Thursday, January 21, 2016

சோதிடர் ரவிச்சந்திரனின் சோதிடபாமாலை



  1. ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
    இந்த பிளக்ஸ்பாட்டை உருவாக்கிய எனது பெயர் ரவிச்சந்திரன் எனது முழுவிபரம் பின்வருமாறு.
    ப.ரவிச்சந்திரன்
    M.SC,MA, BEd
    ஆசிரியர் & சோதிட ஆய்வாளர்
    ஓம் சக்தி ஜோதிட நிலையம்
    கறம்பக்குடி,
    புதுக்கோட்டை மாவட்டம்
    செல் : -.97 151 89 647
    My Email.Id ; masterastroravi@gmail.com
    My website.visit hear
    AstroRavichandransevvai.blogspot.com
    My facebook link. Please click hear
    m.facebook.com/ ravichandran3538039
    My facebook group .click hear
    சோதிடர்ரவிச்சந்திரனின் சோதிடபாமாலை
    My facebook page
    சோதிடம் அல்லாத வாழ்விற்கு தன்னம்பிக்கையூட்டும் செய்திகளை படிக்க.முகநூல் பக்கத்தில் "வாழ்வியல் சிந்தனைகள் " என்ற பக்கத்தினை தேடி லைக் செய்து இணைந்திடுங்கள்.
    My facebook page.search it and like it.
    கவிதை படிக்க விருப்பமுள்ள கலை ரசிகர்களுக்கு முகநூல் பக்கத்தில் "கவிதை நான் சொல்லவா ? " -என்ற பக்கத்தினை தேடி லைக் செய்யவும்.
    தங்களது ஜாதகத்தில் உள்ள கிரக நிலை நன்கு ஆராய்ந்து பலன் பெற விரும்புவோர்கள் செல்லில் தொடர்பு கொள்ளவும்.நேரில் வந்து சாதகம் பார்க்க இயலாதவர்கள் தங்களது சாதக விபரங்களை மேற்கண்ட செல் எண்ணில் உள்ள வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது மெஸேன்சர் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாக சாதகத்தினை அனுப்பி பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.விருப்பமுடையோர் தொடர்பு கொள்க.
    My bank Account detail
    P.Ravichandran
    Bank ;  I. O.B
    Branch : Regunathapuram
    Account no ; 105201000004608
    IFS CODE : IOBA0001052
    MICR NO : 622020016
  2. DEC
    25

    ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
    "சாதக கட்டத்தில் கிரகங்களின் பார்வையால் மானிட வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
    ஒருவருடைய சாதக கட்டத்தில் பணிரெண்டு ராசிகளில் தந்தைக்காரகன் எனப்படும் சூரியனும் ,சூரிய பகவானின் மைந்தனான சனி பகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் சாதக அமைப்பை பெற்றவர்களின் தந்தை, மகன் உறவுநிலை சரியாக அமையாது.அவர்களுக்கிடைய சிறிய வெறுப்புணர்வு இருக்கும்.சில நேரங்களில் சுபரின் பார்வை மற்றும் ஓன்பதாமிட அதிபதியின் வலு ஆகியவற்றைப்பொறுத்து மேற்கண்ட பலன் மாறுபடலாம்.
    இதேபோல சனி பகவானை குரு பகவான் பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் சனியின் ஆதிக்க பண்பு குறைந்து  குருவின் ஆதிக்கப்பண்பை  பெற்றுவிடுவார்கள்.நல்ல குணங்களே மேலோங்கி இருக்கும்.
    மாறாக சனி பகவான் ,                                    குரு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் குரு ஆதிக்கப்பண்பு குறைந்து சனி பகவானின் ஆதிக்கப்பண்பே மேலோங்கி நிற்கும்.இதேபோல குருவும் ,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமலே இருத்தல் நலம்.
    அடுத்து "சனி பகவானும் ,செவ்வாய் பகவானும் சேர்ந்து ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது அந்த ஸ்தானத்திற்குரிய ஆதிபத்திய பலனை மாற்றி பாதிக்கவைத்துவிடும்.
    உதாரணமாக "சனியும் செவ்வாயும் சேர்ந்து நான்காமிடத்தை பார்க்கும்போது அவனை காம எண்ணம் மிகுந்தவனாக மாற்றிவிடும்.
    இதேபோல இரண்டாமிடத்தில் பார்த்தால் அவனது பேச்சில் சுத்தம் இருக்காது.ஏழாமிட பார்வை மனைவி அமைவது கால தாமதமாக்கிவிடுவதோடு மனைவியின் குணநலத்தையே(காம எண்ணம் மிகுந்தவளாக) மாற்றிவிடும்.இப்படியாக பார்க்கப்படும் ஸ்தான மற்றும் பார்க்கப்படும் கிரக குணநலன்களையே மாற்றிவிடும்.
    .இதேபோல சனியும் செவ்வாயும் சமசப்தமாகவும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.இவ்வாறு பார்த்துக்கொள்ளும்போது வாகன விபத்துக்களை தந்து இரத்தம் கசிந்து எலும்பு முறிவு போன்றவற்றை செவ்வாய் திசை சனி புத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ நிகழ வாய்ப்புண்டு.எத்சரிக்கையாக இருத்தல் நலம்.
    அடுத்து சனி பகவானும் ,புதன் பகவானும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் புதன் பகவான் தரக்கூடிய கணிதம்,எழுத்து ,கவிதை ,ஜோதிடம் போன்ற நுணுக்க விஷயங்களை தரவிடாமல் செய்துவிடுகிறது.
    அதிலும் புதன் மற்றும் சனி பகவான் இருவரும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது சாதகரை அலித்தன்மை உடையவராக ஆக்கிவிடுகிறது.
    குரு பகவானும்,சந்திர பகவானும் பார்த்துக்கொள்ளும்போது "குரு-சந்திர யோகத்தை தருகிறது.இந்த யோகம் தர இரு கிரகங்கள் சேர்ந்து இருக்கும் வீட்டின் அதிபதி மறைவு,நீசம் ,அஸ்தனம் போன்ற பலவீனமான அமைப்பை பெறக்கூடாது.மேலும் ராசியை பொறுத்து இரண்டில் ஒன்று பாதாகாதிபதியாகவோ ,மாரகாதிபதியாக இருக்ககூடாது.
    அடுத்தபடியாக " காம கிரகம் மற்றும் ஆண்,பெண் இருபாலருக்கும் களஸ்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருவரும் பார்த்துக்கொள்ளும்போது காம எண்ணம் மிகுதியாக்கிவிடுகிறது.
    மனதுக்காரகன் எனப்படும் சந்திர பகவானை  ,சுக்கிர பகவான் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது காமம் சம்பந்தப்பட்ட கற்பனை மிகுதியாக இருக்கும்.ஒரு சிலர் காம கதை ,கவிதை ,சினிமா மற்றும் பாடல்கள் அமைப்பதற்கும் இவையே காரணம்.சுக்கிரன் உச்சம் ஆட்சி போன்ற பலம் பெற்றிருக்க வேண்டும்.
    ஒருவரது சாதகத்தில் சூரியனும்,சந்திரனும் சமசப்தமாக 180  பாகையில் சந்தித்துக்கொள்ளும்போது  "பொளர்ணமி யோகத்தை "வழங்குகிறது.இவர்கள் பொளர்ணமி நாளில் பிறந்திருப்பார்கள்.சில நேரங்களில் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காம எண்ணம் குறைவாகவே பெற்றிருப்பார்கள்.
    குரு பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கே அதிக பலன்களை தருவார்.பொதுவாக இருக்கும் இடத்திற்கு அதிக அளவு நன்மைகளை செய்யமாட்டார்.அதிலும் குறிப்பாக குரு தனித்து நின்றால் அந்த இடத்தை பாதிப்பார் என்பதால்தான் "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசம் என்பார்கள்".
    சனி பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கப்படும் இடத்தை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்.
    ராகு பகவான் ,கேது பகவான்  மற்றும் செவ்வாய் பகவான்,சனி பகவான், தேய்பிறைச்சந்திரன் மற்றும் பாவியோடு சேராத புதன்  பகவான் போன்ற இயற்கை பாவிகளால் பார்க்கப்படும் அந்த ஸ்தானமும்  அதில் உள்ள கிரகங்களின் தன்மையை எதிர்மறையாக மாற்றி  கெடுதல் செய்ய வைத்துவிடுகிறார்கள்.
    அதே நேரத்தில் இயற்கை சுபரான குரு பகவான்,சுக்கிர பகவான்,வளர்பிறைச்சந்திரன்,பாவியோடு சேராத புதன் பகவான் ஆகிய கிரகங்கள் பார்க்கப்படும் ஸ்தானமும் ,கிரகங்களும் பாவ கிரகங்களாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பாதிப்பை இல்லாமலோ அல்லது குறைத்தோ அதன் பலனை மாற்றி நேர்மறையாக மாற்றிவிடுகிறார்கள்.
    எனவேதான் மேலோட்டமாக ஒரு சோதிட பதிவை படித்துவிட்டு ஆகா எனது சாதகத்திலும் இதுபோன்ற அமைப்பு இருக்கிறதே என வருத்தப்படுவதோ அல்லது அவ்வாறு நடக்காமல் போகும்போது நீங்கள் கூறியது போல எனக்கு அந்த அமைப்பிருந்தும் கெடுதலான பலனை தரவில்லை ? என கேள்வி கேட்டு எதிர்வாதம் செய்வது தவறு.
    சோதிடர்களாகிய நாங்கள் பதிவுகளை பதிவிடும்போது ஒரு சாதக பலன்கள் கூறுவதற்கான எல்லா கோணங்களையும் ஒரே பதிவில் விளக்கிவிட முடியாது.
    ஒரு உதாரணத்தின் மூலமாக இவற்றை விளக்கிவிடுகிறேன்.சற்று பொறுமையாக மனதை இங்கு செலுத்தி படியுங்கள்.
    ஒரு பெண்ணிற்கு கற்பு ஸ்தானமான நான்காமிடத்தில் "சனி பகவானும்,செவ்வாய் பகவானும் சேர்ந்திருக்கும்போது அந்த பெண் காம எண்ணம் மிகுந்தவளாக ,தவறு செய்யும் ஆசையுடையவளாக இருப்பாள் என நான்  எனது பதிவில் பதிந்திருப்பது "பெது பலன்".நான் கூறிய இந்த பொதுப்பலனை மட்டும் வைத்துக்கொண்டு பெண் பார்க்கும் படலத்தில் அப்ளை செய்து (பதிலீடு ) பார்த்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் சாதகத்தில் நான்காமிடத்தில் சனி,செவ்வாய் சேர்ந்திருந்த பெண்ணை தேர்ந்தெடுக்காமல்  விட்டுவிடுவீர்கள்.
    ஆனால் அந்த பெண்ணை விசாரித்து பார்க்கும்போது நல்ல குணநலவாதியாகவும்,நன்கு கல்வி புலமை பெற்றவளாகவும் இருப்பாள்.நான் கூறிய பொதுப்பலனை மட்டும் தேடியதால் ஒரு நல்ல பெண்ணை சந்தேகம் கொண்டு தவிர்த்துவிடும் துரதிஷ்ட நிலைக்கு ஆளாகிவிடுவாய்.
    ஏன் நாலில் "சனி ,செவ்வாய் சேர்ந்திருந்தும் அந்த மாதிரியான பலனை தராமல் போவதற்கு சோதிட சூட்சுமம் அறிந்த சோதிடர்களுக்கு மட்டுமே புரிந்த சில
    "சிறப்பு காரணங்களும்" உள்ளது.
    அது என்னவெனில் சேர்ந்திருக்கும் இரு கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் நீசம் போன்ற பலவீனம் அடைந்திருருக்கலாம் அல்லது இரு கிரகங்களும் சுப நட்சத்திர காலில் நின்றிருக்கலாம் அல்லது குரு பகவான் போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருக்கலாம் அல்லது நான்காமாதிபதி ஆட்சி உச்சம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருக்கலாம்.இதுபோன்ற அமைப்புகளில் ஏதேனும் ஒரு அமைப்பை பெற்றிருந்தாலும்  அந்த பெண் நாலில் சனி செவ்வாய் சேர்ந்திருந்தாலும் நல்ல குணநலவாதியாக இருப்பாள்.
    எனவே "அன்பார்ந்த சோதிட ஆர்வலர்களே மேலோட்டமாக நாங்கள் பதியும் பதிவுகளை படித்துவிட்டு தவறான முடிவுகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.தவறான முடிவினை தாங்களே எடுத்துக்கொண்டு பிறகு சோதிடமே தவறு என இன்றைய கற்ற இளைஞர்கள் எதிர்விவாதம் செய்யாதீர்கள்.தங்களைப்போன்றே  கல்லூரியில் படிக்கும் காலங்களில் சோதிடம் என வாதம் புரிந்தவன்.
    எனது தாய் மாமவும்,சோதிடரும் ஆன மரியாதைக்குரிய கலியுகம்பிள்ளை அவர்கள் எனது சாதகத்தில் புதனும் ,குருவும் 
    உச்சம் ,ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் பிற்காலத்தில் பார் போற்றும் சோதிடராக வருவாய் எனவும் ,வாக்கு ஸ்தானத்தோடு ஞானக்காரகன் கேது பகவானின் தொடர்பு இருப்பதால் சோதிட சூட்சுமமும் பெறுவாய்.உனது வாக்கு பலிக்கும் என்பதை படிக்கும் காலம்வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. சோதிடம் கற்று தருகிறேன் என அழைத்த போதெல்லாம் மறுத்து வந்தேன்.
    எனக்கு திருமணமாகி ஒரு மாதம் கழித்து அவரே நோட்டு வாங்கிவந்து அதில் பிள்ளையார் சுழி போட வைத்து விநாயகர் சுலோகம் மனப்பாடம் செய்யவைத்து குரு தட்சனையாக பத்து ரூபாய் வாங்கி சென்றார்.அன்று மறுத்தவன் இன்று எனது முகநூலின் பக்கம்(Page) பகுதியில் மூன்றுபக்கங்களை திறந்து உள்ளேன்.
    அதில் 1) சோதிடர் ரவிச்சந்திரன் -இந்த பக்கத்தில்(Page) எனது சோதிடம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பதிவுகள் இருக்கும்.இதில் "கிரகங்கள் படுத்தும் பாடு " எனும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.விருப்பமுடையவர்கள் முகநூல் பக்கம் பகுதியில் தேடி லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
    2) கவிதை நான் சொல்லவா -எனும் முகநூலில் பக்கம்(Page) பகுதியில் கவிதைகள் பல பதிந்து வருகிறேன்.விருப்பமுடையவர்கள் லைக் செய்து இணைந்திடுவீர்.
    3) "வாழ்வியல் சிந்தனைகள்"-என்ற பக்கம்(Page)  சோதிடம் அல்லாத வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.விருப்பமுடையவர்கள் லைக் செய்து இணைந்திடுங்கள்
    இதுமட்டுமல்லாமல் முகநூல் குரூப்(Group) பகுதியில் "சோதிடர் ரவிச்சந்திரனின் சோதிடபாமாலை " என்ற குரூப்(group) ஆரம்பித்து "கற்றதையும்,பெற்றதையும் மற்றவர்களுக்கு பகிர்வோம்" எனும் கருத்தின் அடிப்படையில் சோதிட கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்
    இது மட்டுமல்லாமல் சோதிட ஆலோசனையை வீட்டிலிருந்தபடியே தங்களது சாதகங்களுக்கு போனின் மூலம் பலன்பெற விரும்புகிறவர்களுக்கு சோதிட பலன்களை கட்டண அடிப்படையில் பலன் கூறி வருகிறேன்.பலர் எனது வாட்ஸ்அப்  மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அல்லது போனின் மூலமாகவோ தொடர்புகொண்டு பலன்பெற்று வருகிறார்கள்.ஆசிரிய பணியோடு இப்பணியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது."
    படிக்கும் காலத்தில் சோதிட துறையை மறுத்தவன் என்னையறியாமலே இதில் என்னை நுழைய வைத்து இன்று முழுநேரம் சோதிடத்திற்கு செலவிட வைத்துவிட்டது.சோதிடம்  எவ்வளவு உண்மை  என்பதை எனது அனுபவத்திலிருந்து விளக்கவே மேற்கண்ட இன்றைய எனது நிலையை விளக்கினேன். படிக்க படிக்கவும் ,பலன் கூற கூறவும் அதன் சூட்சும விஷயங்கள் பரம்பொருளின் அருளால் எனக்கு புரிந்துவருகிறது.
    எனது ஒரே ஆசை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் அடிப்படையில் விளக்கி இது ஒரு அறிவியலின் ஒரு பிரிவு என புரிய வைக்கவேண்டும் என்பதே ஆகும்.
    வாழ்க நிறைவான ஆனந்தத்துடன்.நன்றி
    அன்புடன்,
    சோதிடர் ரவிச்சந்திரன்M.SC,MA,BEd
    சோதிட ஆய்வாளர்,
    முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
    ஓம் சக்தி ஜோதிட நிலையம்,
    கறம்பக்குடி,
    புதுக்கோட்டை மாவட்டம்
    தமிழ்நாடு.
    செல் : 97 151 89 647 (வாட்ஸ்அப் இதே எண்தான்)
    Email ; masterastroravi@gmail.com
    My facebopk link
    m.facebook.com/ravichandran3538039
  3. ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
    "ஒரு மனிதனின் சாதகத்தில் யோகமான அமைப்புகள் பல இருந்தாலும் அவை யோகங்களை தராமல் மாறாக அந்த திசை  முழுவதும் கஷ்டங்களை தந்துவிடுகிறது.அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக ஆராய்வோம்.
    ஒருவருடைய சாதக கட்டத்தில் சுபர்கள் என அழைக்கப்படும் குரு,சுக்கிரன்,வளர்பிறைச் சந்திரன் மற்றும் பாவியோடு சேராத புதன் போன்ற கிரகங்கள் கேந்திர ஸ்தானம் என அழைக்கப்படும் ஒன்று,நான்கு ,ஏழு மற்றும் பத்து போன்ற இடங்களில் அமர்ந்து ஆட்சி ,உச்சம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும்,சுப ஸ்தான ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும் அவை "கேந்திராதிபதி தோஷம் பெற்றுவிடுவதால் நன்மை செய்வதற்கு பதிலாக பாதகங்களையே செய்துவிடுகிறது.
    இதுபோன்ற அமைப்புடைய கிரகங்கள் மறைவு ஸ்தானங்களான ஆறு,எட்டு ,பணிரெண்டு போன்ற இடங்களிலோ அல்லது திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால்தான் அதன் திசை காலங்களில் நன்மையை செய்துவிடுகிறது.
    இதே சுபரான கிரகங்கள் ஒருவரின் சாதகத்தில் உபய ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம் போன்ற ராசிகளை தனது ராசியாக பெற்றவர்களுக்கு தனது ஏழாமிடமான மனைவி ஸ்தானமானது பாதகாதிபதி ,மாரகாதிபதி ஆகிய இரண்டையும் பெற்று இருப்பதால் அவை கேந்திரங்களிலும் அமர்ந்தால் மேலும் கேந்திராதிபதி தோஷத்தையும் பெற்றுவிடுகிறது.எனவே இதன் திசை காலங்களில் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் சாதகங்களை தருவதை விட பாதகங்களை அதிகமாக செய்துவிடுகிறது.எனவே உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை  பெற்றிருக்கிறது என மேலோட்டமாக பலன் கூறினால் உங்களது பலன் தவறாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு.
    இதில் நாம் இன்னும் தெரிந்த கொள்ளவேண்டியது என்னவெனில் உபய ராசிக்காரர்களுக்கு மனைவி ஸ்தானம் எனப்படும் ஏழாமாதிபதி ஏழிலே உச்சம் ,ஆட்சி போன்ற அமைப்பை பெறும்போது மேற்கண்ட மூன்று (பாதகாதிபதி,மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதி ) விதமான பாதிப்புக்கு உள்ளாகுவதால் இதுபோன்ற அமைப்புடையவர்கள் அவர்களுக்கு வரும் மனைவியால் தொல்லையே வர வாய்ப்பு உண்டு.இதில் லக்கனாதிபதி கெட்டு (பலவீனமடைந்து ) விட்டால் மனைவியின் கருத்தைக்கேட்டு நடக்கும் பொண்டாட்டிதாசர்களாகி
    விடுவார்கள்.
    .மாறாக லக்கனாதிபதியும் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றுவிட்டால் அங்கே "கிரக யுத்தம் " ஏற்பட்டு  நீ பெரியவனா ? நான் பெரியவளா ? எனும் கருத்து ஈகோ ஏற்பட வாய்ப்புண்டு.இருவரும் நன்றாக படித்திருப்பார்கள்.இருப்பினும் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் இடையே ஒரு அன்யோன்யம் ஏற்பட வாய்ப்பு குறைவு.இதுபோன்ற அமைப்பை தங்களது சாதகங்களில் பெற்றிருப்பவர்  நமக்கு சரியான மனைவி அமையாமைக்கு நமது கிரக அமைப்பே காரணம் என ஒருவர் தெரிந்துகொண்டால் அதனால் வரும் மனக்கஷ்டங்களிலிருந்து அலட்டிக்கொள்ளாமல் விதிப்பயன் என எண்ணி தாமரை இலை தண்ணீர் போல பற்றற்ற வாழ்வை மேற்கொள்ளலாம்.
    இதே போல ஒருவரது சாதக கட்டத்தில் பாவ கிரகங்கள் என அழைக்கப்படும் சனி,ராகு ,கேது ,பாவியோடு சேர்ந்த புதன் ,தேய்பிறைச் சந்திரன் போன்ற கிரக பகவான்கள் திரிகோணங்களில் அமராமல் கேந்திரங்களில் அமரல் சுபம்.மாறாக திரிகோணங்களில் அமரும்போது அதன் திசை, புத்தி காலங்களில் யோகத்தை செய்யாமல் தொல்லைகளையே வழங்கும்.
    அடுத்து மறைவு ஸ்தானம் என அழைக்கப்படும் ஆறு ,எட்டு ,பணிரெண்டு போன்ற ஆதிபத்திய  கிரகங்கள் ஒரு ஸ்தானங்களோடு சேரும்போதோ அல்லது பார்வை பெறும்போதோ  சேர்ந்திருக்கக்கூடிய கிரகங்கள் தனது சுயத்தன்மையை இழந்து அந்த ஸ்தானம் பாதிக்கப்பட செய்துவிடுகிறது.மேலும் இந்த மறைவு ஸ்தான கிரகங்களும்  இயற்கை பாவ கிரகங்களாக இருந்தால் அந்த ஸ்தான கிரகங்கள் என்னதான் உச்சம் ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் அதன் பலனை தர விடாமல் செய்துவிடுகிறது.மேலும் இந்த மறைவு ஸ்தானங்களில் சுப ஆதிபத்திய கிரகங்கள் இருந்தாலும் அக்கிரகங்களால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்க விடாமல் செய்துவிடுகிறது.
    லக்கனத்திலோ அல்லது லக்கனாதிபதியோட தொடர்பைப்பெறும்போது  அந்த சாதகனை நோய் ,கடன் மற்றும் எதிரி போன்றவர்களால் தொல்லையை தர வைத்துவிடுகிறது.மேலும் சாதகனை  லக்கன ஆதிபத்தியத்திற்கு உரிய குணங்களிலிருந்து அவனை மாற்றிவிடுகிறது.இன்னும் பாவியாக இருப்பின் அதிக இன்னல்கள்களை தந்துவிடும்.லக்கனாதிபதி மறைவு ஸ்தானங்களுக்கு சென்று குடியேறினால் சாதகர் சோம்பேறியாகவும்,சுறு சுறுப்பு தன்மை அற்றவராக மாறிவிடுவார்.
    இரண்டாமிடம் அதன் அதிபதி தொடர்பு மற்றும் சேர்க்கை பெறின் அவரை  தனம்,வாக்கு ,கல்வி ,குடும்பம் மற்றும் நேத்திரம் போன்ற ஸ்தனங்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.அந்த ஸ்தான கிரகங்கள் இயற்கை.பாவியாக இருப்பின் சிலருக்கு கால தாமத திருமணத்தை தந்துவிடுகிறது.
    இதேபோல மறைவு ஸ்தானத்திற்கு இதன் அதிபதிகள் சென்று மறைந்துவிட்டால் தன யோகம் சிறிதுமின்றி கஷ்டப்படுவார்.குடும்பத்தில் சிறுவயதிலிருந்து தங்காமல் விலகி இருப்பார்.
    நான்காமிடம் மற்றும் அதன் அதிபதியோடு மறைவு ஸ்தானதிபதிகள் தொடர்புகொண்டாலோ அல்லது பார்வை செய்தாலோ  ஒருவருக்கு தன் சுகம்,தாய் சுகம் ,உயர் கல்வியால் ஏற்படும் சுகம் மற்றும் வீடு ,வண்டி வாகனங்களால் பெறப்படும் சுகங்களை கெடுத்துவிடுவார்.மேலும் ஒருவரின் கற்பு ஸ்தானமாகவும் அமைவதால் அவை ஒருவரின் குணத்தை கெடுத்து விடும்.
    ஐந்தாமிடம் மற்றும் அதன்பதிகளோடு தொடர்பு மற்றும் சேர்க்கை பெறும்போதோ அல்லது இந்த மறைவு ஸ்தானங்களில் ஐந்தாமாதிபதி அமர்ந்து அவை இயற்கை பாவராக அமைந்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு புத்திரபாக்கியம் தடைபடும்.(புத்திரகாரகன் குரு பலம் பெற்றிருந்தால் பலம் மாறும்),மீறி புத்திரர்களே இருந்தாலும் அவர்களலால் சுகம் பெறும் யோகம் குறைவு, மேலும்
    பூர்வீக  மனையில் இல்லாமல் இருத்தல் நலம்.பூர்வீக சொத்து இல்லாமல் இருக்கும்.அப்படியே இருந்தாலும் அவை பிரச்சினையாக இருக்கும்.நல்ல புத்தி ,கற்பனை ,யுக்தி ,சிந்தனை தருவதற்கு பதிலாக சூழ்ச்சி ,வஞ்சகம் ,கபடம் மற்றும் காமம் போன்மவைகளை தரும்.அறிவில் சிறந்த சான்றோர்களோடு பழகுவதற்கு பதிலாக தரம் தாழாந்த மனிதர்களோடு பழக்கவழக்கம் ஏற்படும்.
    அடுத்து ஏழாமிடம் மற்றும் அதிபதிகளோடு மறைவு ஸ்தானங்கள் தொடர்பு மற்றும் சேர்க்கை பெற்றாலோ அல்லது மறைவு ஸ்தானங்களில் இதன் அதிபதிகள் அமர்ந்தாலோ ஒருவருக்கு தாமத திருமணம்தான் அமையும்.அவை இயற்கை பாவியாக அமைந்து விட்டால் மனை மற்றும் மனையால் வரும் சுகம் குறைவு.கற்ற மனைவியாக அமைவதும்,குணநலவாதியாகவும் அமர்வது சிரமம்.
    ஒன்பதாமிடம் மற்றும் அதன் அதிபதி இந்த மறைவு ஸ்தான அதிபதிகள் தொடர்பு சேர்க்கை பெறும்போதும்  அந்த சாதகர் தான தர்ம குணங்கள் இருக்காது.தந்தையால் எவ்வித பலனையையும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடுகிறது.சம்பாரிக்கின்ற பணம் தவறான வழிகளில் செலவாகிவிடும்.மேலும் ஒன்பதாமாதிபதி மறைவு ஸ்தானத்திற்கு சென்றால் (தந்தைகாரகன் சூரியனும் பலவீனம் அடைந்திருந்தால் ) தந்தை இருக்கமாட்டார்.சிறு வயதிலே இழந்திருக்க வாய்ப்புண்டு.அப்படியே இருந்தாலும் அவரால் எவ்வித பலனும் கிடைக்காது.வருமானம் ஏதுமின்றி தவிப்பர்.மேல்நிலை கல்வி பாதிக்கப்படலாம்.
    பத்தாமிடம் மற்றும் அதன் அதிபதிகள் மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளின் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றால் அரசுக்கு விரோதமான தொழிலில்  ஈடுபாடு  ஏற்படலாம்.அதிலும் மறைவு ஸ்தான கிரகங்கள் பாவிகளாக இருப்பின் குற்றங்களை கண்டறியும் போலிஸ்(பத்தில் செவ்வாயாக இருப்பின்),இராணுவம் மற்றும் வழக்கில் பிரச்சினையை தீர்க்க கூடிய  வழக்கறிஞராக ஆகலாம்.
    மேலும் பத்தாமாதிபதி மறைவு ஸ்தானங்களுக்கு சென்றால் கேந்திராதிபதி தோஷம் நீங்கி மறைவான லாட்டரி சீட்டு ,பைனான்ஸ் போன்ற உழைப்பில்லாத அரசுக்கு விரோத தொழில் உண்டாகும்
    பதினொறாமிடம் அதன் அதிபதிகள் மறைவு ஸ்தான அதிபதிகள் இடம்பெறும்போது தான் செய்கின்ற தொழிலில் லாப பங்கம் ஏற்பட்டுவிடும்.மூத்த சகோதர ஸ்தானம் பாதிக்கப்படும்.மேலும் பதினொறமிட அதிபதி மறைவு ஸ்தானத்திற்கு செல்லும்போது எவ்வித லாபங்களையும் தருவதில்லை.வெளிநாட்டு யோகம் தருவதில்லை.மூத்த சகோதரம் இருக்காது.
    மறைவு ஸ்தான அதிபதிகளான மூன்று ,ஆறாமிடம்,எட்டாமிடம் மற்றும் பணிரெண்டாமிட அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் விபரீத ராஜயோகத்தை தந்துவிடுகிறது.அதாவது தாம் சார்ந்த துறையில் எதிர்பாராத லாபம் ,பதவி உயர்வு போன்றவற்றை தந்துவிடுகிறது.இதுபோன்ற விபரீத ராஜயோகம் அமைப்பை பெற்றிருந்தாலும் அதற்குரிய மறைவு அதிபதிகளின் திசை நடந்தால் ஒழிய யோகத்தை தராது.சிலருக்கு அவ்வித திசைகளை தம் வாழ்வில் ஒருவர் சந்திக்க முடியாமல் அதாவது வராமலே போய் அந்த யோகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.
    இதேபோல ஒருவர் தனது சாதகத்தில் குரு -சந்திர யோகம்,தர்ம -கர்மாதிபதி யோகம்,குருமங்கள யோகம்,பிருகுமங்கள யோகம் மற்றும் பஞ்சமகா யோகங்களை பெற்றிருந்தாலும் அந்த யோகங்களை செய்ய முடியாதபடி அந்த கிரகங்களில் ஒன்று பாதகாதியாக அமைந்துவிடுவதால் அந்த யோகங்களை தராமல் செய்துவிடுகிறது.
    பாதகாதியானது
    சர ராசிக்கு -11-ம் அதிபதி
    ஸ்திர ராசி -9 ஆம் அதிபதி
    உபய ராசி - 7 ஆம் அதிபதி.
    உதாரணமாக மேஷ ராசிக்கு தர்ம-கர்மாதிபதி யோகத்தை பார்க்கும்போது ஒன்பதாம் அதிபதி குருவும்,பத்தாம் அதிபதி சனியும் இணைந்து அல்லது பரிமாறி அல்லது பார்வை பெற்றிருக்கும்போது தர்ம -கர்மாதிபதி யோகமெனிலும் சனி பகவானுக்கு பத்து மற்றும் பதினொன்று என இரு ஆதிபத்தியம் பெறுவதால் சர ராசிக்கு பதினொறாம் அதிபதி பாதாகாதிபதி எனும் மற்றொரு ஆதிபத்தியம் பெற்று யோகபங்கம் உண்டாகிவிடுகிறது.
    எனவே "யோகமான அமைப்புகள் ஒருவரது சாதகங்களில் இருந்தும் யோகம் செய்வதற்கு பதிலாக யோகபங்கம் ஏற்பட்டுவிடுகிறது ஏன் என ஆராய்ந்து பார்க்கும்போது இதுபோன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளது.அவை அனைத்தையும் ஒரே பதிவில் விளக்கினால் உங்களுக்கு புரியாமலோ அல்லது ஒருவித சலிப்பு தன்மையோ ஏற்பட்டு விடலாம் என்பதற்காக இப்பதிவை இத்துடன் நிறைவு செய்கிறேன்.
    (தங்களது சாதகங்களில் இதுபோன்று  கிரக ஆராய்சி செய்து போனின் வழியாக பலன்பெற விரும்புவோர்கள்  எனது வாட்ஸ்அப் (9715189647) மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி வழியாக தொடர்பு கொள்ளலாம்.கட்டணம் உண்டு )

  4. ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
        ஒருவரின் குணநலன்கள் அவரோடு சேர்ந்து இருக்கும் நபரின் தன்மையைப்  பொறுத்து மாறுபடுவதுபோல "கிரகங்களும் தன்னுடன் சேர்ந்துள்ள மற்ற கிரகங்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகின்றன்".
    நீரானது தான் சார்ந்துள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்றார்போல தனது தரம் மாறுவதுபோல மனிதர்களின் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடானது அவை சேர்ந்துள் கிரகங்களுக்கு ஏற்றார்போல மாறுபடுகிறது.
    ஒருவரின் சாதகத்தில் சூரியன் மற்றும் சந்திரன் தனித்தனியாக இருக்கும்போது அதன் காரகம் மற்றும் ஸ்தானத்திற்கு ஏற்றார்போல பலன்களை கொடுத்தலும் அவை இரண்டும் சேர்ந்து இருக்கும் போது "அமாவாசை யோகத்தை " வழங்குவார்.இவ்விதமாக அமாவாசையில் பிறந்தவர் திருடனாக இருப்பார் என ஒரு விதமான அபிப்ராயமும் மக்கள் மத்தியில் உள்ளது.இதற்கு காரணம் மனிதன் என்ற ரஜினி படத்தில் அமாவாசையில் பிறந்ததால் அவன் திருடனாகி  சிறைக்கு சென்று விட்டது போல படம் எடுத்திருப்பார்கள்.
    அந்த படத்தில் வரும் ஒரு பாடலில்
    "வானத்தை பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனிதனை இன்னும் பார்க்கலேயே ?
    உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க
    வெளியில் உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லைங்க !
    பலநாள் இருந்தேன் கருவறையில்
    சிலநாள் இருந்தேன் சிறையறையில்
    அம்மா என்னை ஈன்றது "அமாவாசையாம்"
    அதனால் பிறந்து தொல்லையடா
    ஆனால் என் மனம் வெள்ளையடா !
         என ஒரு பாடலும் அப்படத்தில் வைக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் இதுபோன்ற கருத்துக்கள் எளிதாக பரவியது.ஆனால் பொதுவாக சந்திரன் மனதை ஆட்டுவிப்பவர்.அவர் சூரியனுடன் சேரும்போது ஒரு சில மனக்குழப்பங்களை கொடுக்கும் என்பது மட்டும் உண்மை.
    இங்கு சூரியன் என்பவர் அப்பா,சந்திரன் என்பவர் அம்மாவின் காரகர் ஆவார்.இவ்விரண்டு கிரகங்களும் சேர்ந்து பணிரெண்டாம் இடத்தில் இருந்தால் அவை தரும் பலன்களை பின்வரும் பாடல் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
    "ஆறுமி ஆறு தன்னில் அம்புலி கதிரோன் சேர கூறுவாய் ஈனன் என்று கொடும்பிணி விரோதன் என்று சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதோடு
    வேறு  வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு "
    மேற்கண்ட பாடலிருந்து "சூரியன் பகவான் சந்திர பகவானோடு பணிரெண்டில் சேர்ந்து இருக்கும் காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தால் பாவம் சீரோடும் ,சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருந்த அம்மா மற்றும் அப்பா தனித்தனியாக பிரிந்து வாழ்வார்.அவர்களது செல்வமெல்லாம் குறைந்து போகும்.அவன் கெட்டவனாகவும் பெயரெடுப்பான்.பாவம் விதிப்பயனை  என்ன செய்வது ? -இப்படி ஒரு பிள்ளை பிறந்ததற்கு பிறக்காமலே இருந்திருக்கலாம்.
    இதே போல சூரியனும்,சந்திரனும் சேர்ந்து நான்கமிடத்தில் இருந்தால் அவர்களது குணத்தை கெடுக்கும்.
    இதேபோல் குருவும் ,சந்திரனும் சேரும்போது
    "குருசந்திர யோகத்தை" வழங்குவார்.ஆனால் குருவோ அல்லது சந்திரனோ பாதகாதிபதியாக வராமல் இருக்க வேண்டும்.
    குருவும்,சந்திரனும் சேர்ந்து ஏழில் இருக்க கூடாது.
    "பால்மதியும்,பரம குருவும் ஏழில் நின்றால் பாலகன் பிறந்த வீடு நாசமாகும்" எனவும்,
    "பாரப்பா இன்னமொரு புதுமைகேளு
    பால்மதியும் பரமகுரு ஏழில் நிற்க
    சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை செந்திருமால் தேவியுமோ விலகியுருப்பாள்"
           என புலிப்பாணி சித்தர் அருளிய பாடல்களின் சான்றுப்படியும் "குரு பகவானும்,சந்திரபகவானும் "ஏழில் இருபபின் அந்த வீட்டிற்கே ஆகாது.இதேபோல் குருவும் சந்திரனும் இணைந்த வீட்டின் அதிபதி பலமிழந்திருந்தாலும் மற்றும் அவற்றுடன் பாவிகள் சேர்ந்திருப்பினும் இந்த யோகம் வேலை செய்யாது.எனவே குருவும்
    சந்திரனும் சேர்ந்தாருந்தாலே உடனே ஜோதிடர்களாகிய நாம் குருசந்திர யோகம் என அள்ளி விட கூடாது இது போன்ற ஜோதிட சூட்சும விஷயங்களை ஆய்ந்தே நாம் பலனுரைக்க வேண்டும்.
    "தேவ குருவான பிரகஸ்பதியும் (குரு), அசுர குருவான சுக்கிராச்சாரியரும் ஒருவருக்கொருவர் பகைவர்கள்.எனவே இவர்களின் இணைவு பெற்ற திசைகள் நன்மை செய்வதில்லை.
    சனி பகவானும்,செவ்வாய் பகவானும் இணைந்து பார்க்கும் ஸ்தானங்களை பாதிக்கிறது.குறிப்பாக லக்கனத்தில் இணைந்திருக்கும் போது தன்னுடைய குணத்தை கெடுப்பதோடு இருவரும் இணைந்தே சம சப்தமாக ஏழாமிடத்தை பார்ப்பதால் மனைவி ஸ்தானத்தையும் பாதித்துவிடுகிறது.
    மேலும் லக்கனத்திற்கு எட்டில் இருந்து குடும்ப ஸ்தானத்தை பார்க்கும் தனம் ,வாக்கு ,படிப்பு மற்றும் குடும்ப ஸ்தானத்தை பாதிக்கிறது.
    இதேபோல் இவை இரண்டும் இணைந்து பார்க்கும் ஸ்தானங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் சனி திசை செவ்வாய் புத்தியிலோ அல்லது செவ்வாய் திசை சனி புத்தியிலோ எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.
    "இதேபோல சந்திர பகவானோடு சுக்கிரன் இணைந்து பத்து பாகைக்குள்ளாகவோ அல்லது சந்திரனும்,சுக்கிரனும் 180 பாகை வித்தியாசத்தில் ஏழாமிடம் அல்லது நான்காமிட தொடர்பு ஆண்/பெண் யாராக இருந்தாலும் காம உணர்வு மிகுந்து வேலி தாண்டிய வெள்ளாடு போலவும்,பல மலரை நாடி சுவைக்கும் வண்டு போல" ஆகுவார்.
    "சந்திரனுடன் ராகு பகவான் சேரும்போது மனக்குழப்பங்களும்,திருமண தடையையும் தரும்.தாய் ஸ்தானம் பாதிப்பு உண்டாகும்
    சந்திரனுடன் கேது பகவான் சேரும்போது ஆன்மீக நாட்டம் மிக்கவராகவும்,ஞானமுடையவராக்கும்.திருமண தடையை உண்டாக்கும்.தாய் ஸ்தானம்  பாதிக்கப்படும்
    சந்திரனுடன் சனி சேரும்போது திருமண தடை ,மனக்குழப்பம் உண்டாகும்.
    சந்திரனுடன் செவ்வாய் பகவான் சேர்திருக்கும்போது "சசிமங்கள யோகம்" எனும் யோகத்தை வாரி வழங்கி மனைவியால் யோகத்தை வாரி வழங்குகிறது.
    சுக்கிர பகவானோடு செவ்வாய் பகவான் சேரும்போது "பிருகு மங்கள யோகத்தை " அள்ளித்தருகிறது.காதல் திருமணத்தை கொடுக்கும்.
    சுக்கிர பகவானோடு ராகு /கேது இணைவுபெறும்போது சுக்கிரன் களஸ்திரகாரகனாதலால் திருமண தடையை உண்டாக்கும்.மேலும் வாகன காரகனாதலால் வாகனயோகம் பாதிக்கப்படும்.
    குரு பகவானோடு ராகு பகவான் இணையும்போது "குரு சண்டாள யோகத்தை "தந்து ஆன்மீக நாட்டமின்றி இருப்பர்.புத்திரபாக்கிய தடையை உண்டாக்குவார்.
    குரு பகவானோடு கேது சேரும்போது  தரும் பலனை பின்வரும் பாடலை கவனியுங்கள்
    "வல்லரவு தனித்திருந்து மறையவனோடு இசைஞானி மறுவக்காணில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவன் என இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான் போலும் "

    என பாடப்படுவதன் மூலம் குருவோடு கேது இணையும்போது ஏழாமிடத்தில் ராகு இருக்கும் (தனித்திருக்க வேண்டும்) போது ஆன்மீக நாட்டம் மிக்கவனாகவும்,தனம் மிக்கவனாக இருப்பான்.புத்திர தடையும் ஏற்படும்.
    "குரு பகவானோடு சனி பகவான் இணையும் போது ஆன்மீக சான்றோர்களாக்கி விடும்".
    "குரு பகவானோடு செவ்வாய் இணைவுபெறும் போது "குருமங்கள யோகத்தை" வாரி வழங்குவார்.இதன் பலன் நல்ல மனைவியும் ,மனைவியால் யோகமும் உண்டாகும்.
    "சூரியனோடு புதன் பகவான் இணைவு புத ஆதித்ய யோகம் எனும் சரஸ்வதி யோகத்தை வழங்கி பல பட்டங்களை பெறக்கூடிய கல்வி புலமையை தந்துவிடுகிறது ".
    மேலும் "விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டு நான்கு ஒன்றில் வளையக்கூடின் மன்னவனாம்"
    ஆம் புதனும் சூரியனும் இணைந்து எட்டு ,நான்கு மற்றும் ஒன்றில் இருந்தால் அந்த காலத்திற்கு மன்னன் ஆனால் காலத்திற்கு ஏற்றார்போல தற்பொழுது அரசு அதிகாரியாகலாம்.
    இந்த யோகத்தை சிறப்பாக பெற வேண்டுமெனில் இரண்டில் ஒன்று ஆட்சி உச்சம் போன்ற அமைப்பை பெறவேண்டும்.
    சில நேரங்களில் சூரியனோடு இணைந்த புதன் உச்ச வக்கிரம்,பாவிஇணைவு,பாதகஸ்தானம் மற்றும் நீசம் போன்ற அமைப்பை பெற்றால் மேற்கண்ட யோகம் வேலை செய்யாது.
    பாவியோடு சேராத புதன் யோகராக உள்ளார்.புதன் வலிமை பெற்று சுபரோடு சேரும்போது ஜாதகரை கணிதம்,ஜோதிடம் போன்ற துறைகளில் மிளிர வைப்பார்.
    புதனோடு சந்திர பகவான் சேரும்போது கதை ,கவிதை ,கட்டுரை எழுததூண்டி சிறந்த எழுத்தாளராக்குவார்.வேடிக்கையாக பேசுவதில் வல்லவராகி பேச்சாளராக்கும்.இசை நாட்டம் உண்டாக்கும்.
    அதேநேரத்தில் புதன் பகவானோடு பாவிகளான ராகு,கேது ,சனி போன்ற பாவிகள் சேர்க்கை பெறும்போது பாவராகி புதனுக்குரிய காரகத்தை எதிர்மறையாக செய்ய வைக்கும்
    சூரியனோடு பாவிகளான ராகு,கேது  பகவான் சேரும்போது தகப்பனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை.அரசாங்க யோகம் குறைவு ஏற்படலாம்.சம்பாதிக்கும் திறமை குறையும்.இங்கு சூரியன் என்பவர் அரசு கிரகமாகவும் ,தந்தைக்கு காரகரும் ஆவார்.
    மேலும் "சூரியன் என்பவர் தந்தை அவரது மைந்தன் சனி பகவானும் இணைந்திருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவுநிலை சரியாக அமையாது.
    சனியும் ,செவ்வாயும் இணைந்து நான்காமிடத்தில் இருந்தால் ஒருவரின் குணத்தை கெடுத்து காம எண்ணத்தை தூண்டும்.ஏழாமிடத்தில் இருந்தால் தாமத திருமணம் உண்டாகும்.
    எனவே ஒரு மனிதன் நல்லவரோடு பழகும்போது நல்லவனாகவும்,தீயவர்களோடு சேரும்போது தான் தீயவனாகி தீமை செய்வதுபோல கிரகங்களும் சுபரோடு சேர்ந்தால் நன்மையையும்,பாவியோடு சேரும்போது தீமையை தருகிறது என இதுவரை பார்த்தோம்.இவை அனைத்தும் கடந்த பல ஆண்டு ஆராய்சி செய்து பல ஜாதகங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்த பின்னரே மற்றவர்களும் பயன்பெறட்டும் என நோக்கோடு இங்கு பகிர்ந்துள்ளேன்.
    "இதேபோல தங்களது சாதகங்களில் உள்ள கிரக சேர்க்கைகள் பற்றியும் அதனால் பலன் உண்டா ? என தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அல்லது செல் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு.சிலர் போன் வழியாக ஒரு சில கிரகங்களை கூறி பலன் கேட்கின்றனர் இது தவறு தங்களது முழு ஜாதகம் பார்க்காமல் கூறும் பலன் தவறாக அமைந்துவிடும் எனவே இதுபோல் கேட்பவர்களை தவிர்த்துவிடுவதற்கு மன்னிக்கவும்.

  5. ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
    ஒரு மனிதன் அரசியலில்  ஈடுபட்டு மக்கள் போற்றும் மகத்தான அரசியல்வாதியாகும் யோகம் உண்டா ? என தெரிந்து கொண்டு அதற்கு பிறகு அரசியலில் தன்னை அர்பணித்துக்கொள்ளல் நலம் பயக்கும் .இதற்கு சிறந்த ஜோதிட புலமை பெற்ற ஜோதிடர்களை நாடி தமது சாதகத்தை நன்கு கோளாராய்சி செய்து அத்தகைய அமைப்பு தமக்கு உண்டு என உறுதி செய்து கொள்வது அவசியமாகும் .ஏனெனில் அரசியலும்,திரைப்பட துறையும் பேரும்,புகழும் சம்பாத்தியத்தோடு கிடைக்கும் பெரிய கனவு உலகம் ஆகும்.இந்த துறையில் நுழைந்து கொடி கட்டி பறந்தவர்களும் உண்டு,எல்லா சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தவர்களும் உண்டு.
    அரசியலில் தம்மை அர்பணிக்க விரும்புவர்கள் அரசியலில் எந்த விதமான யோகம் உள்ளது என தெளிவாக தெரிந்துகொள்ளல் அவசியம்.வெறும் கட்சி வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டு தொண்டன் என தன்னை காட்டிக்கொண்டு தனக்கும் பயன்படாமல் ,வீட்டிற்கும் பயன்படாமல் வாழும் நிலையா ?
    இல்லை அரசியலில் கீழ் மட்ட கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு தான் சார்ந்த கட்சி என்பதற்காக அவர்கள் செய்யும் நன்மை தீமைகளை டீக்கடையில் உட்காந்து கொண்டு வெட்டி பேச்சு பேசி வினயத்தை உண்டாக்கும் நிலையா?
    இல்லை பஞ்சாயத்து,ஊராட்சி,மாவட்ட அளவில் தலைவராகி மக்கள் சேவை செய்யும் நிலையா ?
    இல்லை ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக இருந்து தேர்தலில் சட்டமன்ற ,நாடளமன்ற உறுப்பினராகி அமைச்சராகும் நிலையா ? இல்லை ஒரு கட்சியை உருவாக்கி அதன் தலைவராகி பிறகு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர்,பிரதமராகி மக்கள் போற்றும் மகத்தான தலைவராகும் யோகம் உண்டா ? என நன்கு ஆராய்ந்து தெரிந்து கொள்ளல் நலம்.
    எனவே அரசாளும் யோகம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடு பல ஆண்டு நான் முயன்று பரம்பொருள் ஆசியுடன் பெற்ற சோதிட ஞானத்தை பல மணி நேரம் செலவழித்து உங்களுக்காக பதிவிடுகிறேன் படித்து பயன்பெறுங்கள்.
    அரசியல் யோகம் தரும் கிரகங்களில் முக்கியமான மூன்று கிரகங்கள் சூரிய பகவான்,சனி பகவான் மற்றும் ராகு பகவான் ஆகும்.இவை ஒருவருடைய ஜாதகங்களில் கேந்திர ,திரிகோணமேறி பலம் பெற்றிருக்க வேண்டும்.
    இதற்கு அடுத்த நிலை பெறும் அரசியல் யோகம் தந்து நிர்வாகிக்கும் திறனை அளிக்கக்கூடிய கிரகங்கள் புதன் பகவான்,சுக்கிர பகவான்,துணிச்சலான முடிவெடுக்க கூடிய செவ்வாய் பகவான் மற்றும் அரசியல் தந்திரத்தை அளிக்கக்கூடிய கேது பகவானின் நிலைகளையும் கவனிக்கப்பட வேண்டும்.
    தொழில் ஸ்தானம் என சொல்லப்படும் பத்தாமிடத்தில் ராகு பகவான் இருந்து உச்சம் பெற்று குரு பகவானின்  பார்வையைப்  பெறும் அமைப்பை பெற்றவர்களுக்கு அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெறும்
    யோகம் உண்டு.இவர்களுக்கு தமது வாழ்வில் சந்திக்கும் ராகு பகவானின் திசையில் இத்தகைய அமைப்பை பெறுவார்கள் என்பது திண்ணம் ஆகும்.
    ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் அதிபதியை லக்கனமாக கொண்டு தர்ம-கர்மாதிபதி யோகத்தைப் பெற்றவர்கள்.அவர்கள் தாங்கள் சந்திக்கும் ஒன்பது அல்லது பத்தாமாதிபதியின் திசை காலத்தில் அரசியலில் பிரபலமாகும் யோகத்தை அளிக்கும்.
    சனி பகவான் லக்கனத்தில் இருந்து வர்க்கோத்தம பலன் பெற்றது தங்களது தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தை பார்த்தால் மக்கள் போற்றும் தலைசிறந்த அரசியல்வாதியாக வலம்வருவார்கள்.
    ஒருவரின் சாதகத்தில் ஒன்பது மற்றும் பத்தாமாதிபதி சேர்க்கை ,சமசப்தம பார்வை மற்றும் பரிவர்தனை பெற்று "தர்ம-கர்மாதிபதி யோகம் "பெற்றவர்களுக்கும் தம்மை சுற்றி இட்ட வேலையைச் செய்யும் ஏவலாளிகளும்,தெய்வமாக மதிக்கும் தொண்டர்கள் புடைசூழ புகழ் பெற்ற அரசியல் தலைவராக வலம் வருவார்.
    இதே போல சூரியனும்,சந்திரனும் 180 பாகையில் நின்று  சமசப்தமாக சந்திக்கும் பொளர்ணமி யோகத்தினை பெற்றவர்களும் அரசியல் புகழ் பெற்றவர்கள்.
    இரண்டு,ஐந்து ஆம் அதிபதிகள் உச்சம் பெற்று அல்லது ஆட்சி பெற்று வக்கிரம் பெற்ற கிரகங்கள் ஒன்பதாம் பாவம்,பதினொன்றாம் பாவம் மற்றும் லக்கனம் இவற்றை பார்ப்பது.அம்சத்தில் உச்சம் பெறுவது .இவர் நேர்மை மாறாத அரசியல்வாதி ஆவார்.
    பத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று அதனுடன் செவ்வாய்,ராகு,கேது தொடர்பு மற்றும் அரசாளும் கிரகம் சூரிய பகவானும் வலுப்பெற வேண்டும்.
    குரு பகவான் உச்சம் பெறுவதும்,சுக்கிர பகவான் ,புதன் பகவான் ஆட்சி பெறுவதும் நாடாளும் யோகத்தை உண்டாக்கும்.
    வக்கிரம் பெற்ற கிரகம் குரு,சூரியன் பகவான் பத்தில் இருந்தாலும் ,அம்சத்தில் சூரியன் பகவான் உடன் சம்பந்தப்பட்டாலும் யோகம் உண்டு.
    சந்திரனுக்கு பத்தில் ராகுபகவான் சம்பந்தப்பட்டாலும்,சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் ஒரே ராசியில் இருந்து அமாவாசை யோகம் பெற்று இருவரில் ஒருவர் ஆட்சி பெற்றவர்கள் அரசியல் யோகம் உண்டு.
    யாருக்கு அதிகாரம் செய்யும் தலைமை பதவி கிடைக்கும் என்றால் ஒருவருடைய ராசிக்கட்டத்தில் ஒன்பதாம் அதிபதி இருக்கும் ராசிக்கதிபதி உச்சம் பெற்று பத்தாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டு லக்கனத்தை பார்க்க வேண்டும்.
    இவை மட்டுமல்ல லக்கனாதிபதி இருந்த ராசிக்கதிபதி செவ்வாய் பகவானுக்கு திரிகோண கேந்திரமேறி ஆட்சி,உச்சம் பெறும் அமைப்பை பெற்றவர்களுக்கு அரசியல் லாபம் ஏற்படும்.
    ஒரு சிலருக்கு லாபத்தை தரும் ஸ்தனமான  பதினொன்றாம் அதிபதி உச்சம் பெற்று அவர்களுடன் சூரியன்,சந்திரன்  ஆகிய இருவரும் இணைந்து நின்று கேந்திரத்தில் இருக்கும் சுபர் பார்க்கவேண்டும்.
    மேற்கண்ட அமைப்பை பெற்றவர்கள்
    திகாரம் செய்யும் அமைப்பைப் பெற்றவராகள் ஆவார்.
    சனி பகவான் ஆட்சி உச்சம் பெற்று பஞ்சமகாயோகங்களில் ஒன்றான சசக யோகம் நிரம்ப பெற்றவர்கள் அரசியல் தலைவராகும் அமைப்பைப்பெற்றவர்கள்.
    "விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டு நான்கு ஒன்றில் வளையக்கூடின் மன்னவனாம்"-ஆம் ஒருவரது ஜாதகத்தில் சூரியனும்,புதனும் ராசிக்கட்டத்தில் ஒன்று,நான்கு மற்றும் எட்டில் இருந்து ஆட்சி ,உச்சம் போன்ற பலம் பெற்றிருந்தால் மன்னனாவன் என இப்பாடல் விளக்குகிறது.இப்பாடல் எழுதப்பட்ட காலத்தில் மன்னராட்சி  நடைபெற்றதால் மன்னர் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.தற்பொழுது காலத்திற்கு ஏற்றார்போல ஒரு நகரை நிர்வாகிகாகும் அரசியல் தலைவராகி அரசாளும் யோகமாக எடூத்துக்கொள்ளலாம்.
    லக்கினாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி ஆகிய இவர்கள் இணைந்து ஒரே ராசியில் நின்று புதன் பகவான் எங்கு இருக்கிறாரோ அந்த வீட்டு அதிபதி இவர்களை கண்டால் இது போன்ற அமைப்பைப் பெற்றவர்கள் ஒரு துறையை நிர்வாகிக்கும் அமைச்சராகும் யோகம் பெறுவர்.
    யாருக்கு அரசியலில் உயர் பதவி வகிக்கும் நிலை அமையும் என ஜெயமினி விதிப்படி ஆராய்ந்து பார்த்தால் "லக்கனாதிபதி ,சந்திரனுக்கு ஐந்தில் குரு,சுக்கிரன் ஆட்சி,ஏழாம் அதிபதிக்கு ஐந்தில் அரசு கிரகமான சூரியன்,புதன்,கேது
    பெற்றவர்களாவர்.
    இதுவரை அரசியலில் ஈடுபட்டு சிறந்த அரசியல் தலைவராகி மக்கள் பணியாற்றுவதற்கு துணை புரியும் பொதுவான கிரக நிலைகளை பார்த்தோம்.
    இனி பணிரெண்டு ராசிகளுக்கு உரிய அரசியல் யோகம் தரும் அமைப்பை பற்றி விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.
    மேஷ ராசிக்காரார்களுக்கு
    லக்கனத்திலே அரசியல் கிரகமான ஐந்தாமாதிபதி சூரியன் உச்சம் பெற்று லக்கனாதிபதி செவ்வாய் பகவான் பத்தில் உச்சம் பெற்றும் லக்கனத்தை பார்க்கும் தன்மையைப் பெற்றவர்கள் மூர்க்கதனமான கோபத்தன்மையான குணம் கொண்ட அரசியல் தலைவராவர்.மேலும் டபுள் டெபாசிட்டர் என்ற முறையில் செவ்வாய் பகவான் 
    இருந்த வீட்டிற்குரிய சனி பகவானும் உச்சம் பெற்று சூரியனைப்பார்க்கும் போது சுப தன்மையற்ற அரசியல் தலைவராக வலம் வருவார்.
    மேலும் பாக்கியாதிபதி குரு உச்சம் பெற்று விருட்சக ராசியில் உச்சம் பெற்ற ராகு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்களும் அரசியல் யோகத்தை அள்ளி தரும் ராகு பகவானின் திசையில் மாபெறும் அரசாளும் யோகத்தை அள்ளி தருவார்.
    ரிஷப ராசிகாரர்களுக்கு,
    இந்த ராசிக்காரர்களுக்கு லக்கனத்தில் கீர்த்தி புகழைத்தரக்கூடிய மூன்றாம் அதிபதி சந்திர பகவான் லக்கனத்தில் உச்சம் பெற்று பத்தாம் அதிபதி சனி பகவான் ஆட்சி பெற்றும்,சிம்மத்தில் சூரியன் ஆட்சி பெற்ற அமைப்பை பெற்றவர்கள் அரசியல் யோகத்தினை வழங்குவார்.
    மேலும் இரண்டு ,ஐந்தாமிட ஆதிபத்தியம் பெற்ற புதன் பகவான் கன்னியில் ஆட்சி,உச்சம் மற்றும் மூல திரிகோண அமைப்பை பெற்றும் ,சிம்மத்தில் சூரியனை ஆட்சியாக கொண்டு லாபாதிபதி குருவால் புதன் பார்க்கப்படும் அமைப்பை பெற்றவர்களுக்கும் அரசியல் யோகம் உண்டாகும்.
    மிதுனம் ராசிகாரர்களுக்கு,
    புதன் பகவானை லக்கனாதிபதியாக கொண்ட மிதுன  ராசியைப் பெற்றவர்கள்  பெரும்பாலும் ஆட்சி புரிபவர்களாக இருப்பார்கள்.
    இரண்டாம் ஸ்தானத்தில் ஜீவனாதிபதி குரு உச்சம் பெற்று ஐந்தாம் பார்வையாக உச்சம் பெற்ற ராகு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள்.
    இதேபோல் பத்தாமிடத்தில் சுக்கிரனை உச்சமாக பெற்று சுப பார்வையை பெற்றவர்கள் அரசியல் யோகமளிக்கும்.
    கடக ராசி அன்பர்களுக்கு,
    பெரும்பாலான அரசியல் தலைவர்கள் கடக ராசியை கொண்டவர்களாக இருப்பார்கள்.
    ஒன்பதாம் அதிபதி குரு பகவானும் ,பத்தாம் அதிபதி செவ்வாய் பகவானும் சம சப்தமாக உச்சம் பெற்று பார்த்து கொள்ளும் தர்ம-கர்மாதிபதியை பெற்றவர்கள்,
    லக்கனத்திலே குரு பகவானும்,சந்திர பகவானும் உச்சம்,ஆட்சி அமைப்பை பெற்று குரு-சந்திர யோகம் பெற்றவர்களும்,
    இல்லை லக்கனத்திலே சந்திரன் ஆட்சி பெற்று பாக்கிய ஸ்தானமான
    ஒன்பதாமிடத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று லக்கனத்தில் உள்ள சந்திர பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள்,
    கடக ராசிக்கு இரண்டுக்குடைய அரசு கிரகமான சூரிய பகவான் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் உச்சம் பெறும் அமைப்பை பெற்றவர்கள்.
    மேற்கண்ட அமைப்பை பெறும் வாய்ப்பு இருப்பின் அரசியல் யோகம் பெற்றவர்களாவர்.
    சிம்ம ராசி அன்பர்களுக்கு ,
    அரசு கிரகமான சூரியனை லக்கனாதிபதியாக பெற்றிருப்பதால் இந்த ராசியிலும் அதிகமான அரசியல் தலைவர்கள் இருப்பார்கள்.
    சந்திரனை வர்க்கோத்தம் பெற்று சூரியனுக்கு ஏழில் இருந்து பொளர்ணமி யோகம் பெற்று லக்கனாதிபதியை யோககாரன்  செவ்வாய் பலம் பெற்று அரசு கிரகமான சூரியனை பார்த்தால் அரசியலில் புகழடையும் யோகம்.
    மேலும் சிம்ம ராசிக்கு கீர்த்தி மற்றும் புகழை தரும் சுக்கிர பகவான் பத்தில் ஆட்சியோ அல்லது மீனத்தில் உச்சமோ பெற்றவர்களுக்கும் யோகமுண்டு.
    கன்னி ராசி அன்பர்களுக்கு,
    ஓன்பதாமதிபதி சுக்கிரன்,பத்தாமாதிபதி புதன் இருவரும் பலம் பெற்று சேர்க்கை,பார்வை மற்றும் பரிவர்தனை போன்ற 
    தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்றவர்கள்,
    கீர்த்தி ஸ்தானமான மூன்றில் ராகு பகவான் இருந்து உச்சம் பெற்று அந்த வீட்டு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று நான்கு ,ஏழுக்குடைய குரு பகவான் கடக வீட்டில் உச்சம் பெற்று உச்சம் பெற்ற ராகு,செவ்வாயை பார்க்கும் வாய்ப்புடைய சாதகத்தினை பெற்றவர்கள் அரசியலில் பிரபலமடையும் யோகம்.
    துலாம் ராசி அன்பர்களுக்கு,
    துலாம் ராசிக்கு இரண்டு ,ஏழுக்குடைய செவ்வாய் உச்சம் பெற்று அந்த வீட்டின் அதிபதி லக்கனத்தில் உச்சமாக பெற்றவர்கள் அரசியல் யோகம் ஏற்படும்.
    விருட்சக ராசி அன்பர்களுக்கு,
    பத்தில் சூரியன் ஆட்சி பெற்ற அமைப்புடையவர்கள்,
    இரண்டு ,ஐந்துக்குடைய குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று உச்சம் பெற்ற லக்கனாதிபதியை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் இவ்வித யோகமுண்டு.
    தனுசு ராசி அன்பர்களுக்கு,
    ஒன்பதாமாதிபதி அரசு கிரகம் சூரியன் உச்சம் பெற்று ஐந்தாமிடத்தில் பெற்றவர்கள்,
    ஐந்து ,பணிரெண்டுக்குடைய செவ்வாய் உச்சம் பெற்று ,உச்சம் பெற்ற குருவால் பார்க்கப்படும் யோகத்தை பெற்றவர்கள் அரசியல் யோகத்தை ஏற்படுத்தும்.
    மகர ராசி அன்பர்களுக்கு,
    லக்கனத்தில் செவ்வாய் உச்சம் பெற்றும்,உச்சம் பெற்ற குருவால் பார்க்கப்படும் அமைப்பு,
    ஐந்து,பத்தாம் ஆதிபத்தியம் பெற்ற சுக்கிர பகவான் மூன்றாமிடத்தில் உச்சம் அமைப்பை பெற்றவர்கள்,
    பதினொன்றாமிடத்தில் உச்சம் பெற்ற ராகு பகவானை குரு பகவான் உச்சம் பெற்று பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள்.
    மேற்கண்ட அமைப்பை பெற்றவர்களுக்கு அரசாளும் யோகத்தை வழங்கும்.
    கும்ப ராசி அன்பர்களுக்கு,
    இந்த ராசிக்கு ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் அரசியல் யோகத்தை வழங்கும் ராகு பகவானை உச்சமாக பெற்று உச்சம் பெற்ற குருவால் பார்க்கப்படும் அமைப்பு,
    லக்கனத்திற்கு மூன்றில் குரு,புதன்,சூரியன் (உச்சம் பெற்று) சேர்ந்துள்ள அமைப்பை பெற்றவர்கள் அரசியல் யோகமுண்டு.
    மீன ராசி அன்பர்களுக்கு,
    லக்கனத்தில் சந்திரனும்,கடகத்தில் பத்தாம் அதிபதி குரு பகவான் உச்சம் பெற்று மகரத்தில் தன ,பாக்கியாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று பார்க்கும் தன-கர்மாதிபதி அமைப்பை பெற்றவர்களுக்கு அரசாளும் யோகம் உண்டு.
    குறிப்பு:-
    இதுவரை அரசியல் யோகம் பெறும் அமைப்பை தரும் பொதுப்பலன் மற்றும் பணிரெண்டு ராசிகளுக்கும் பார்த்தோம்.இதை படித்தவர்கள் மேற்கண்ட அமைப்பை நான் பெற்றிருந்தும் எனக்கு அரசியல் யோகம் இல்லை என எதிர் வாதம் செய்ய வேண்டாம்.ஏனெனில் அவ்வாறு அப்பலனை தரவில்லையெனில் அதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.மேற்கண்ட அமைப்பை பெற்றிருந்தாலும் பாதகாதிபதியாகவோ அல்லது பாவர் சாரம் மற்றும் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றிருப்பின் அவை உச்ச பலனை தராமல் நீச பலனைத்தரும் .......இது போன்ற இன்னும் பல சோதிட ஞானம் நிரம்ப பெற்றவர்களுக்கு மட்டும் தெரிந்த சூட்சும விஷயங்களை கலந்துதான் பலன் எடுத்துக்கொள்ள வேண்டும்.எப்படி மருத்துவத்தில் "Self medicine is very dangerous"-We must consult doctor என சொல்வார்கள்.அதைப்போல இது போன்ற சோதிட பதிவுகளை படித்து விட்டு தானே முடிவடுத்துக்கொள்ளமல் சோதிட புலமைப்பெற்றவர்களை கலந்தாலோசித்தல் நலம்.

  6. ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !
      "சினிமாத்துறை என்பது ஒரு கனவுத்தொழிற்சாலை ஆகும்.இதில் நுழைந்து எல்லோராலும் வெற்றி பெற முடியாது.இத்துறையில் வெற்றி பெற ஒருவர் பலவித இன்னல்களை அனுபவித்த பிறகே வெற்றியடைய முடிகிறது.இத்துறையில் வெற்றி பெற வேண்டுமாயின் கலைத்திறமையும் அவற்றின் நுணுக்கங்களும் பெற்றிருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.இத்தகுதியை அடைய  கிரகங்களின் பங்கும் முக்கியமானது.எனவே சினிமா துறையில் பிரபலமாவதற்கு உறுதுணையாக அமைந்த கிரக நிலைகளை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.
    பாடகராக .....
    பாடகராக ஒருவர் பின்னனி பாடி கலைத்துறை மூலம் செல்வமும்,செல்வாக்கும் பெற கீழ்கண்ட கிரகங்களும்,ஸ்தானங்களும் பலம் பெற வேண்டும்.
      வாக்கு ஸ்தானம் பலம் பெற வேண்டும்.வித்தைக்கு அதிபதியான புதன் ஆட்சி,உச்சம் பெற்று கேந்திர கோணங்களில் பலம் பெற்றிருக்க வேண்டும்.
    கலைக்காரகன் எனப்படும் சுக்கிரன்  உச்சம்,திரிகோணம்,ஆட்சி  பெற்று ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் இடத்திலோ அல்லது  பத்துக்கு பத்தாம் வீடான ஏழாம் இடத்திலோ அமையப்பெற வேண்டும்.
    வாக்கு ஸ்தானதிபதி தன் வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் பலம் பெற வேண்டும்.
    இசைக்கு அதிபதியான சுக்கிரனும்,நல்ல மன நிலை தரக்கூடிய சந்திரனும் பாடகராக்கூடிய சாதகத்தில் பலம்பெற்றிருக்கும்.
    பாடகரிலும் பலவித ரகம் உண்டு சிலர் பக்திப்பாடல்கள் பாடுபவராக இருப்பர்.அவர்களது ஜாதக கட்டத்தில் வாக்கு ஸ்தானத்தில் அங்காரகனும்,சுக்கிரனும் பலம் பெற்றிருக்க வாய்ப்புண்டு.
    இதேபோல் ஒரு சிலர் சிற்றின்ப பாடல்களை பாடி புகழ் பெறுவார்கள்.இவர்களது ஜாதகத்தில் சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் நீச சுக்கிரன் இருந்தால் இது போன்ற பாடகராகி புகழ்பெறும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள்.
    சிலர் சங்கீத சாஸ்திரங்களில் கரை கண்டவராக உலகம் போற்றும் பாடகராக திகழ்வதற்கு இவர்களுடைய ஜாதகத்தில் ராசி சக்கரத்தின் இரண்டாம் இடத்திலோ அல்லது பஞ்சம ஸ்தானத்திலோ  சூரியனும்,புதனும்  அல்லது குருவும்,சந்திரனும் இணைந்து இருப்பின்  இவ்வாறு புகழ்பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
    ஒரு சிலர் நவீன யுக யுக்தியான கணிப்பொறி உதவியால் புகழ்பெறுவதற்கு கணிப்பொறிக்கு அதிபதியான சனி பகவானை குரு பார்வை பெற்றவர்கள் ஆகும்.
    கவிஞராக..
        
           சினிமா துறையில் புகழ்பெற்ற கவிஞராக பிரபலயமடைய கலைக்காரகன் சுக்கிரனும்,வித்தை மற்றும் எழுத்துக்காரகர் என போற்றப்படும் புதனும் பலம் பெற்று குரு பகவானின் நற்பார்வைப்பட வேண்டும்.
    சந்திர கேந்திரத்தில் சுக்கிரனும்,புதனும் திகழ வேண்டும்.
    மேலும் கவிஞராக பாக்கிய -விரய ஸ்தானங்களும்,தர்ம-கர்ம ஸ்தானங்கள் பலம் பெற்று தர்ம-கர்மாதிபதி யோகமும் பெற்று இவற்றிற்கு குரு பார்வையும் பெற வேண்டும்.
    குருவிற்கு இரண்டாமிடத்தில்  அதன் அதிபதி மற்றும் சந்திரனிருக்க  ,புதன் ஒன்பதாமாதிபதியுடன் கூடி புகழ் ஸ்தானமான  மூன்றாமிடத்தில் இருக்க கவிஞராக வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
    சந்திரனும்,புதனும் சம சப்தம பார்வை வேடிக்கை விநோதமான பல பாடல்களை இயற்றுபவராக திகழ்வார்.
    சிலர் பக்தி பாடல்கள் எழுதி புகழ் பெற வேண்டுமாயின் பஞ்சம ஸ்தானத்திலோ அல்லது வாக்கு ஸ்தானத்திலோ கேது இருந்து  மேற்கண்ட அமைப்புகளும் பலம் பெற்றிருப்பின் பக்தி பாடல்கள் பல எழுதி புகழ்பெறுவார்கள்.
    மேலும் லாப ஸ்தானத்தில் சந்திரனும்,பஞ்சம இசை ஸ்தானமாகிய ஐந்தில் குரு இருப்பதும்,
    லக்கனத்தில் சுக்கிரன் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பவருக்கு கவிதை ஞானம் மிகுந்து பக்தி பரவச பாடல்களை இயற்றுவர்.
    வாக்கு மற்றும் பஞ்சம ஸ்தானங்களில் சுக்கிரன் தொடர்பு மற்றும் காம காரகாரகர் செவ்வாய் சேர்க்கை,பார்வை மற்றும் சாரம் இவற்றில் ஒன்றை பெற்றவர் சிற்றின்ப பாடல்கள் எழுதி புகழ்பெறுபவராக திகழ வாய்ப்புண்டு.
    இசையமைப்பாளராக திகழ...
    ஒருவர் ஜாதகத்தில் சூரியன்,சந்திரன்,புதன்,சனி மற்றும் கலைக்காரகராகிய சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பலமடைந்தவர்கள் இசையமைப்பாளராக திகழ்வார்கள்.உச்சம் பெற்ற சனியை குரு பார்த்தால் கணிப்பொறி உதவியால் பிரபல இசையமைப்பளராக மாறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
    நடனம்
    நடனத்தில் புகழ்பெற்ற நாட்டிய தாரகையாக/தாரகனாக திகழ நடனத்திற்குரிய சுக்கிரனும்,சனியும் பலம் பெற்றிருக்கவேண்டும்.
    நான்கு மற்றும் ஏழாமிட பரிவர்தனை பெற்றிருக்கவேண்டும்.இவற்றோடு குரு மற்றும் கேது நான்கு மற்றும் ஏழாமிட தொடர்பு உடையவர்கள் பரத நாட்டியம் முதலான பக்தி பாடல்களுக்கும்.,
    செவ்வாய்,சுக்கிரன் நான்கு மற்றும் ஏழாமிட தொடர்பும் இவற்றுடன் பத்தாம் அதிபதியும் சேர கவர்ச்சி நடன மங்கையாவள்.
    இயக்குனராக......
    சூரியன்,புதன்,சுக்கிரன் ஒன்று சேர்ந்து லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ கேந்திரங்களிலோ அல்லது கோணங்களிலோ அமைந்தாலும்,
    பாக்கியாதிபதி பலம் பெற்று தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்று குரு பார்வை பெற கலை உலகம் உள்ளவரை பிரபலமான இயக்குனராக வாய்ப்புகள் உண்டு.
    இதில் புதன் அதிக பலம் பெறும்போது கலைப்படங்களை இயக்கும் வாய்ப்பும்,
    சுக்கிரன் அதிக பலம் பெறின் கமர்ஷியல் படமும்,
    சூரியன் உச்சம் பெற்று குரு பார்வை பெறின் பக்தி படங்களும் எடுக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.
    நடிகராக ....
    கலைக்குறிய சுக்கிரன் பலம் பெற்று ஜீவன ஸ்தான தொடர்பும்,இதேபோல் சனியும் பலம் பெற வேண்டும்
    சுக்கிரன்-சந்திரன் பரிவர்தனை  பிற மொழி படங்களில் நடிக்க வாய்ப்பும்,
    பத்தாம் இடத்தோடு சுக்கிரன் தொடர்பு பெற்று ஆட்சி ,உச்சம் பெறும் ஜாதகர் இதனுடன் லாபாதிபதி சேர்ந்து சந்திரனும் பலம் பெற்றிருக்க வேண்டும்.
    பட தயாரிப்பளராக...
    கலைக்காரகன் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று இவை இரண்டு,பதினொன்றுக்குடையவனாகி
    இவற்றுடன்  ஜீவனக்காரகர் சேர சினிமா தயாரிப்பளராக இருப்பர்.

  7. NOV
    14


  8. ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
    அன்பிற்குரிய பெற்றோர்களே 
          தங்களது  குழந்தைகளுக்கு என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என குழம்பிக்கொள்ளும் பெற்றோர்களுக்கு இந்த கட்டுரையை தொடர்ந்து படிப்பதன் மூலம் ஒரளவு  புரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவு பதியப்படுகிறது.
    மருத்துவராகும் யோகம் உண்டா என தெரிந்து கொள்ள :-
           தங்களது குழந்தைகள் மருத்துவராகும்  யோகம் உள்ளதா என தெரிந்து கொள்ள கீழ்கண்ட அமைப்பை  உங்களது குழந்தைகளின் ஜாதகத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
      1)  உயிர் லக்கனத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய்  பலம் பெற்று வாசம் செய்யவேண்டும் .
    2) பத்தாம் அதிபதியாக செவ்வாய்  வந்து ஆட்சி,உச்சம்,கேந்திர மற்றும் கோணம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் அக்கிரகம் சுபர் பார்வை,சேர்க்கை மற்றும் சாரம் பெற்றிருக்க வேண்டும்.
    3) பத்தாம் இடத்தை செவ்வாய் பார்வையிட வேண்டும்.அல்லது பத்தாம் இடத்ததிபதியும்,செவ்வாயும் சேர்ந்தோ,பார்வை பெற்றோ  மற்றும் பரிவர்தனையோ பெற்று சுப ஸ்தானத்தில் தங்க வேண்டும்.இத்தகைய நிலையில் செவ்வாய் நீசமடையாது இருக்க வேண்டும்.அனைத்திற்கும் மேலாக செவ்வாயும் ,பத்தாம் இடத்ததிபதியும் தீயோர் தொடர்பற்று இருக்க வேண்டும்.இதுனுடன் சூரியன் ஆட்சி,உச்சம் பெற்று சுப ஸ்தானத்தில் பலம் பெற்றிருக்க வேண்டும்.
    லக்கனத்திற்கு பத்தாமிடத்தை வைத்து  மருத்துவராகும் யோகத்தை பார்ப்பதுபோல ராசிக்கு பத்தாம் இடத்தையும் பார்த்து பலனுரைக்க வேண்டும்.
    இதேபோல் சூரியன்,சனி மற்றும் ராகுவும் மருத்துவ கிரகங்கள்.இவர்கள் இரண்டாம் பாவத்திற்கோ அல்லது இரண்டாம் அதிபதிக்கோ தொடர்பு ஏற்பட்டாலும் மருத்துவராகும் யோகம் ஏற்படும்.
    விஞ்ஞானியாகும் யோகம்
    சூரியனும்,எட்டாம் அதிபதியும் விஞ்ஞான அறிவாற்றலை தரும் கிரகமும் மற்றும் பாவமும் ஆகும்.இவர்கள் இருவரும் பலம் பெற்று இரண்டு,பத்தாம் இடத்திற்கு தொடர்பு ஏற்பட்டால் ஆராய்சி துறையில் படித்து முனைவர் பட்டம் பெறும் யோகமாகும்.மேலும் புகழ்பெற்ற விஞ்ஞானியாவார்.
    எட்டாம் பாவகம் ஆராய்சி துறையையும்,புதிய கண்டுபிடிப்பையும் குறிப்பதாகும்.
    சூரியன்,குரு,செவ்வாய் இணைந்து இரண்டு,பத்தாம் பாவத்தோடு தொடர்பு கொள்வது  விஞ்ஞானியாகும் யோகம்.இவற்றோடு புதனும் பலம் பெற்றால் மேலும் பல புகழைத்தரும்.
    நீதிபதியாகும் அமைப்பு
         பத்தாம் பாவகம்  குரு,சனியால் பார்க்கப்படுவது.
        லக்கனாதிபதி ஆறில் பலம் பெற்று பத்தாம் பாவம் மற்றும் அதன் அதிபதியுடன் தொடர்பு ஙொள்வது.
         பத்தாம்  அதிபதி புதனாகி இரண்டாம் பாவத்தில் சனியுடன் இருந்து  குருவுடன் தொடர்பு கொள்வது.
           குரு பகவான் ஆறாம் பாவத்தில் பத்தாம் அதிபதியின் சாரம் வாங்கி நிற்பது.
    பொறியியலராகும் அமைப்பு
         பத்தாம் அதிபதி சூரியன்,புதன்,சுக்கிரன் மற்றும் சனி இவர்களில் ஒன்றாக இருந்து  ஆட்சி,உச்சம் மற்றும் சுப சாரம் மற்றும் பார்வை பெற்றிருப்பின் பொறியாளர்.
    பத்தாம் அதிபதி மற்றும் அதனோடு தொடர்புடைய கிரகங்களை பொறுத்தோ அவனது துறை அமைகிறது.
    கீழ்கண்டவற்றுள் துறைகளும்,அத்துறைக்கு செல்வதற்கு ஆதரவாக அமர்ந்த கிரகங்களாகும்.
    1)  கப்பல் துறை ; - சுக்கிரன்,சனி
    2) காவல் துறை:- செவ்வாய்,புதன்,
                                         சனி
    3) விமான துறை:-ராகு ,சனி
    4) ரயில்வே துறை:-சனி,சந்திரன்
    5) வேதத்துறை:-குரு,புதன்
    6)விவசாய துறை:-செவ்வாய்,
                                        சூரியன்,சந்திரன்
    7) மருத்துவதுறை;-ராகு,செவ்வாய்
                                          சனி
    8) மின்சாரத்துறை:-செவ்வாய்,ராகு
    9) சினிமாத்துறை:-சுக்கிரன்,புதன்
                                        சந்திரன்
    10) பத்திரிக்கை துறை:-புதன்,சனி
    11)வங்கி துறை:-குரு,சுக்கிரன்,புதன்
    12)ஜவுளி துறை:-சுக்கிரன்,புதன்
    13)ஹோட்டல் துறை:-சுக்கிரன்
    14) அரசியல் துறை:-சூரியன்,சனி
                                             செவ்வாய்
    15)இராணுவ துறை:-செவ்வாய்,சனி
    16)கல்வி துறை :- குரு,புதன்,கேது
    17)கணிப்பொறி;-ராகு,செவ்வாய்
    18) இசைத்துறை:- குரு,கேது,
                                         சுக்கிரன்
    19) விளையாட்டு துறை:-சூரியன்
                                                       செவ்
    20)பல சரக்கு கடை;-
                                            புதன்,சனி
    22)கோவில் திருப்பணி:-
                 நான்காம் அதிபதியுடன் பத்தாம் அதிபதி கூடினால் கோயில் திருப்பணி
         23) அக்கவுண்ட் தொழில்:-
                        லக்கனம் மற்றும் லக்கனாதிபதியுடன் குரு,புதன் சம்பந்தப்பட்டால் கணக்கெழுதும் வேலை அமையும்.
    24) கமிஷன் ஏஜண்ட்;-
                    1,4-ஆம் அதிபதிகள் சம்பந்தம் ஏற்பட்டு நான்காம் பாவத்திற்கு  புதன்-சனி சம்பந்தம் ஏற்படுவது.
      24) பால் பண்ணை வியபாரம் :-
                    நீர் ராசிக்கிரகம் சந்திரன்,சுக்கிரன்.இதேபோல் சாதக கட்டத்தில் ஏழாம் பாவம் பால்,தயிர் இவற்றை குறிக்கும்.எனவே மேற்கண்ட இரு கிரகங்களும்(சந்திரன்,சுக்கிரன்) ஏழாம் பாவத்திற்கு தொடர்புகொண்டு பலம் பெறுவது பால் பண்ணை வியபாரத்தை ஏற்படுத்தி தரும்.
    25) விவசாயி
               விவசாய  கிரகமான  சனி,சந்திரன் மற்றும் செவ்வாய் நான்காம் பாவத்திற்கு சம்பந்தம் ஏற்பட்டு பலமடைந்தால் சிறந்த விவசாயி.
                இதேபோல சனி 1,3 -ம் பாவ தொடர்பு கொண்டாலும் விவசாய பண்ணை அமையும்.
    26)வீடு கட்டி வாடகைக்கு விடுதல்:-
                 பொதுவாக செவ்வாய் பலமடைந்தால் நிலபுலம் அதிகமாக சேர வாய்ப்புள்ளது.செவ்வாய் பூமிகாரகன்.எனவே செவ்வாய் நீர் கிரகமான சந்திரன்,சுக்கிரன் சாரம் பெற்றால் விவசாய நிலங்கள் வாங்கும் யோகம் அதிகம் உண்டு
    ,ஆனால்.செவ்வாயானது 4,7 ஆம் அதிபதி சாரம் பெற்று பலம் பெற்று  நான்கு,ஏழாம் அதிபதிகள் தொடர்பு பெற்று  அதனுடன் எத்தனை கிரகம் தொடர்பு ஏற்படுகிறது  அதற்கேற்றார்போல் அவன் இடம் வாங்கி  அத்தனை வீடுகள் கட்டி வாடகைக்கு வீடுவான்.
      27)தங்கநகை வியபாரம்:-
                தங்கத்தை குறிக்கும் கிரகம் சூரியன்,சுக்கிரன் ஆகும்.
                  இவை லக்கனம் மற்றும் பத்தாம் அதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டால் தங்கநகை வியபாரம்(ஜீவல்லரி)  செய்யலாம்.இவற்றுடன் செவ்வாய் தொடர்பும் நல்லது.
    28) நவதானிய வியபாரம்:-
                      இரண்டாம் பாவம் உணவு வகைகளையும்,நவ தானியத்தையும் குறிக்கும்.
                   புதன்-உணவு தானியங்களையும்
                   சந்திரன்-உணவு வகைகளையும்
                   சனி-பருப்பு வகை நவ தானியங்களையும் குறிக்கும்.
    மேற்கண்ட கிரகங்கள் லக்கன மற்றும் பத்தாம் பாவத்துடன் தொடர்பு ஏற்பட்டால் நவதானிய வியபாரம் மேற்கொள்ளலாம்.
    29) சிட்பண்ட்ஸ் ,வட்டிக்கடை,பைனான்ஸ் கம்பெனி முதலாளி:-
          தனகாரகன் குருவானவர் தன,லாப ஸ்தான தொடர்பு ஏற்பட்டால் பைனான்ஸ் கம்பெனி நடத்தலாம்.
        தன,லாப பாவத்தின் திரேக்காணதிபதிகள் நவாம்சத்தில் குரு அல்லது புதன் வீட்டில் இருந்து குரு அல்லது புதன் சம்பந்தப்படுவது.       
         குரு 1,2,11  ஆம் பாவங்களில் ஏதாவதொன்றுக்கு சம்பந்தப்படுவது
    30 )போலிஸ் மற்றும் ராணுவம்:-
            ஒருவருடை சாதகத்தில் பத்தாம் அதிபதி செவ்வாயாக வந்து பலம் பெற்று இருப்பின் போலிஸ்,ராணுவம் போன்ற துறை.இந்த செவ்வாய் வீர தீர காரகமான மூன்றாம் பாவம்,எதிரி ஸ்தானமான ஆறாமிடமா ஆகியவற்றுடன் தொடர்பு அல்லது  பார்வை மற்றும் சேர்க்கை பெற்றிருக்கவேண்டும்.

  9. ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!
    "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.
       மனித வாழ்வுக்கு பொருள் தேடல் என்பது அவசியமான ஒன்றாகும்.சமூகம் பொருளுடையவரையே போற்றி புகழ்கிறது.வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட
    "பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு
    அவ்வுலக மில்லை". என்கிறார்.
    பொருள் உள்ளவர்களைத்தான் மனித உலகம் மதிக்கிறது.அதே போல் புண்ணியம் செய்து நேர்மையாக வாழும் அருள் உள்ளவர்களைத்தான் தேவ உலகம் மதிக்கிறது என பகர்கிறார்.
    எனவே பணம் சம்பாதிக்கும் பொருட்டு அவர்களது ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா ?  அவ்வாறு செல்வதற்கு உகந்த திசை புத்திகள் உள்ளதா ? அல்லது இல்லையா?.
    அவ்வாறு வெளிநாடே சென்றாலும் அங்கு நிறைய பொருளீட்டும் யோகம் இருக்கிறதா ?
    எந்த மாதிரியான வேலையை தேடி செல்லலாம் ? அங்கு குடியுரிமை பெறும் யோகம் உண்டா?
    இது போன்ற பல வினாக்களுக்கு சாதக அடிப்படையில் விடை தேடி அதற்கு பிறகு வெளிநாடு செல்லல் நலம் பயக்கும்.இவ்வாறு எதுவும் பார்க்காமல் வட்டிக்கு பணம் வாங்கி பல லட்சங்களை கட்டி போய் சில வாரங்களிலே "போன மச்சான் திரும்பி வந்தான்?" என்ற கதையாக திரும்ப வந்து அந்த கடனை அடைக்க முடியாமல் அந்த குடும்பம் நொறுங்கிப்போய் ஏன் சில நேரங்களில் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள்.எனவே வெளிநாடு செல்ல விரும்புவோர் பயன்பெறும் வகையில் இப்பதிவு இங்கு பதியப்படுகிறது.
    சாதகத்தில் உள்ளப ணிரெண்டு ராசிகளை பின்வருமாறு  பிரிக்கிறோம்.
    காற்று ராசி : மிதுனம்,துலாம்,கும்பம்
    அக்னி ராசி : மேஷம்,சிம்மம்,தனுசு
    நிலம் ராசி  : ரிஷபம்,கன்னி,மகரம்
    ஜல ராசி  :கடகம்,விருட்சகம்,மீனம்
    வெளிநாடு விரும்புவோர்களுக்கு லக்கினம்,லக்கினாதிபதி,சந்திரா லக்கனம் இவைகள் ஜல அல்லது காற்று ராசிகளில் அமைய வேண்டும்.
    2,11.12  ஆகிய சாதக கட்டங்கள் ஒருவருக்கு காற்று அல்லது ஜல ராசியாக அமைய வேண்டும்.
    11- ம் வீட்டு அதிபதி ,12 -ஆம் வீட்டு அதிபதி காற்று அல்லது ஐல ராசியாக இருந்து இவை ஆட்சி,உச்சம்,கேந்திரம் ,திரிகோணம்,லாபஸ்தானம் பெற்று இருக்க வேண்டும்.இவை அம்சத்திலும் இதே போன்ற அமைப்பை அடைந்திருக்க வேண்டும்.
    11 மற்றும் 12 -ஆம் வீட்டு அதிபதிகள் காற்று அல்லது ஜல ராசிக்குரிய நட்சத்திர சாரம் பெற்றிருக்க வேண்டும்.
    காற்று அல்லது ஜென்ம ராசி ஜென்ம லக்கனத்திற்கு சுப ராசிகளாக இருக்கவேண்டும்.
    வெளிநாடு செல்வதை ஆதரிக்கும் கிரகங்கள் சூரியன்,சந்திரன்,குரு,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,ராகு
    சுவாதி,பூராடம்,அஸ்வினி ,சித்திரை நட்சத்திர காலில் சனி நின்றால் ஜாதகர் அந்நிய தேசம் செல்லலாம்.
    வியாபாரம் மூலம் வெளிநாடு செல்ல :-
           புதன் கீழ்கண்ட நட்சத்திர காலில் நின்றால்
    மகம்,மற்றும்  சனி  சாரத்தில் நின்றால் ஜாதகர் கிராம வாசம் புரிவார்.மாறாக
    பூரட்டாதி,ஆயில்யம்  மற்றும் ராகு நட்சத்திர காலில் நிற்பின் பல தேசம் செல்வார்.
    ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரகாலில் நின்றால் வியபாரம் மூலம் வெளிநாடு செல்லலாம்.
    தந்தை வெளிநாடு செல்லும் யோகம்;-
    சூரியனுடனுடைய நட்சத்திர சாரத்தில் சனி நின்றால் அவனது அந்நிய தேசம் சென்றிருப்பார்.தந்தை மகன் ஓர் இடத்தில் இருக்க முடியாத நிலை.
    பிதுர்காரனாகிய சூரியனுடன் சந்திரன்,சுக்கிரன்,புதன் இவர்கள் கூடி நின்றால் அவனது தந்தை வெளிநாடு செல்லும் பாக்கியம் பெற்றிருப்பார்.
    ஒருவரது சாதகத்தில் 10,6 ராசியில் ஏழு கிரகஙாகள் கூடியிருந்தாலும்,12- ஆம் ராசிநாதன் சர ராசியில் இருந்தாலும்,
    அச்சாதகர் பொருள் ஈட்டும் விஷயமாக வெளிநாடு சென்றிருப்பார்.
    4, 10 ஐ லக்கினமாகவும்,பணிரெண்டாம் ராசியில் ராகு அல்லது சுக்கிரன்,சந்திரன் இவர்கள் இருவரும் 10 ,12 ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருப்பினும் வெளிநாட்டு யோகம்.
    பத்தாம்  வீட்டாம் அதிபதி ராகு,கேதுக்களின் வர்க்கம் பெற்று அல்லது சனி,குரு இவர்களின் வர்க்கம் பெற்று இருப்பினும் அதாவது சில நேரங்களில் நீசம்,அஸ்தமம் பெற்று இருந்தால் அந்த சாதகர் சுய தொழிலை விட்டு அந்நிய தேசங்களில் சேவக விருத்தி செய்வான்.
    ராசிக்கு பத்தில் சனி,குஸன்,சுக்கிரன் இவர்களிருந்தால் அந்நிய தேசம் சென்று பற்பல வியபாரம் செய்வான்.
    மகர லக்கினம் சர ராசியாக இருந்து சனி,சந்திரன்,குரு சம்பந்தம் பெற்றோ அல்லது பார்வை பெற்றோ இருந்தால் கடல் கடந்து அயல்நாடு செல்லாம்.
    பல முறை அயல்நாடு செல்லும் யோகம்
    ஒருவரது சாதகத்தில் ஜல கிரகங்களான சனி,சந்திரன்,குரு ஆகிய மூன்று கிரகங்களும் கடகம்,மகரம்,மீனம் ஆகிய ராசிகளில் ஒன்றில் இருப்பின் இவ்வகை யோகம் உண்டு.
    லக்கினம் சரமாகவும்,லக்கினாதிபதி வேறு சர ராசியில் இருப்பின் வெளிநாட்டு யோகம்.
    குரு,சனி,பாம்பு சரம் உபயம் அமர்ந்திருப்பின் கடல் கடக்கும் யோகம்.
    12-ம் வீட்டோன், 8-ஆம்  வீட்டோன் மற்றும் செவ்வாய் இம்மூவர் சேர்ந்து எவ்விடத்திலிருந்தாலும் பர தேசம் செல்வான்.
    ஒரே வீட்டில் சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன் சேர்ந்து நிற்பது
    .குரு 4,6,12  ம் வீட்டில் இருப்பது.
    ராகு அல்லது கேது ஜீவ ராசியான கடகம்,மகரம்,மீனம் ஆகிய ஒன்றுடன்  இருப்பது.
    செவ்வாய்,சுக்கிரன்,சந்திரன் அல்லது ராகு சர ராசியாக இருப்பது.
    பத்தாம் அதிபதி ராகு,கேது நட்சத்திர காலிலோ அல்லது ஜல ராசியின் நட்சத்திர காலில் நிற்பது.
    கடகம்,மகரம்,மீனம் போன்ற ராசிகளில் சனி,குரு,சந்திரன் அல்லது பத்தாம் வீட்டதிபதி வெளிநாடு செல்லும் யோகம்.
    பத்தாம் வீட்டதிபதி ராகு,கேது நட்சத்திர காலில் நிற்பது.
    மேஷம்,கடகம்,துலாம்,மகரம் போன்ற சர ராசிகளில் நான்கு பக்கங்களில் கிரகங்கள் அமர்ந்து ஒருவரையோருவர் பார்த்துக்கொள்ளல் யோகம்.
    இதுவரை பொதுவான விதிகளை பார்த்தோம் .இனி பணிரெண்டு ராசிகளுக்கு அதிக வெளிநாட்டு யோகம் தரும் கிரகநிலைகளை பார்ப்போம்.
    முதலில்
    மேஷ லக்கனத்திற்கு பத்தாம் வீட்டு அதிபதி சனி தன் சொந்த வீடான மகரத்தில் அமர்ந்து பணிரெண்டாம் வீட்டதிபதி குரு கடகத்தில் உச்ச வீட்டிலிருந்து சம சப்தமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் நிலை பிரபலமான வெளிநாட்டு யோகம்.இந்த அமைப்புடையவர்கள் அதிக பொருளீட்டும் யோகத்தை பெற்றவர்கள்.சனி பாதகாதியாகவும் வருவதால் ஒரு சில பாதகங்களை செய்ய நினைத்தாலும் லக்கன யோகரான குரு பார்வை பாதகத்தை குறைத்துவிட வாய்ப்புண்டு.
    ரிஷப லக்கனத்திற்கு பணிரெண்டாம் வீட்டிற்குரிய செவ்வாய் ஓன்பதாம் வீடான மகரத்தில் உச்சம் பெற்று லாப, அட்டமாதிபதியான குருவால் பார்க்கப்பட்டால் வெளிநாடு செல்லும் யோகம்.
    மிதுன லக்கன காரருக்கு 5,12 க்குரிய சுக்கிரன் பத்தில் ஜல ராசியான மீன ராசியில் உச்சம் பெறுவது வெளிநாட்டுயோகம்.
    கடக லக்கனகாரர்களுக்கு  4,11  க்குரிய சுக்கிரன் பதினொன்றில் ஆட்சி பெறுவதும் புதன் பணிரெண்டில் ஆட்சி பெறுவதும்,
    இதேபோல் 9- ஆம் வீட்டதிபதி குரு 12 -ல் மிதுனத்தில்  அமர்வதும்,பணிரெண்டாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீடான  ஜல ராசி மீனத்தில் இருப்பதும் யோகம்.
    ( குறிப்பு ; 9,12 க்குடையவர்கள் பரிவர்தனை, பார்வை மற்றும் சேர்க்கை எல்லா லக்கன காரர்களுக்கும் வெளிநாட்டு யோகம்)
    சிம்ம லக்கனகாரர்களுக்கு பணிரெண்டாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடமான ரிஷபத்தில் பெற்று, 5, 8 க்குரிய குரு ஜல ராசி கடகத்தில் உச்சம் பெறுவதும் வெளிநாட்டு யோகம்.
    கன்னி லக்கனத்திற்கு  4,7  க்குரிய குரு பதினொன்றாம் இடமான ஜல மற்றும் சர ராசியான கடகத்தில் உச்சம் பெறுவது யோகம்.குரு பாதகாதிபதியாகவும் வருவதால் குருவை வழிபட்டாலோ அல்லது வருமானத்தின் ஒரு பகுதியை தான தர்மங்களோ அவை செய்யும் பாதகங்களிலிருந்து விடுபடலாம்.
    துலாம் லக்கனத்தாருக்கு பணிரெண்டாம் அதிபதி புதன் ஆட்சி உச்சம் பெற்று குருவால் பார்கப்படாமல் இருத்தல் நலம்
    விருட்சக அன்பர்களுக்கு 7,12 க்குரிய சுக்கிரன் பணிரெண்டில் ஆட்சியோ அல்லது ஐந்தில் உச்சமோ பெறல் நலம் அல்லது பணிரெண்டில் 4,5 -க்குடைய சனி உச்சம் பெறுவதும் பிரபல யோகம்.
    தனுசு லக்கனத்திற்கு 5,12 க்குரிய செவ்வாய் உச்சம் பெற்று லக்கன மற்றும் நான்காம் ஆதிபத்திய குரு உச்சம் பெற்று ஜல சர ராசியான கடகத்திலிருந்து பார்த்தல் நலம்.
    மகர லக்கனத்திற்கு 3,12 க்குரிய குரு ஏழில் உச்சம் பெற்று லக்கனத்தில் சனியையோ அல்லது  லக்கனத்தில் உள்ள 4,11- க்குரிய செவ்வாயை பார்த்தால் கடல் கடந்து செல்லும் யோகம்
    கும்ப லக்கனத்திற்கு 2,11 க்குரிய குரு பதினொன்றில் ஆட்சிபெற்று பணிரெண்டில் சனி இருப்பின்.யோகம்
    மீன லக்கனத்தாருக்கு 11,12 க்குடைய சனி ஜந்தில் அமர்ந்து ஆட்சி பெற்ற குருவால் பார்க்கப்படுவது அல்லது  லக்கன, ஜீவன குரு சர மற்றும் ஜல ராசியான கடகத்தில் உச்சம் பெற்று மீனத்தில் சந்திரன் குரு,சந்திர பரிவர்தனை பெற்றிருந்தாலோ அல்லது சனி மகர வீட்டில் ஆட்சி பெற்று ,கடகத்திலா உள்ள குருவால் பார்க்கப்பட்டாலோ கடல் கடந்து செல்லும் யோகம்.

  10. ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
    +++++++++++++++++++++
    அனைவருக்கும் வணக்கம்,
      ஒரு தம்பதியர்களிடம் திருமணம் முடிந்தவுடன் உறவினர்களும்,நண்பர்களும் மற்றும் சமூகமும்  கேட்கும் அடுத்த கேள்வி வீட்டிலே ஏதாவது விசேஷமா? என சூசகமாக கேட்கும் கேள்வியிலே  அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதுதான் .
    இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆனால் நேரடியாக கேட்டுவிடுவார்.என்னப்பா ஏதாவது டாக்டர்களிடம் காட்டினாயா இல்லை ஜாதகம் ஏதாவது பார்த்தீர்களா?என கேள்வி மேல் கேள்வி கேட்டு மனம் நோக செய்துவிடுவார்கள்.
    குழந்தை பாக்கியம் சிலருக்கு மட்டும் தாமதமாவதற்கும்,ஒரு சிலருக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போவதற்கும் காரணத்தையும்,அதற்குரிய பரிகார பலனையும் அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
    புத்திர ஸ்தானமும்,அதன் அதிபதியும்
    ******************************
        புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடத்தில் பாவிகள் என்றழைக்கப்படும் ராகு,கேது,சனி போன்ற கிரகங்கள் இருந்து சுபர் பார்வையற்று இருப்பினும்,
    புத்திர ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாமிட அதிபதி நீசம்,அஸ்தமனம்,பகை பெற்று இருந்தாலும்,அல்லது 6,8,12 போன்ற  மறைவிடங்களில் இருந்தாலும்
    மேலும் புத்திர ஸ்தானாதிபதி பாவர் ந்ட்சத்திர சாரம் பெற்று பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று 6,8,12 போன்ற மறைவிடங்களில் இருப்பின் இருப்பினும் புத்திர தோஷம் ஆகும்.
     
    புத்திரகாரகர் எனப்படும் ஸ்ரீகுரு பகவான்.
    """""""""""**************"""""""""""
    ஸ்ரீ குரு பகவான் நீசம்,அஸ்தமனம்  மற்றும் பகை பெற்று  6,8,12 போன்ற மறைவிடங்களில் இருந்து பாவர் நட்சத்திர சாரமும்,சுபர் பார்வையற்று இருப்பினும் புத்திர தோஷமாகும்.
    ஒன்பதாமிடம்
    ++++++++++++
          புத்திரஸ்தானம் ஐந்திற்கு ஐந்தாமிடமாக ஒன்பதாம் இடம் திகழ்வதால் ஒன்பதாமிடத்தையும் நன்கு கவனிக்க வேண்டும்.
    ஜோதிடர்களின் பங்கு
    *********************
    திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவருடைய ஜாதகப்படி பால் பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும்.
    தம்பதியர் இருவருக்கும்  பால் உள்ள மரம் வந்து யோனி பொருத்தம் இருந்தாலும் ஜாதக கட்ட ரீதியாக இருவருக்கும் மேற்குறிப்பிட்டப்படி ஐந்தாமிடம் மற்றும் அதன் அதிபதி,புத்திரகாரகன் குரு ஆகியவர்களின் நிலையறிய வேண்டும்.
    ஏனைய தோஷம் உள்ளவர்களுக்கு(செவ்வாய் தோஷம்,ராகு தோஷம்,சனி தோஷம்.....) தோஷம் உள்ளவர்களை இணைத்தாலும் ,
    ஆனால் புத்திர தோஷம் உள்ள ஒரு ஆணின் ஜாதகத்திற்கு புத்திர தோஷம் இல்லாத பெண்ணின் ஜாதகப்படி குழந்தை இருக்க வாய்ப்பு உண்டு.
    இருவருக்கும்  ஜாதக கட்ட ரீதியாக
    புத்திர தோஷம் உள்ள தம்பதியர்களை இணைக்காமல் இருத்தலே நலம்.
    இது ஜோதிடர்களின் தலையாய கடமையாகும்.இதுவரை புத்திர தோஷம் ஏற்பட அடிப்படையான காரணத்தை பகவானின் அருளாளும்,குருவருளாளும் எனக்கு தெரிந்த விஷயத்தின் அடிப்படையில் விளக்கினேன் .
    இனி
    புத்திர தோஷம் ஏற்பட
    பல்வேறு ஜோதிட நூல்கள் கூறும் காரணங்கள்
    **************************************
    மாந்தீரிக சக்கரவர்த்தி ஸ்ரீ குருவாயூரப்ப தாஸன் எழுதியது
    1) சூரியன்,சுக்கிரன்,புதன் ஒன்று கூடி பெண்களுக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பின் கருச்சிதைவு.
    2 ) 7,8 க்கு உடையவர்கள் ஐந்தில் கூடினால் புத்திர சேதம் புத்திர தோஷம் ஏற்படுகிறது.இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
    3 ) லக்கினம் மீனமாகி 5-ம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம் பெற்ற ஜாதகருக்கு முதல் தாரத்திற்கு குழந்தை இல்லை.ஆனால் இளைய தாரம் உண்டெண்றால் புத்திரபேறு ஏற்படலாம்.
    4) 1,5,9 -ல் சனி வலுத்து சுபர் பாராது இருப்பின் புத்திரதோஷம்.
    5) ஐந்தாம் அதிபன் பாவாதிபன் சனி உடன் கூடியிருப்பின் வீர்ய பலன் குறைந்து நீராகி புத்திரபேறு தடைபடும்.
    6) பெண் ஜாதகத்தில் ஜன்ம லக்கனத்திற்கு உரியவனும்,9-க்கு  உடையவனும் பரிவர்தனை பெற்றால் பிரசவத்தின்போது வயிற்றில் மகவுடனேயே தாயும் மரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
    7)  பெண்ணுக்கு கடகம் லக்கினமாகி விருட்சகத்தில் சந்திரன் நீசனாகி இருந்தால் ஆண்குழந்தை சொற்பம்(அரிது)
    8) 5-ம் அதிபதியுடன் 6-ம் அதிபதி கூடியிருக்க இதில் ஆறாம் அதிபதி மட்டும் வலுத்திருந்தால்(சூரியர்,சந்திரர்களுக்கு மட்டும்தான் பொருந்துவார்) .இந்த மாதிரியாக கூடிய 5,6 அதிபதிகளை சுபர் யாரும் பார்க்காமல் இருந்தால் அவன் பகைவன் இட்ட சாபத்தால் மகப்பேறின்றி துன்புறுவான்.
    9) 4-ம் இடத்திலும்,12-ம் இடத்திலும் பாவிகள் இருக்க 5-ம் அதிபதியுடன் பாவிகள் கூட அல்லது சனி கூட பெற்ற தாய் இட்ட சாபத்தால் மகப்பெறு அற்று போகும்.
    10) ஒன்பதிலே பாவி இருக்க ஐந்தாம் இட அதிபதியுடன் சனி கூட திரிகோன ஸ்தானங்களில் ஒன்றில் குளிகன்(மாந்தி) இருக்க தந்தை செய்த பாவத்தால் மகவுகள் பிறக்காது.பிறநதாலும் அழிந்துவிடும்.
    11 ) தனுசு அல்லது மீன வீட்டில் சந்திரன் இருக்க ஐந்தாம் இடத்தில்  பாவிகள் இருக்க ,சந்திரனையும் அந்த பாவர்களையும் சுபர்கள் பாராது விட்டால் அவனுக்கு ஓளரஸ் மகவு இல்லை. ஓளரஸ் என்றால் தன் இந்திரியத்திற்கு பிறக்கும் குழந்தை என்பது பொருள்.
      மனைவி வழி தவறிச்சோரம் போய் பிறர் இந்திரியத்திற்கு குழந்தை பிறந்து அதை தகப்பன் தனது என்றே எண்ணி உண்மையை அறியாமல் தன் மகவாக எண்ணி உண்மையை அறியாமல் வளர்ப்பான்.அல்லது 
    இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்றார்போல் மாற்றான் இந்திரியத்தை ஊசி மூலம் செலுத்தி அதன்மூலம் பெற்ற குழந்தையாக இருக்கும்.
    12) லக்கனத்திற்கு ஐந்தாம் வீட்டை சனி,ராகு,கேது இவைகளில் ஒருவர் சந்திரனுக்கு கேந்திரங்களில் நின்று பார்ப்பாராகில் குழந்தை பிறந்து  இறந்து போகும்.
    கேரள ஜோதிடத்தில் உள்ளபடி புத்திரபாக்கியம்
    ********************************
    1)  ஐந்துக்குடையவர் புதன் வீட்டில் ஏகனாய்(தனித்து) நின்றால் குழந்தை பாக்கியம் இல்லை.கூட்டுகிரகம் இருந்தால் அல்லது பாரத்தால் மறுதாரம் செய்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறக்கும்.
    2)  குருவோடு சூரியன்  அவருக்கு ஏழில் குஸனும் ,சனியும் சேர அவனுக்கு புத்திரவம்சம் நிற்க வாய்ப்பு குறைவு.சந்திரனும் கூடியிருந்தால் தாய்க்கு தோஷம் ஆகும்.
    3 )  திருவாதிரை அல்லது அஸ்த நட்சத்திரலாவது புத்திரஸ்தானாதிபதி புத்திரர் இருக்க வாய்ப்பு குறைவு.
    4 ) மிருகசீரிடம்,புனர்பூச நட்சத்திரத்தில்5-ம் அதிபதி இருப்பின் வெகுகாலம் கழித்து புத்திரபாக்கியம் ஏற்படும்.
    5 ) புத்திஸ்தானாதிபதி புதனாக இருந்து சனி வீடு ஏறினாலும்,சனியாக இருந்து புதன் வீடு ஏறினாலும் புத்திரபாக்கியம் ஏற்பட வாய்ப்பில்லை.
    சில்லறைக்கோவை -298 -ம் பக்கம்
    *************************************
    லக்கனம்,பஞ்சமஸ்தானம்,ஒன்பதிலும் சனி,ராகு,கேது,மாந்தி இருந்தால் முன் ஜன்மத்தில் செய்த பழிபாவத்தினாலும்,கருவழித்தனத்தாலும்,சர்ப்பத்தை கொன்ற பாவத்தினாலும் சந்தநி இல்லாமல் கலங்குவார்கள்.ஆனால் அதற்குரிய கர்ம சாந்தி செய்ய கீர்த்தி பிரகாசம் பொருந்திய பிள்ளை பிறக்க வாய்ப்பு ஏற்படும்.
    மேலும் பல அனுபவகருத்துக்கள்
    1) புத்திஸ்தானாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று அஸ்தங்கம் ஆனாலும் புத்திரதோஷம் ஏற்படும்.
    2) 5-ல் ராகு,கேது,செவ்வாய்,சூரியன் மற்றும் சனி யாராவது ஒருவர் இருந்தாலும்,ஐந்தாம் வீடு சனி அல்லது புதன் வீடாகி அவ்வீட்டாதிபதி சனியுடன் இணைந்தாலும் புத்திரயோகம் இல்லை.
    மேற்கண்ட காரணங்களால் புத்திரதோஷம் ஏற்படுகிறது..புத்திரதோஷங்களை பரிகாரங்களால் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

  11. ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!
    ""செல்வம் எனறு செல்லப்படும் செல்வம் அனைத்தையும் படைத்து பல்லோறுடன் உண்டு மகிழும் செல்வந்தராயினும் சின்னஞ்சிறு கைகளை நீட்டியும் ,குறுகுறுவென நடந்தும் ,தட்டில் இட்ட சோற்றை தரையில் கொட்டியும்,கைகளால் பிசைந்தும், நெய்யிட்ட சோற்றை உடம்பின்கண் படச்செய்தும்,இன்பமயக்கத்தில் ஆழச்செய்யும் புதல்வரை பெறாதவர்க்குப் பயனால் முடிக்கப்படும் பொருள் யாதுமில்லை என்பதால் பிள்ளைப்பேறு எவ்வளவு முதன்மையானது.
    ஓருவன் பெறும் செல்வங்களுள் நன்மக்களை பெறுதலே சிறப்பானது.
    பிள்ளையில்லாத பாக்கியம் எவ்வளவு பெற்றாலும் பிள்ளை பாக்கியத்திற்கு நிகராகது.
    இக்கருத்தை மக்களின் புறவாழ்வுபற்றி கூறும் "புறநானூறு"
    அழகாக எடுத்துரைக்கிறது
    ""படைப்புப்பல படைத்துப் பலரோடுண்ணும் உடைப்பெருஞ்செல்வராயினும் மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்துத் மயங்குறு மக்களை யில்லோர்க்குப்
    பயக்குறையில்லைத் தாம் வாழும் நாளே""
    புத்திர ஸ்தானம் என்பது:
    ***************************
    ஓரு மனிதனுக்கு புத்திர ஸ்தானம் என்பது அவனது ஜாதகத்தில் உள்ள பணிரெண்டு கட்டங்களில் ஐந்தாவது கட்டமாகும்.இதே கட்டம் தான் பூர்வபூண்ணியஸ்தானமுமாகும்.இதிலிருந்து முற்பிறப்பில் நல்ல புண்ணிய காரியங்களில் ஈடுபட்டிருந்தால் இப்பிறப்பில் நல்ல புத்திரம் கிடைக்கும் என்பதனை சூட்சுமமாக தெரிவிக்கும் பொருட்டே வைத்துள்ளார்கள்.
    ஐந்தாமிட அதிபதியை புத்திரஸ்தானாதிபதி என்போம்.
    பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு
    பகாவானை புத்திரகாரகன்  என அழைக்கப்படுகிறது.
    பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
    புத்திரபாக்கியம் பற்றி அறிய நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியவை:
    ***********************************
    5 ம் இடம் ,9 ம் இடம் மற்றும் அதன் இரு அதிபதிகள் மேலும் நவகோள்களில் புத்திரகாரகன் என அழைக்கப்படும் குரு பகவான்
    மேற்கண்ட இவர்களின் நிலையை கவனிக்கவேண்டும்.
    புத்திரபாக்கியம் அமைய எனது அனுபவ ரீதியான  கிரக நிலை விளக்கம்:-
    +++++++++++++++++++++++
    1)  புத்திர ஸ்தானாதிபதி சுப நட்சத்திர  சாரம் பெற்று  ஆட்சி,உச்சம்,கேந்திரம்(1,4,7,10),கோணம்(1,5,9),மற்றும்  நட்பு பெற்று
    சுபர் பார்வை பெற வேண்டும்.மறைவு ஸ்தானங்களில் (6,8,12)  இடம் பெற கூடாது.
    இங்கு சுபர் என குறிப்பிடபடுவது  குரு,சுக்கிரன்,வளர்பிறை சந்திரன்,பாவியோடு சேராத புதன்.
    2)  புத்திரஸ்தானத்தில் அசயர்களான ராகு,கேது,சனி(செவ்வாய் தவிர ஏனெனில் காம காரகன் என்பதால்)  போன்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தல் நலம்.
    3)  புத்திரகாரகன் குரு நீசம் அஸ்தமனம்,பகை பெறாமல்  பலம் பெற்று (ஆட்சி,உச்சம்,கேந்திரகோணம்)  மறைவு ஸ்தனங்களாகிய 6,8,12 இடம் 
    பெறாமல் சுப சாரமும்,பார்வையும் பெற்றிருக்கவேண்டும்.
    4)  ஐந்துக்கு ஜந்தாமிடமாக ஒன்பதாமிடம்  அமைவதால் 
    பாக்கிய ஸ்தானத்தையும் கவனித்தல் நலம்.
    5) ராசிக்கு ஐந்தாமிடத்தையும் மேற்கண்ட அமைப்புபடி உள்ளதா எனவும் கவனிக்க வேண்டும்
    மேற்கண்ட அடிப்படையில் கிரகங்கள் இருப்பின் அவர்களுக்கு பார்போற்றும் புத்திரன் அமைவான்.
    குழந்தை பாக்கியம் அமைய நான் கற்ற பல்வேறு ஜோதிடநூல்களின் கருத்து;-
    **************************************
    1)  கடக லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு  குரு லக்கனத்தில் உச்சம் பெற்று இருந்தால் சத்புத்திர பாக்கியம் ஏற்படும்.
    2)  குரு பகவான் 9 -ல் ஆட்சி பெற்றிருந்தால் சத்புத்திர பாக்கியம் ஏற்படும்.
    3 )  குரு பகவான் 2 அல்லது 11 -ல் இருப்பின் புத்திர பாக்கியம் ஏற்படும்.
    4 )  குருவுடன் சந்திரன் இணைந்து  லக்கினம் 9  அல்லது 11 ல் இருந்தால் ஜாதகருக்கு சுட்டிதனமுள்ள புத்திசாலிதனமான குழந்தை பிறக்கும்.
    5)   குரு பகவான் துலாத்தில்  சுக்கிரனுடன்  இருப்பின் ஆண்,பெண் குழந்தைகள் பிறக்கும்.
    6)  செவ்வாய் 11-ல் சுக்கிரனுடன் இணைந்திருப்பின் ஜாதகருக்கு ஆண் பெண் வாரிசு ஏற்படும்.
    7)  செவ்வாய்  4-ல் சுக்கிரனுடன் இணைந்து காணப்படின் தாமத குழந்தை பாக்கியம் ஏற்படும்.
    8 ) குருவும், செவ்வாயும் இணைந்து 9  அல்லது  10- ல் இருப்பின் ஆண் குழந்தைபாக்கியம் ஏற்படும்.
    9 )  குருவும்,செவ்வாயும் இணைந்து 
    இரண்டு அல்லது நான்கில் இருந்தாலும புத்திரபாக்கியம் ஏற்படும்..குருவும்,ஜந்தாம் வீட்டிற்குரிய கோளும் சமசப்தமாக பார்த்துக்கொண்டாலும் புத்திர பாக்கியம் உண்டு.
    10 ) குரு நின்ற இடத்திலிருந்து  5- மிடத்தில் சுபகோள் நின்றாலும் புத்திரபாக்கியம் உண்டு.
    அதிக புத்திர பாக்கியம்  ஏற்பட
    ++++++++++++++++++++++++,+,
    1) ஐந்தாமாதிபதியும்,ஒன்பதாமாதிபதியும் சுபஸ்தானம் பெற்று கேந்திர,திரிகோணம் பெற்று சுபகிரகங்களால் பார்க்கப்பட்டால் வெகு புத்திரர்கள் உண்டு.
    2 )கன்னி லக்கனமாகி ஐந்தாமிடத்தில் செவ்வாய் உச்சம் பெற்றால்  ஜந்து குழந்தைகள் உண்டு.
    3) துலாம் ஜென்ம ராசியாக இருந்து ஐந்தில் சனி ஆட்சி பெற்றால் பல புத்திரம் உண்டு.
    இரட்டை குழந்தை பிறக்க:
    ***************************
    1)  ஜந்தாமாதிபதியும்,மூன்றுக்குடையவரும் கூடி மூன்றில் இருப்பின் இரட்டை குழந்தை பிறக்கும்.
    ஆண்குழந்தைகளே பிறக்கும் ஜாதகம்:-
    +++++++++++++++++++++++++++++
    ஐந்தாமாதிபதி ஆண்கிரகமாகி ஆண் ராசியில் இருந்து குரு,சூரியன்,செவ்வாய் இவர்களால் பார்க்கப்பட்டால் ஆண் குழந்தைகளே பிறக்கும்
    பெண்குழந்தைகளே பிறக்கும் ஜாதகம்:-
    +++++++++++++++++++++++++++
    1) ஐந்தாமாதிபதி பெண் கிரகமாகி பெண் ராசியில் இருந்து சனி,புதன்,சுக்கிரன்,ராகு இவர்களால் பார்க்கப்பட்டால் பெண் குழந்தைகளே பிறக்கும்.
    2 )மீனத்திற்கு ஜந்தாமிடம் கடகம் இதில் குரு உச்சம் பெற்றிருந்தால் பெண் குழந்தை பிறக்கும்.
    3 ) புத்திர தோஷமுள்ள. ஜாதகருக்கு ஐந்தாமிடத்தில் குரு இருந்தாலும் பார்த்தாலும் பெண் புத்திரம் ஏற்படும்
    4 ) ஐந்தாமிடம் மகர ராசியாக இருந்து அதில் சனி ஆட்சி பெற்றால் பெண் புத்திரம்.
    புகழுடைய குழந்தை பிறக்க
    +++++++++++++++++++++++++
    "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னாற்றான்கொல் எனும் சொல்"
    என்ற குறள்படி "இது போன்ற பிள்ளையைப் பெற இவனது தந்தை என்ன தவம் செய்தானோ என  பிறர் போற்றும்படியான  பிள்ளைகளைப்பெற உங்களது ஜாதகத்தில்
    1)  குரு,சந்திரன்,செவ்வாய் மூவரும் இணைந்து லக்கனம் ,2,4,9,10,11 ஆகிய இடங்களின் ஒன்றில் இருப்பின் ஆண்-பெண் குழந்தைகள் ஏற்பட்டு பிறக்கும் சிறு வயதிலே பெறும் புகழை அடையும்.
    2) தனுசு லக்கனத்திற்கு ஜந்தாமாதிபதி செவ்வாய் கேந்திர,திரிகோண ஸ்தான அமைப்பு பெற்று ஜந்தாமிடத்தை குரு பார்த்தால் புத்திரத்தால் பெருமை ஏற்படும்.தந்தையை விட புகழுடையவர்களாக மாறுவார்கள்.
    நிறைவுரை:-
    "குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்செல் கேளாதவர்"
      தாம் பெற்ற குழந்தையின் மழலைச்சொல் கேளாதவர்தான் யாழ் இனிது,குயிலின் குறள் இனிது
    என்பார்கள் என்கிறார் திருவள்ளுவர்.
    புத்திரம் பாக்கியம் பற்றி எனக்கு தெரிந்த ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.அடுத்த பதிவில் புத்திரதோஷம் ஏன் ஏற்படுகிறது அதற்கான பரிகாரங்களை உங்களுடன் பகிரலாம்  என உள்ளேன்.