மின்னணுக் கழிவுகளை அகற்றுவதில் காயலான் கடைகளே முக்கிய இடம் பெற்றுள்ளன. அக்கடைக்காரர்கள், எலக்ட்ரானிக் பொருள்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களைப் பிரித்தெடுத்து விட்டு மற்றவற்றை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறமாக வைத்து எரித்து விடுகின்றனர்.



Posted Image

மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகப்பொருள்கள் கிடைப்பதால் காயலான் கடைக்காரர்கள் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு எரிப்பதால் வெளியாகும் டையாக்சின் நச்சுவாயு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம், கேட்மியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் வெளியாகின்றன. இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

முறையற்ற வழிகளில் இதுபோன்று மின்னணுக் கழிவுகளை அழிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நாம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. ஈ வேஸ்ட்டில் வெறும் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னணுக் கழிவுகள் போன்றே காலாவதியான மின்கலம் (பேட்டரிகள்) மூலமும் அதிக ஆபத்து ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு லட்சக்கணக்கான பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. அவற்றை ஒதுக்கும் முறையைப் பற்றி இதுவரை எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை.

பேட்டரியை பயன்படுத்திய பின்னர் அவற்றை குப்பையில் எறிந்து விடுகின்றனர். இதனால் குப்பைகளில் தேங்கும் பேட்டரிகளின் உலோகத் துகள்களானது, நிலத்துக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. அதுபோல் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை மொத்தமாகச் சேர்த்து வைத்து எரித்து விடுகின்றனர்.

மின்கழிவுகள் மற்றும் மின்கலங்களை எரிப்பதால் ஏற்படும் நச்சு வாயுக்களால் புற்றுநோய், நுரையீரல் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

மின்கழிவுகளைப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களே மறுசுழற்சி செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் முறையற்ற மறுசுழற்சி முறை தொடர்ந்த வண்ணம் உள்ளது.


சமுதாயத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கவுள்ள இக்கழிவுகளைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்த கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்துவதே எதிர்காலத்திற்கு நன்மை தரும். 

Thursday, February 27, 2014

சமையல் குறிப்புகள்

Posted Image


இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.


"சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.

கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.

வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.

தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.


தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும் 

Tuesday, February 25, 2014

விசா பெறுவது எப்படி?


வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை.

ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.இந்த தகவல்களை எல்லாம் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம்
*
(http://www.visamapper.com/ )*இணையதளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமால் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவல்களை இந்த தளம் தருகிறது. அதுவும் எப்படி, அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைப்படத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது. இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இண்ட வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளீர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞசள் வண்ணம் என்றால் அன்லைனில் விண்ணபிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிறகான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான்.

அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே ,பயனாளி எந்த நாட்டின் குடிமகன் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது ,இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?


அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ’நான் இந்த நாட்டு குடிமகன்’ என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன என்ற தகவலையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று இது ஒரு வழிகாட்டி தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகார்பூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.


இதே போலவே விசாமேப்.நெட்

*(http://www.visamap.net/*எனும் இணையதளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்கள் உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும். 

Sunday, February 23, 2014

யாரை அணுகுவது?

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்
கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும்கல்லூரி)

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை
அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4. டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.

5.பான் கார்டு!

PAN-card

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை:

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்!

passport



யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:

15 வேலை நாட்கள்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்

நகைச்சுவை !!

கடந்த சில நாட்களாக பேஸ்புக்கை கலக்கி வரும் ஒரு நகைச்சுவை !!

சோனியா, மன்மோகன்சிங், சிதம்பரம் மூவரும் விமானத்தில் செல்லும்போது

சோனியா :- ஒரு நூறு ரூபாயை கிழே போட்டு நான் ஒரு ஏழை இந்தியனுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.

அடுத்து மன்மோகன் :- இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளை கிழே போட்டு நான் இரண்டு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.

அடுத்து நம்ப சிதம்பரம்:- நூறு ஒரு ருபாய் காசுகளை கிழே போட்டு நான் நூறு ஏழை இந்தியர்களுக்கு நன்மை செய்து இருகிறேன் பாருங்கள் என்றார்.
அப்போது விமான ஒட்டி சொன்னார் :- இப்போ உங்க மூவரையும் கிழே போட்டு 125 கோடி இந்தியர்களுக்கு நன்மை செய்கிறேன் பாருங்கள் என்றார்.

1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984ல் தில்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்ட “கலவரங்களும்”,  2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் முற்றிலும் வேறானவை  என்று அண்மையில் டைம்ஸ்  நவ் தொலைக்காட்சிக்கு அளித்த  நேர்காணலில் காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.  இந்த  இரண்டு நிகழ்வுகளிலும் காங்கிரஸ், பாஜக அரசு நடந்து கொண்ட விதமும் முற்றிலும் வேறானது என்றும் அவர் கூறினார்.
அவர் கூறியது உண்மை தான்.  கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள்.
1984_vs_2002_Tamil

இந்து மதம்

தண்ணீர்


நமது உடலின் உறுப்புகள் சீராக செயல்பட ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள ஒவ்வொரு இயக்கத்திற்கான பணியையும் சிறப்பாக செய்து முடிக்க தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது. குடிக்கும் தண்ணீரில் ஏலக்காய் தோலையோ, ஆரஞ்ச் தோலையோ போட்டு வைத்தால் தண்ணீர் வாசனையாக இருப்பதோடு, அதில் கலந்துள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளும் கொல்லப்படும்.

சாப்பிடும் முன்:

சாப்பிட உட்காரு முன், தேவையான அளவு சூடு செய்த தண்ணீரை ஒரு டம்ளர் குடிக்கலாம். அந்த மாதிரி சாப்பிட்ட பின்னும் ஒரு டம்ளர் வெந்நீர் குடிங்க, அந்த வெந்நீர் வெது, வெதுப்பாக இருக்க வேண்டும். அதுக்காக நாக்கை சுடும் அளவுக்கு தண்ணீர் குடிக்க கூடாது. இந்த வெந்நீர் வைத்தியத்தால் பல ஆச்சரியமான உண்மைகள் இருக்கும்.
1. சாப்பிடுவதற்கு முன்பு குடிக்கிற வெந்நீர் நம்முடைய வயிறு நிரம்பிய மாதிரி ஒரு திருப்தியைக் கொடுக்கும். ஸ்வீட், காரம் என்று பிடித்த பண்டங்களை பேச்சு வாக்கில் சாப்பிட கூடாது. வடையோ, பாயாசமோ எது சாப்பிட்டாலும் கொஞ்சம் போதும்னு சொல்ல வைக்கும் சக்தி வெந்நீருக்கு உண்டு.

2. அது மட்டுமில்லாமல், இந்த வெந்நீர் வைத்தியம் பண்றதாலே நாக்கு வழவழப்பு, வாய் துர்நாற்றம், தொண்டைக் கரகரப்பு, முகத்துல வர்ற பரு, கரும்புள்ளிகள் எல்லாம் மறைந்துவிடும். உள்ளே சுத்தமாக இருந்தா வெளியேயும் சுத்தமாக இருக்கலாம். இதுக்காகத் தான் அந்த காலத்தில் சுமங்கலி பூஜையின் போது சாப்பாட்டு இலைக்குப் பக்கத்திலே சுக்கைத் தட்டிப்போட்டு வெந்நீரை வச்சுடுவாங்க.

3.நாம் தினமுமே இப்படி வெந்நீர் குடிக்கலாம். அவ்வாறு குடித்து வந்தால் உடல் சீரான இயக்கத்தோடு செயல்பட்டு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.



குளிர் நீர் குடித்தால் எடை கூடுமா?


அப்படியெல்லாம் இல்லை. குளிந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும் அதை நம் உடல், தன்னுடைய வெப்பநிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால், கொழும்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இது தான். வெந்நீரை தனது வெப்பநிலைக்கு மாற்றும் வளர்ச்சிதை மாற்ற இயக்கம் அதிகரிப்பதால், உடலில் கொழுப்பு தங்குவதில்லை.





யாருக்கு தண்ணீர் கூடாது?

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதய நோயாளிகளுக்கு (இதயத்தின் சுருங்கி விரியும் தன்மை 30க்கு குறைவானால்) நாளொன்றுக்கு ஆயிரம் மி.லி. தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். கிட்னி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பின் தீவிரம் பொறுத்து தண்ணீரின் அளவு 500 மி.லி. வரை குறைக்கப்படவும் கூடும். தண்ணீரை அதிகம் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது உடலை சுத்தப்படுத்துவது. அதுமட்டுமல்லாமல் செரிமானம் குறைவாக ஏற்பட்டால், ஒரு நாளைக்கு கூடுதலாக இரண்டு டம்ளர் குடித்தால் ஜீரணம் நன்றாக நடைபெறும்.

அதிலும் தினமும் காலையில் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். மேலும் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனை கலந்து குடித்தால் உடலுக்கு நல்லது. இன்றைக்கு பெருபாலானோர் மலச்சிக்கல் பிரச்னையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு மருத்துவ செலவு இல்லாமல் வைத்தியம் பார்க்க நினைப்பவர்கள் ஒரு டம்ளர் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்துவிடும். வயிற்றில் நிறைய கழிவு பொருட்கள் குடலில் தங்குவதால் தான் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். 

அப்போது சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். ஏனெனில் சுடு தண்ணீர் உணவு பொருட்களை எளிதாக உடைக்கும் தன்மை கொண்டது. அதனால் குடலில் தங்கிவிடும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, குடலை நன்கு வேலை செய்ய வைக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு பிரச்னைகள் நீங்கும். மேலும் நிபுணர்கள் பலர் உடல் எடையை குறைக்க வேண்டுமானால் ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஊற்றிக் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

நாம் சாப்பிடும் உணவு பொருட்களை எளிதில் உடைப்பதால், உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்கும். அதிலும் சாப்பிட்ட பிறகு சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். எலுமிச்சை சாறு சேர்ப்பதற்கு காரணம், அதில் உள்ள நார்ச்சத்து, அடிக்கடி ஏற்படும் பசியை கட்டுப்படுத்தும். இருமல் மற்றும் சளியின் காரணமாக தொண்டை மிகவும் வலி ஏற்படும். அப்போது சுடு நீரை குடித்தால் வலி குறையும். நீர்மமாக உள்ள சளி கட்டியாகி, எளிதில் வெளியேறிவிடும்.சுடு தண்ணீரையோ அல்லது சூடான பொருட்களையோ சாப்பிடும் போது அதிகமாக வியர்க்கும். 

ஏனெனில் சூடான பொருள் உடலில் செல்லும்போது, உடலில் வெப்ப நிலை அதிகரித்து, உடலை குளிர்ச்சி ஆக்குவதற்காக வியர்க்கிறது.வியர்வையால் சருமத்தில் இருக்கும் செல்களில் உள்ள அதிகமான தண்ணீர் மற்றும் உப்பு, உடலில் இருந்து வெளியேறிவிடுகிறது. எப்போது சுடு தண்ணீரை குடிக்கிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைந்து, ரத்த குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது