Wednesday, June 25, 2014

மவுஸ் பற்றிய முழுமையான பயன்கள்

zjVFck0.jpg?1



கணனி பயன்படுத்தும்போது மவுஸ் பற்றிய முழுமையான பயனை நாம் அறிந்துகொள்வதில்லை.

குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

இதோ அதன் பயன்கள்:

பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட,Mouse +Shift Key பயன்படுத்த இடம் தருகின்றன.

தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர்,Shift Keyஅழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும்.

எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

இந்த வகையில் Alt Key வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம்.

டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும். டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம்.

இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது.

இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம்.

பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.

இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.

Shift Key அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம்.

tVfoTrU.jpg?1

சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம். இரண்டு மற்றும் மூன்று முறை Click: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்
  • 0

Tuesday, June 24, 2014

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் நெல்லிக்காயின் மகத்துவம் தெரியுமா?

கருத்துகள்

NATO Secretary General Statement in...
MORE VIDEOS
ஆன்மிக மகத்துவம்:

ஏகாதசியில் நெல்லி மேல் பட்ட நீரில் நீராட, துவாதசியில் நெல்லி உண்பவன் கங்கையில் நீராடிய பயனும், காசியை பூஜித்த பலனையும் பெறுகின்றான். சூரியன் தவிர மற்றோரை நெல்லியால் பூஜிக்கலாம் அமாவாசையன்று நெல்லியை பயன்படுத்துதல் கூடாது. கோயில் கோபுரம் கலசங்களில் நெல்லியையும் போடுவர். மேலும் விமான உச்சிக் கலசத்தின் கீழாக நெல்லிக்கனி வடிவத்தில் ஒரு கல்லை செதுக்கி வைப்பார் இதற்கு ஆமலகம் என்று பெயர்.

நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்ப் பொடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு. நெல்லிமரம் வளரும் வீட்டினைத் தீய சக்திகள் நெருங்காது, துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும்.

நெல்லிக் கனியை நிவேதனம் செய்வதாலும் அதன் இலைகளால் அர்ச்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து நெல்லிக்கனியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திருவருளைப் பெறுவர்.

அறிவியல் மகத்துவம்:

ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இரவில் நெல்லிக்காய் சாப்பிட கூடாது. சாப்பிட்டால் புத்தி, வீர்யம் குறைந்து விடும்.

பசும்பொன் தேவர்


பசும்பொன் தேவர் 1908 அக்டோபர் 30
அன்று “பசும்பொன்” என்ற
சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தார். 1963 அக்டோபர்
30 அதிகாலையில் மதுரை திருநகரில் காலமானார்.
மொத்தம் 20,075 நாட்கள் இந்த மண்ணில் வாழ்ந்த
பசும்பொன் தேவர், இதில் 4000
நாட்களை சிறையிலேயே கழித்தார்.
இவர் இளமைக்காலத்தில் படித்துக்கொண்டிருந்த
போது முதன் முதலாக சாயல்குடியை சேர்ந்த
சேதுராமன் செட்டியார் அவர்கள், சாயல்குடியில்
விவேகானந்தர் வாசக சாலையை நிறுவி,
அதை தேவர் திருமகனார் அவர்களைக்
கொண்டு திறந்து வைக்க செய்தார்.
இது தான் பொது வாழ்கையில் அவர் ஏறிய முதல்
மேடையாகும். அந்த இடத்தில தான் தேவர்
திருமகனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இப்படியாக தொடங்கிய பொது வாழ்க்கை,
விடுதலை வேட்கையாக ஈர்க்கப்பட்டு,
தென்பாண்டி சீமையினுடைய, குறிப்பாக
தமிழகத்தினுடைய இளைஞர்களின், நாடி,
நரம்புகளை முறுக்கேற்றி, சுதந்திர
வேட்கையை உருவாக்கி, தன்னுடைய
பேச்சாற்றலால், சுதந்திரப் போராட்டதிற்கு பெரும்
படை திரட்டிய போராளிகளில் இவரும் ஒருவராவார்.
காங்கிரஸ் காரராக பொது வாழ்கையில் நுழைந்த
பசும்பொன் தேவர், நேதாஜியின் பார்வர்டு பிளாக்
இயக்கத்தின் தலைவராக இருந்த பொது மறைந்தார்.
தேர்தல் களத்தில் இராமநாதபுரம் ராஜாவைத்
தோற்கடித்த வரலாறும், சட்டமன்றம்,
பாராளுமன்றம் என இரு பதவிகளுக்கும்
ஒரே நேரத்தில்
போட்டியிட்டு வாக்கு கேட்டு தொகுதிக்குச்
செல்லாமலேயே வெற்றிவாகை சூடிய வரலாறும்
பசும்பொன் தேவருக்கு மட்டுமே உண்டு.
தனி நபர் ஒழுக்கம், தியாக உள்ளம்,
அநீதியை கண்டு எதிர்க்கும் ஆண்மை, தெய்வ
பக்தியையும் தேசபக்தியையும்,
இரு விழிகளாகக்கொண்டு அமைத்துக்கொண்ட
வாழ்க்கை, தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகரற்ற
புலமை, தன்னலம் நாடத் தகைமை என பல
சிறப்புகள் அமைத்திருந்த போதிலும், அவர்
“அரிஜனங்கள்” என்று அழைக்கபடுகின்ற
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களுடைய
உயர்விற்காகும் பட்டபாடுகள் மகத்தானதாகும்.
1957 ல் நடந்த பொது தேர்தலில் முதுகுளத்தூர்
சட்டமன்ற தொகுதிக்கும், பாராளுமன்ற
தொகுதிக்கும் பசும்பொன் தேவர் போட்டியிட்டார்.
இரண்டிலும் வெற்றியும் பெற்றார். முதுகுளத்தூர்
சட்டமன்ற தொகுதியை ராஜினாமா செய்ததால்,
வந்த இடைதேர்தலில் சசிவர்ணத்
தேவரை வேட்பாளராக நிறுத்தினார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும்
வேட்பாளரை நிறுத்தியது. இருப்பினும் சசிவர்ணத்
தேவரே வென்றார். காங்கிரஸ்
கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு,
அது கலவரமாக மாறி, இறுதியில் கொலையில்
முடிந்தது. இந்தக் கொலை வழக்கில் பசும்பொன்
தேவர் இணைக்கப்பட்டு, சிறை வாழ்ந்து, குற்றம்
தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலையானார்.
இரண்டு கட்சிகளுக்கு இடையே நடந்த கலவரம்
இரண்டு ஜாதிகளுக்கு இடையே ஏற்பட்ட
கலவரமாக பிரசாரம் செய்யப்பட்டு,
அனைத்து கொடுமைகளும் நடந்தன. அதன்
காயங்கள் இன்றும் அப்பகுதி மக்களிடம்
வடுக்களாக இருந்து வருகின்றன.
இந்த பின்புலத்தோடு பசும்பொன் தேவர் அரிஜன
மக்களுக்காக ஆற்றிய பணிகளைப் பார்க்க
வேண்டும். அப்போது தான் பசும்பொன் தேவரின்,
சிறப்பும், இரண்டு சமூகத்தாரிடையே வளர
வேண்டிய நட்பும் புலப்படும்.
காந்திஜி அந்நிய துணி எதிர்ப்பை மக்களிடம்
கொண்டுசென்ற அதே கால கட்டத்தில் அரிஜன
மக்களை ஆலையதிற்க்குள் அனுமதி மறுக்கும்
உயர் சாதியினர் செயலை கண்டித்து, “அரிஜனங்கள்
ஆலய பிரவேசம் செய்ய வேண்டும், அதற்க்கு தேச
பக்தர்கள் வழிவிடவேண்டும்” என்று முழங்கினார்.
அதனால் இந்தியா முழுவதும் தேச பக்தர்கள்
அரிஜன மக்களை ஆலயத்திற்கும்
கொண்டு செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மதுரையில் தேசபக்தர் வைத்தியநாதையர்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அரிஜன
மக்களை அழைத்துச் செல்ல எண்ணினார்.
இதனை அறிந்த சனாதனிகள் எதிர்க்க திட்டமிட்டனர்.
இந்த எதிர்ப்பைசமாளிப்பதற்காக, வைத்தியநாத
ஐயர், மதுரை எட்வர்டு ஹாலில் ஆலோசனைக்
கூட்டம் ஒன்றிற்கு திட்டமிட்டார். இந்த கூடத்தில்
கலந்து கொண்டிருந்த தேவரை இந்த போராட்டம்
வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டினார்.
பசும்பொன் தேவரும் அதற்கு உறுதியளித்தார்.
இதை அறியாத சனாதனிகள், “மீனாட்சி கோவிலில்
அரிசனங்களுடன் நுழைந்தால் மிகப்பெரிய
விளைவுகைளை சந்திக்க வேண்டியது வரும்”
என்ற அச்சுறுத்தல் நோட்டிசை வெளியிட்டனர்.
இதற்க்கு பதிலாக தேவர், “ஸ்ரீ வைத்தியநாத ஐயர்,
மீனாச்சி அம்மன் ஆலயத்திற்குள்
அரிஜனங்களை அழைத்துக்கொண்டு
உள்ளே நுழைகிறபோது சனாதனிகளால்
ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகள் கழகம்
விளைவிக்கப் போவதாக கேள்விப்படுகிறேன்.
ஹரிஜனங்களை பயங்கரமான ஆயுதங்களால்
தாக்கி,
அங்கயற்கண்ணி ஆலயத்தை ரத்தக்கறை படியச்
செய்யப்போவதாக எல்லாம் எனக்கு தகவல்
கிடைத்துள்ளது.
சனாதனிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த
ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன்.
வைத்தியநாத ஐயர்
அரிஜனங்களை அழைத்து வருகிறபோது அடியேனும்
வருவேன்.ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த
ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில்
சந்திப்பேன்”. என்றி துண்டு பிரசுரம் வெளியிட்டார்.
1939 ஜூலை 8 அன்று அரிஜன மக்களுடன்
வைத்தியநாத ஐயர் சென்ற போது, அவருடன்
பசும்பொன் தேவரும் சென்றார். ஆலய வாசலில்
பசும்பொன் தேவரின் பற்றாளர்கள் எதற்கும்தயார்
நிலையில் நின்றார்கள். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த
சனாதனிகளும், அவர்களுடைய ரவுடிகளும் அந்த
திசைப்பக்கமே தலை காட்டாமல் தப்பித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்த
அரிஜனங்கள்
மீனாட்சி அம்மனை தொழுது மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வின் மூலமே தாழ்த்தப்பட்ட மக்களின்
சார்பாக சிங்கமே வந்துவிட்டது, என்பதை எதிரிகள்
உணர்ந்து கொண்டார்கள்.
1954 மார்ச் மாதத்தில், அன்று “சென்னை ராஜதானி”
என்று அழைக்கப்பட்ட தமிழக சட்ட மன்றத்தில், ”
அரிஜன முன்னேற்றம்” பற்றிய விவாதம் நடந்தது.
அந்த விவாதத்தில் கலந்து கொண்டு மார்ச் 24
அன்று தேவர் பேசியது கவனம்
கொள்ளத்தக்கது ஆகும். அந்த உரையில்,
“ஆதி காலத்தில் தொழிலின் பேரால்
ஜாதி வகுக்கப்பட்டது எனபது தான் தமிழ்ச்
சான்றுகளும், சாஸ்திரங்களும் கூறுகின்ற
உண்மை. அதற்கு உதாரணம்
ஆண்களை அழைக்கின்ற காலத்தில் ஒரே பெயர்
பலருக்கு இருக்கிறது என்பதன் காரமமாக,
ஒரே பெயருடைய பலரை கூப்பிடும்
பொழுது ‘இன்ன தேவர்’, ‘ இன்ன செட்டியார்’,
‘இன்ன ஐயர்’ என்று பெயர் வைத்த தமிழ்
பெரியோர்கள் , பெண்களை அழைக்கும் போது அந்த
பெயரின் கடைசியில் வால் வைத்து கூபிடாமல்,
அதாவது, ‘இன்ன பிரமனத்தி’, ‘இன்ன செட்டிச்சி’
என்று கூப்பிடாமல், அனைவரையும், ‘இந்த
அம்மாள்’, ‘அந்த அம்மாள்’ என்று கூப்பிடுவதுதான்
பழக்கமாக இருந்து வருகிறது.
இது நீண்ட காலமாக இந்த நாட்டில்
அனுஷ்டித்து வருகிற சித்தாந்தமாகும்.
அப்படி இருக்கும் போடு ஆண்களுக்கு மாத்திரம்
தொழிலின் பெயரை பின்னால் வைத்து அழைத்து,
ஒரே பெயருடைய பல நபர்கள் தொழிலின் பெயரால்
வித்தியாசப்படும் பொருட்டு செய்த சகாயமாகும்’.
என்றும் மனிதனில் ஏற்ற தாழ்வுகள்
இல்லை என்று குறிப்பிட்டு விட்டு, பின்வரும்
உதாரணத்தையும் சொல்கிறார்; அடியேனுடைய
உடம்பில் இரண்டு கைகள் இருக்கிறது.
ஒன்று வலது கரம்; இது உண்ணவும்,
எண்ணுகின்ற எண்ணத்தை எழுத்து மூலமாக
வெளிப்படுததவும் பயன்படுகிறது.
இன்னொன்று இடது கரம்,
உடம்பிலிருந்து வெளிவரும்
அசுத்தங்களை அப்புறப்படுத்தி,
உடம்பை தூய்மையாக வைத்துக்கொள்ள
பயன்படுகிறது.
அனால், இறைவனையோ,
பெரியவர்களையோ வணங்குகிறபோது,
இரண்டு கைகளையும் ஒன்றாக சேர்த்துதான்
வணங்க வேண்டும். இதுபோல
அணைத்து சமுதாய மக்களும் இரண்டு கைகள்
போல இணைந்தால் தான் சமுதாயத்தில் மக்கள்
அனைவரும் செம்மையாக வாழ்ந்திட முடியும்.
மேலும், சமுதாயத்தின் பொருளாதார ரீதியான ஏற்ற
தாழ்வு பற்றி தேவர் பேசும்போது ” பெரும்பாலான
நிலங்கள் வீணாகக் கிடக்கின்றன.
அந்த பெரும்பாலான
நிலங்களை தர்காஸ்து கொடுக்கிற பொழுது பழைய
அரசாங்கத்தின் பழக்கபடியே உயர்ந்தவர்கள்,
வேண்டியவர்கள்
என்பவர்களுக்கு கொடுக்கப்படுகிறதே தவிர, இந்த
ஏழைகளுக்கு ஏன் சலுகை காட்டப்படுவதில்லை?
அப்படியே ஏழைகளுக்கு கொடுக்கப்பட்டாலும்,
அதன் பின்னால் இருக்கின்ற பணக்காரர்களுக்க
ு மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற
பழக்கத்தை நிறுத்திக்கொண்டு, இந்த
ஏழைகளுக்கு ஒரு ஏக்கர், அரை ஏக்கர்
விவசாயத்திற்கு லாயக்காக புதிதாக நிலம்
வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும்
எதிர்பாராமல், முயற்சி செய்து வாழ
வசதி ஏற்படும்.
இதே உரையில், ‘ மதுரையில் அரிஜனங்கள்
தங்குவதற்கு ஒரு விடுதி ஆயிரக்கணக்காக பணச்
செலவில் கட்டப்பட்டிருக்கிறது. அது நகரத்தின்
மத்தியில் இருந்திருக்குமேயானால், பல
அரிஜனங்கள் வந்து தங்கவும், அவர்கள் இதர
சமூகத்தினரோடு, பழகவும் வசதி அளிக்கும்’
என்று குறிப்பிட்டார்.
அதே போன்று அரிஜன
மக்களுக்கு கட்டிக்கொடுக்கும் பள்ளி, விடுதி,
வீடு ஆகியவற்றை ஊருக்கு வெளியே கட்டிகொடுப்பதின
ால், அவர்கள் காலம், காலமாக தனித்து வாழும்
சூழ்நிலை ஏற்படுகின்றது. இதைத்தான் பசும்பொன்
தேவர் தனக்கே உரிய பாணியில் அன்றைய
ஆட்சியாளர்கள் கட்டிய விடுதி பற்றி குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் அரிஜன
மக்களுக்காக வலியுறுத்திய
அதே கருத்துக்களை வலியுறுத்தி, “ஹரிஜன
மக்களுக்கு எனது வேண்டுகோள்” என்ற
தலைப்பில், ‘கண்ணகி’ பத்திரிகையில் ஓர்
கட்டுரையையும் பசும்பொன் தேவர் எழுதினார்.
இந்த கட்டுரையை இன்றைய இளைய
தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டும்
அப்போதுதான் அரிஜன மக்கள் மீது பசும்பொன்
தேவர் கொண்டிருந்த அன்பும், அவர்களுக்காக அவர்
சொல்லிய கருத்துக்களும் தெரியும்.
பசும்பொன் தேவர் திருமணம் செய்துகொள்ள
வில்லை என்பதும்,
அவருக்கு வாரிசு இல்லை என்பதும்
அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர்
எழுதி வைத்த இனாம் சாசனம் பற்றி எத்தனை பேர்
அறிவர்?
1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான
எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர்,
திருச்சுழி பத்திரப் பதிவாளரை, தம் இருப்பிடத்திற்க
ு அழைத்து ஓர் இனாம்
சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய
சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில்
ஒரு பாகத்தை தனக்கு வைத்துக்க் கொண்டு மீதி 16
ப்பன்ன்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.
அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில்
பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும்
இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர்
பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய
சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில்
இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த
பெருந்தகையாளன் பசும்பொன் தேவர்.
பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள்,
இளைஞர்கள், தேவர் திருமகனாரின்
வீட்டிலேயே நிரந்தரமாக
தங்கி இருந்து தங்களது கல்வி, உணவு,
உடை தேவைகளை, சிறப்பாக பெற்றிருக்கிறார்கள்.
தேவர் திருமகனாரின் வீட்டின் சமையர் கூடத்தில்
அடுப்பு அனைக்கப்பட்டதே கிடையாது. அந்த
அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய
மக்களை நேசித்தவர். தீண்டாமை என்பது நாம்
செய்யும் பாவம் என்ற மகாத்மா காந்தியடிகளின்
சொல்லுக்கு ஏற்ப, நான் தமிழன், நான் இந்தியன்
என்று முழக்கமிட்டவர் தேவர்.
பசும்பொன் தேவர் அரிஜங்னகள் மீது கொண்டிருந்த
அன்பை, அதுவும் பசும்பொன்
தேவரை எதிர்த்து அரிசயல் நடத்திய காங்கிரஸ்
கட்சியில் இருந்த அதுவும் நாடாளுமன்ற
உறுப்பினராய் இருந்த ஒருவர்
சொல்லுவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
1952 ல் பசும்பொன் தேவர் சட்டமன்ற உறுபினராக
இருந்தபோது ஆர்.எஸ். ஆறுமுகம் சட்டமன்ற
உறுபினராக இருந்தார். 1957 ல் நடந்த தேர்தலின்
போது நாடாளுமன்ற இரட்டை தொகுதிக்கு பொதுத்
தொகுதியில் பசும்பொன் தேவர் போட்டியிட்டார்.
தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில் தேவர் தம்
கட்சின் சார்பில் ஒருவரை நிறுத்தினார். பசும்பொன்
தேவரை எதிர்த்தும், தாழ்த்தப்பட்டோருக்கான
பசும்பொன் தேவரின் வேட்பாளரை எதிர்த்தும்,
காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தியது.
அப்படி தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியில்
பசும்பொன் தேவரின்
வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின்
வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான்
ஆர்.எஸ். ஆறுமுகம். இந்த ஆறுமுகம்
சொல்கிறார்; முதுகுளத்தூரை அடுத்துள்ள
தெற்கு காக்கூரில் தேவர் பேசிக்கொண்டு இருந்த
போது ஒருவர்
வந்து ஒரு துண்டு சீட்டை கொடுத்தார்.
அதை தேவர் பார்த்துவிட்டு பையில்
போட்டுக்கொண்டார்.
மற்றொருவர் இன்னொரு சீட்டைக் கொடுத்தார்.
படித்துவிட்டு கையில்
வைத்துக்கொண்டே பேசினார். கூட்டம் முடியும்
நேரத்தில் ஒருவர் எழுந்து, ஆர்.எஸ்.
ஆறுமுகத்தைப் பற்றி பேசுங்கள் என்றார். சற்றும்
சஞ்சலப்படாத தேவர் நிதானமாகக் கூறினார்;
‘என்னிடம் கொடுக்கப்பட்ட இரண்டு சீட்டுகளிலும்
ஆர்,எஸ் ஆறுமுகத்தை பற்றி பேசுங்கள்
என்று தான் இருந்தது. நீங்க வற்புறுத்துவதால்
நான் அவரைப்பற்றி கூறுகிறேன். நான் ஆர்.எஸ்
ஆறுமுகத்தை நன்கு அறிவேன்.
ஆர்.எஸ். என்றே அவரை அழைப்பேன். அவர்
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.
நல்லவர்.நல்ல பண்பாளர்.சிறந்த நண்பர்.
நமது குடும்பர் இனத்தை சேர்ந்தவர்.
எனது சகோதரனை போன்றவர்.
என்று கூறிவிட்டு தனது பேச்சை முடித்துவிட்டு போய்விட்டார்.
அதுவும் அரிஜன மக்கள்
அவரை சூழ்ந்து நின்று கொண்டனர். நான் அவ்வூர்
போவதாக திட்டமிட்டு இருந்தேன். அவர் மக்கள்
எனக்காக மாலைகள் வாங்கி வைத்து இருந்தனர்.
அவற்றை எல்லாம்
தேவருக்கே அணிந்து மகிழ்ந்தனர்.
சிறிதுநேரம் கழித்து நான் போனேன்.
நடந்ததை கூறினார்கள். எனக்கு போட
மாலை இல்லையே என்று வருத்தப்பட்டார்கள். ‘
நீங்கள் வருத்தப்படவேண்டாம். எனக்காக
வாங்கிவந்த
மாலையை தேவருக்கு அணிவித்ததற்காக நான்
ஆனந்தபடுகிறேன்.
நான் எதிர் கட்சிளிருந்தும்
என்னை பற்றி அப்படிகூறிய அந்த
மகானுக்கு மாலை அணிவித்ததே நமக்கு பெருமை என
நான் கூறிக்கொண்டிருந்த போதே, ஒரு தேவர்
மாலையோடு ஓடிவந்தார். ‘
இது தேவருக்கு போட்ட மாலை.
அவரிடமிருந்து தான் நான் வாங்கி வந்தேன்.
நீங்கள் வந்துருகிக்றீர்கள். அகவே,
உங்களுக்கு அதை சூடுகிறேன்’
என்று சூது வாது இல்லாமல் மாலை போட்டார்.
நானும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.
ஆம்! அரிஜன வகுப்பை சேர்ந்த பசும்பொன்
தேவரை எதிர்த்து அரசியல் நடத்திய ஆர்.எஸ்.
ஆறுமுகம் சொல்லிய இந்த
இகல்விலிருந்து பசும்பொன் தேவரின்
சாதி பேதமற்ற உள்ளத்தை அறியலாம்.
தேவர் திருமகனார் தனது பெயருக்கு ஏற்ற
படி தேவர் இனத்திற்கு மட்டும் உரியவர்
என்று நினைத்திருந்தனர் சிலர். ஆனால் தேவர்
திருமகன் தமிழகத்தின் தங்கம். எல்ல இனத்திற்கும்
பொதுவானவர் என்பதை பின்வரும் சம்பவம்
விளக்கும்.
இராமநாதபுரத்தில் ஜாதிக்கலவரம் மூண்ட
பொது மதுரை திலகர் திடலில் நடந்த
பொதுக்கூட்டத்தில் பேசிய தேவர் திருமகன்
அவர்கள், ஜெயராம் செட்டியார், எம்.எல்.சி.
அவர்கள் காரில் கிளம்பிய போது,
மதுரை கோரிபளையத்தில்
வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ஓடிவந்து,
நாடெங்கும் கலவரம் மூண்டுவிட்டது, இந்த
நேரத்தில் உங்களை கைது செய்தால், விபரீத
விளைவுகள் ஏற்படாதா? என்று கேட்டார்.
அப்போது தேவர், “இது அரசியல் சூழ்ச்சி,
இதை புரிந்து கொள்ளாமல் யாரேனும்
ஏழை அரிஜன மக்களை துன்புறுத்துவார
்களேயானால், அவர்கள் என்னுடைய நெஞ்சைப்
பிளந்து இரத்தத்தை குடிப்பதற்க்குச்
சமமாகவே கருதுவேன். மேலும் எல்லோரும்
அமைதி காக்க வேண்டும்” என்று கேட்டுக்
கொண்டு காவல் துறை வேனில் ஏறினார். “

உலகிலேயே தனது பேச்சாற்றலால் மக்களை உருக வைத்தவர் . . . . .

உண்மைச் சம்பவம்.
உலகிலேயே தனது பேச்சாற்றலால் மக்களை உருக
வைத்தவர் . . . . .
நான் 1977 - 1978 ஆம் ஆண்டு கீழச்சேவல்பட்டியில்
உள்ள S.M.S. உயர்நிலைப்பள்ளியில்
( இப்போது மேல்நிலைப்பள்ளி ) 10 ஆம்
வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது தமிழாசிரியர் திரு. சேது ஐயா அவர்கள்
எனது 10. A. பிரிவிற்கு தமிழ் வகுப்புகள்
எடுத்தார்.
திரு. சேது ஐயா அவர்கள் மிகச் சிறப்பாக தமிழ்
வகுப்புகள் எடுப்பார். அவரது வகுப்பு மிக
சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும்,
அத்தனை மாணவர்களையும் கவர்வதாகவும்
இருக்கும். எந்தப்பாடம் எடுத்தாலும், அந்தப் பாடத்
தலைப்பு குறித்து பல நல்ல எடுத்துக்காட்டு
களையும், கருத்துக்களையும் சொல்லிவிட்டு,
அதன் பிறகு பாடத்தைத் தொடர்வது தமிழாசிரியர்
திரு. சேது ஐயா அவர்களின் தனிச்சிறப்பு. அவர்
திறமைமிக்க, சிறந்த மேடைப் பேச்சாளர். பல
பட்டி மன்றங்களில் பங்கு பெற்று புகழ் பெற்றவர்.
செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அப்போது எங்களுக்கு 10 ஆம் வகுப்பில்
உரைநடைப் பாடப் பிரிவில் " பேச்சாற்றல் " என்ற
பாடம் இடம்பெற்றிருந்தது. பேச்சாற்றல் பற்றி பேச
ஆரம்பித்த அவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த
டெமாஸ்தனிஸ் பற்றி விளக்கினார்.
குழந்தைப் பருவத்தில் திக்கி திக்கி பேசிய
டெமாஸ்தனிஸ், பள்ளிக்குச் சென்றபோது சக
மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து, கற்களால்
அடித்ததால், ரத்தக் காயங்களோடு வீடு திரும்பிய
டெமாஸ்தனிஸ், பள்ளிக்குச்செல்ல
மறுத்து விட்டார். தான் திக்கி திக்கி பேசுவதால்
மற்றவர்கள் ஏளனம்
செய்கிறார்களே என்று கவலையடைந்த
டெமாஸ்தனிஸ், தினமும் காலையும், மாலையும்
கடற்கரை சென்று வாயில்
கூலாங்கற்களை போட்டுக்கொண்டு பேசி,
பேசி பயிற்சி பெற்று, நன்றாக பேச துவங்கினார்.
அப்படி வளர்ந்த டெமாஸ்தனிஸ் தான்
பிறகு உலகப்புகழ் பெற்ற பெரும் பெச்சாளரானார்
என்று கூறினார்.
மேலும் தொடர்ந்த தமிழாசிரியர்
மேலச்சிவல்புரி அருகே ஒரு மாலை நேரத்தில் தான்
கேட்ட சொற்பொழிவைப்பற்றி விளக்கத்தொடங்கி
னார். அவரை அவரின் உறவினர் ஒருவர்
அங்கு அலைத்துச் சென்றிருக்கிறார். அந்த
சொற்பொழிவு நடந்த மேடை கூரை வேயப்படாத
திறந்தவெளி மேடையாக இருந்திருக்கிறது. அந்தச்
சொற்பொழிவைக் கேட்க பெரும் மக்கள் கூட்டம்
கூடி இருந்தார்களாம்.
சிறிது நேரத்தில் ஒரு பெரியவர்
பேசத்துவங்கி இருக்கிறார். அழகிய தமிழில்
இனிமையாக, தெளிவாக,
கருத்தாழத்தோடு பேசி இருக்கிறார்.
அவரது பேச்சைத் தவிர, சிறு சத்தம் கூட
இல்லாமல் , அப்படி ஒரு அமைதியாக,
நெகிழ்ச்சியோடு பேச்சைக் கேட்டுக்
கொண்டிருந்திருகிறார்கள் மக்கள் .
பேசத்துவங்கிய சுமார் 30 நிமிடங்களில் கன
மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.
அங்கு கூடி இருந்த பெரும் மக்கள் கூட்டம்,
மழை பெய்வதை சிறிதும் பொருட்படுத்தாமல்
பேச்சைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்திர
ுக்கிறார்கள். மேடையில் பேசிக்கொண்டிருக்கும்
பெரியவர் தனது ஒற்றை ஆள் காட்டி விரலால்
நெற்றியில் வழியும் மழைநீரை வழித்துக்கொண்டு,
கம்பீரமாக நின்று கொண்டு, பேசிக்
கொண்டிருந்திருக்கிறார். அந்தப் பெரியவர்
மழைநீரை வழித்துக்கொண்டு நின்று பேசிய
அழகை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிற
து என்றார் தமிழாசிரியர்.
கடும் மழை நிற்கவில்லையாம். அந்தச்
சொற்பொழிவு நடந்த பகுதி சிறிது தாழ்வான
இடமாம். மழைநீர் சொற்பொழிவு நடந்த இடத்தைச்
சூலத்தொடங்கியதாம். சொற்போழிவைக் கேட்டுக்
கொண்டிருக்கும் மக்களின் இடுப்புக்கு மேல்
தண்ணீர் உயரத் தொடங்கியதாம்.
சிலருக்கு கழுத்து வரை தண்ணீர்
உயர்ந்து விட்டதாம். ஆனால் அந்த பெரும் மக்கள்
கூட்டம் சிறு அசைவு கூட இல்லாமல் தண்ணீரில்
அமர்ந்திருந்து அந்த பெரியவரின் சொற்பொழிவில்
மூழ்கி இருந்தார்களாம். மழை பெய்ய, பெய்ய அந்த
பெரியவரின் பேச்சு மிக மிகக் கருத்தாழத்தொடும்,
உருக்கத்தோடும் கூடியிருந்த மக்களை மெய்மறக்க
வைத்ததாம்.
கொட்டும் மலையில், மக்கள்
கழுத்து வரை தண்ணீர் சூழ்ந்த நிலையில் சுமார் 2
மணி நேரம் அந்த சொற்பொழிவு நடந்ததாம். அந்த
பெரியவர்
சொற்பொழிவை நிறைவு செய்து மேடையிலிருந்து இறங்கும்
வரை, கூடிய மக்கள் கூடத்தில் ஒருவர் கூட
எழவில்லையாம்.
உலகிலேயே தனது பேச்சாற்றலால் மழையையும்,
தண்ணீரையும் பொருட்படுத்தாது, மக்களை உருக
வைத்த அந்த பெரியவர் தான் " பசும்பொன்
முத்தராமலிங்கத்தேவர் " என்றார்.
இன்று வரை " பசும்பொன் முத்தராமலிங்கத்தேவர்
" அன்று ஆற்றிய
சொற்பொழிவு நிகழ்ச்சியை போல், மக்கள்
மெய்மறந்து இருந்த ஒரு நிகழ்ச்சியை நான்
பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை. வரும்
காலத்திலும் " பசும்பொன் முத்தராமலிங்கத்தேவர்"
போன்று ஆற்றல் மிக்க, நாவன்மை பொருந்திய,
பேச்சாளர் இந்த உலகில் பிறப்பது ஐயமே . . .
என்று கூறி முடித்தார் தமிழாசிரியர்.

வாழை இலையின் பயன்கள்

வாழை இலையின் பயன்கள்
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி
காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்
விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை
சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு
தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு
மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது
சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்
இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு
இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில்
தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால்
ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும்
போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற
முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது
ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் குத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி
வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து
அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

ராகு-கேது பரிகாரத் தலங்கள்

ராகு-கேது பரிகாரத் தலங்கள்

கருத்துகள்

NATO Secretary General Statement in...
MORE VIDEOS
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சியைப் போலவே ராகு-கேது பெயர்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், ஜோதிடக் கலை, ராகுவை யோகக்காரகன் என்றும், கேதுவை ஞானக்காரகன் என்றும் உயர்வாகப் பேசுகிறது. ஒருவர் திடீரென்று அதலபாதாளத்திற்குச் செல்வதும், அவரே சிகரத்தில் அமர்வதற்கும் ராகுவும் கேதுவும்தான் காரணம். மனிதனின் Subconcious mind எனும் நனவிலி மனம்தான் ராகு.  அதனால்தான் ஜோதிடத்தில் கனவுகளைப் பற்றி சொல்பவராகவும் ராகு இருக்கிறார். Sixth sense  என்று சொல்லப்படும் ஆறாவது அறிவுதான் கேது.

அதாவது, நம்மால் எளிதில் உணர முடியாத விஷயங்களை உணர்த்துவதுதான் கேது. உடலுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்ட இயற்கை சக்திகளை குறித்த அறிவை அளிப்பவர் கேது. எல்லோருக்கும் சிந்தனை உண்டு. அந்த சிந்தனைகளை ராகுவும், கேதுவும் தூண்டிவிடும் (stimulating)  பணியைச் செய்கிறார்கள். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தனக்கென்று உரிய நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆனால்,  ராகுவுக்கும் கேதுவுக்கும் தனிப் பாதைகள் என்று இல்லை. பன்னிரண்டு ராசிக் கட்டங்களில் இவற்றுக்குத் தனிப்பட்ட வீடும் இல்லை.

ராகுவும் கேதுவும் உண்மையில் கிரகங்களே அல்ல. அதுவொரு நீண்ட நிழல். அந்த நிழலே  கிரகங்களுக்குரிய சக்தியை பெற்றிருக்கிறது. அதனாலேயே அதை shadow planets   என்று அழைத்தார்கள். எனவே, ராகு-கேது நம்முடைய ஜாதகத்தில் எப்படி சஞ்சரிக்கிறார்கள், அந்த சஞ்சாரத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன, அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை ஜோதிடர்கள் சொல்வார்கள்.

பரிகாரங்களாகச் சென்று வணங்குமாறு அவர்கள் அறிவுறுத்தக்கூடிய கோயில்கள் எல்லாம் பெரும்பாலும் நாகங்களே வணங்கிய கோயில்களாகவே இருக்கும். அப்படி அந்தக் கோயில்களில்  வழிபடும்போது, இந்த நிழல் கிரகங்கள் பெயர்வதால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவு களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  பொதுவாகவே நாகநாதர் எனும் திருப்பெயரிலுள்ள அனைத்து சிவாலயங்களும், ஆதிசேஷன் போன்ற நாக மரபினர் வணங்கிய் தலம் யாவுமே ரா கு-கேதுவால் ஏற்படக்கூடிய எதிர்மறை தாக்கத்தை குறைக்கும்.

ஸ்ரீகாளஹஸ்தி
இத்தலம் மிகவும் பழமையானது. புராணம் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலம். பஞ்சபூதத் தலங்களுள் வாயுத் தலமாக விளங்குகிறது. தட்சிண கயிலாயம் எனும் சிறப்பையும் பெற்றது. கண்ணப்ப நாயனார் வீடுபேறு பெற்ற தலம். ஆதிசங்கரர் தம்முடைய சிவானந்தலஹரியில் கண்ணப்பரின் பக்தியை மெச்சிப் பாடுகின்றார். அர்ச்சுனன் தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து காளஹஸ்தீஸ்வரரையும், பரத்வாஜ மகரிஷியையும் வணங்கி சென்றதாக கூறப்படுகிறது. ‘‘அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி’’ என்று இத்தலம் சிறப்பிக்கப்படுகிறது.

பாம்பு, சிலந்தி, யானை மூன்றும் வழிபட்ட தலமும் இதுவே. அம்பாளின் திருப்பெயர் ஞானப் பூங்கோதை. கருவறையில் காளஹஸ்தீஸ்வரர் பேரருள் பெருக்கி அருள்பாலிக்கிறார். அருகிலேயே மனோன்மணி சக்தியின் திருமேனி உள்ளது. கீழே ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் போக மூர்த்தத் திருமேனி உள்ளது. சுகாசன அமைப்பிலுள்ள  இந்த மூர்த்தம் மான், மழு ஏந்தி அபய ஹஸ்த, சிம்ம கர்ண முத்திரைகளுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் அழகுற அமைந்துள்ளது.  இக்கோயிலின் பிரதான சிறப்பே ராகு-கேது தோஷ பரிகார நிவர்த்தியே ஆகும்.

இத்தல ஈசனையும், அம்பாளையும் ராகு, கேது அம்சங்களாகச்  சொல்வது வழக்கம். எனவே, இக்கோயிலில் எப்போதும் தோஷ பரிகார பூஜைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அம்பாள் ஞானப் பூங்கோதையின்  சந்நதி கிழக்கு நோக்கியது. அம்பாள் நின்ற திருக்கோலம். திருவடியில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு அமைந்துள்ளது. அம்பாளின்  ஒட்டியாணத்தில் கேது உருவம் காணப்படும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் பாடிய தலமிது. சென்னையிலிருந்து 110 கி.மீ., திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.

கீழ்ப்பெரும்பள்ளம் 

இந்தத் தலம் கேது பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. சௌந்தர்ய நாயகி சமேத நாகநாதசுவாமி இங்கே அருள்பாலிக்கிறார். கேது,  பிறப்பினால் அசுரன். இயற்பெயர் சுவர்பானு. பாற்கடலைக் கடைந்ததால் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு பரிமாறியபோது சுவர்பானு தேவர்களின் வடிவெடுத்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் அமர்ந்தான். இதைக் கண்ட மோகினி வடிவிலிருந்த மகாவிஷ்ணு சுவர்பானுவை இருகூறாக்கினார். அசுரனின் தலை வேறாகவும், உடல் வேறாகவும் பிரிந்தது.

பாம்பு உடலைக் கொண்ட பகுதி கருநிற ராகுவாகவும், ஐந்து தலைகளைக் கொண்ட கேதுவாகவும் மாறியது. இவர்கள் இருவருமே தவமியற்றி கிரகப் பதவியைப் பெற்றனர். இதற்கு நடுவே தங்களுக்கு அமுதம்  கிடைக்கவில்லை என்பதற்காக வாசுகியை சுருட்டி எறிந்தனர். அதுவொரு மூங்கில் காட்டில்போய் விழுந்தது. வாசுகி அங்கேயே தவமியற்றியது.  ஈசனின் தரிசனம் பெற்று எப்போதும் இங்கேயே இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டது. அதோடு ஈசனையும் உமையையும் வழிபடும் பக்தர்களின் கேது தோஷத்தை தீர்த்தருளுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டது.

ஈசன் நாகநாதசுவாமி எனும் பெயரோடும், அம்பாள் சௌந் தரியநாயகி எனும் திருப்பெயரோடும் அருள்கிறார்கள். கோயிலுக்கு முன்பாக நாகதீர்த்தம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய சந்நதியின் உள்ளே நு ழைவாயிலில் திருமாளிகைப்பத்தில் விநாயகர், முருகர், துர்க்கை ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இங்குதான் மேற்கு நோக்கி நின்ற நிலையில் கேது  பகவான் எழுந்தருளியுள்ளார். தல விருட்சம் மூங்கில். நாகை மாவட்டம், மயிலாடுதுறை-பூம்புகார் வழியில் தருமகுளம் என்ற இடத்திலிருந்து ஒரு  கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.  

திருநாகேஸ்வரம் 

இத்தலம் ராகு தோஷத்திற்கான தலைசிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. பழமையை பறைசாற்றும் நெடிதுயர்ந்த கோபுரங்கள். வெளி வாயில்,  உள்கோபுர வாயில், வெளிப் பிராகாரம், உட் பிராகாரம், திருச்சுற்று மதில் என சீரான அமைப்போடு கோயிலை பார்த்துப் பார்த்து கட்டியிருக்கிறார்கள். இத்தலத்தின் மூலவரான நாகநாதரின் கோயில் சோமாஸ்கந்தரின் அமைப்பையொட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நாகநாத சுவாமி, முருகன், பிறையணிவாள் நுதல் அம்மை சந்நதிகள் சிறப்புற அமைந்துள்ளன. மூலவர் கருவறையை அடுத்த முதல் பிராகாரத்தில் மேல்புற விநாயகர், சந்திரசேகரர், முருகன், பஞ்சலிங்கம், லட்சுமி சிலையும், குபேர தீர்த்தமும் அமைந்துள்ளன.

கோயிலின் நிருதி மூலையில் நாகவல்லி, நாகக் கன்னியோடு கம்பீரத்தோடு வீற்றிருக்கிறார். ராகு பகவான் கருணை பொங்கும் கண்களோடு அருள் பாலிக்கிறார். உடன் இரு தேவியரும் பக்தர்களைப் பார்த்து,  உங்களுக்கு என்ன குறை என்று கேட்பது போலத் தோற்றமளிக்கிறார்கள். ராகு பகவானுக்கு தினமும் ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தப் பால் நீலநிறமாக மாறுவதை கண்கூடாக காணலாம். நாகேஸ்வரரையும், பிறையணிவாணு தலாள் அம்மனையும், இரண்டாம் பிராகாரத்திலுள்ள நாகராஜரையும் வணங்கிவது நலம் பயக்கும். கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம் 

நகரின் மையத்திலேயே நாகேஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணம் கீழக்கோட்டம் நாகேஸ்வரன் கோயில் என்று இதனை அழைப்பர்.  கும்பத்திலிருந்து விழுந்த அமுத கலசத்தின் வில்வம், சிவலிங்கமாக மாறிய தலம் இது. மகாசிவராத்தி ரியின்போது நான்கு கால பூஜைகளில் முதல் ஜாம வழிபாட்டை ஆதிசேஷன் இங்கு மேற்கொள்வதாக ஐதீகம். அதனாலேயே ஈசனின் பெயர் நாகேஸ்வரர். கோயிலின் மூன்றாவது சுற்றில் மூலவரான நாகேஸ் வரர் சந்நதி அமைந்துள்ளது. அம்பாளின் அழகுப் பெயர் பிரஹந்நாயகி. மேலும் சூரியனும் இத்தல ஈசனை வழிபட்டுள்ளான்.

சூரியன் இத்தலத்தில் சித்திரை 11, 12, 13 தேதிகளில் வழிபடு கிறான். அப்போது லிங்கத்தின் மீது ஒளிபடரும். இக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கொண்டிருக்கிறது. இடப்பக்கம் நந்தவனமும், சிங்கமுக தீர்த்த கிணறும் உள்ளன. வலப்பக்கம் பிருஹன்நாயகி சந்நதியும், நடராஜ சபையும் அமைந்துள்ளன. இங்குள்ள நடராஜ மண்டபம் தேர் வடிவில் உள்ளது.

இருபுறங்களிலும் உள்ள கல் சக்கரங்களின் ஆரங்களாக பன்னிரண்டு ராசிகளும் இடம்பெற, இரண்டு குதிரை களும் நான்கு யானைகளும் இழுக்கின்ற அமைப்பு மிகவும் அரிய ஒன்றாகும். பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க  சுவாமிகள் எனும் மகான் புதர் மண்டிக்கிடந்த இக்கோயிலைப் புதுப்பித்து திருப்பணிகளை மேற்கொண்டார். இதற்காக இவர் தம் கழுத்தில் பித் தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாக கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சை எடுப்பாராம். ராகு-கேது தோஷமுள்ளவர்கள் இ த்தல ஈசனை தரிசித்தாலே போதுமானது.

பாமணி 

பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்டதால் பாதாளீச்சரம் என்று இத்தலத்தை அழைப்பர். ஒரு காலத்தில் திருப்பாதாளேச்சுரம் என்றும் பாம்பணி என்றும் அழைக்கப்பட்டது. தற்போது மருவி பாமணி என்றாகிவிட்டது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது அதில் கிடைத்த விஷத்தை ஈசன் பருகினார். இதனால் குற்ற உணர்வு கொண்ட ஆதிசேஷன் தனக்குப் பாவம் ஏற்பட்டதாக சஞ்சலம் கொண்டார். இதைப் போக்கிக் கொள்ள தனஞ்செய முனிவ ராகப் பிறந்து இத்தலத்திற்கு வந்து லிங்கத்தை பூஜித்தார்.

அன்றிலிருந்து இத்தல ஈசனை நாகநாதசுவாமி என்றும் சர்ப்பபுரீஸ்வரர் என்றும் அழைத்தனர். அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில் இது. கருவறையில் சுயம்பு லிங்கமாக நாகநாத சுவாமி தரிசனம் தருகிறார். அதன் மகாமண்டபத்தில் வடக்கு நோக்கி மனித முகமும் சர்ப்ப உடலுமாய், தனஞ்செய முனிவராக ஆதிசேஷன் தனிச் சந்நதியில் காட்சி தருகிறார். நாகராஜனான ஆதி சேஷனே சிவனை வழிபட்டு தோஷ நிவர்த்தி பெற்றதால் நாக தோஷம் நீக்கும் முக்கிய தலமாக இக்கோயில் விளங்குகிறது.

அம்பாளின் திருப்பெயர் அமிர்த நாயகி. பாமணி நாகநாதர் புற்றுமண் லிங்கத் திருமேனி கொண்டவர். பொதுவாக புற்று லிங்கத்தின் மீது புனுகுச் சட்டத்தைக் கவசமாக அணிவித்து அதன் பிறகுதான் அபிஷேகம் செய்வார்கள். ஆனால், இந்த நாகநாதருக்கு எந்த கவசமும் அணிவிக் காமலேயே காலை, மாலை இருவேளையிலும் அபிஷேகம் நடைபெறுகிறது. மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரையும், அமிர்தநாயகியையும் தரிசியுங்கள்.

திருப்பாம்புரம்

திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமிது. வண்டுவார்குழலி சமேத பாம்புரநாதர் எனும் திருப்பெயரோடு இந்த ஆலயம் திகழ்கிறது. இத்தலத்தில்  ஓருருவாகி ஈசனை நெஞ்சில் இருத்தி ராகுவும்-கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. ஆகையால் இத்தலத்திலுள்ள சுவாமி,  அம்பாள் மற்றும் ராகு-கேதுவை வணங்குபவர்களின் தோஷங்கள் தீருகின்றன. ராகுவும்-கேதுவும் கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சந்நதியில்  எழுந்தருளியுள்ளனர். ராகுகாலத்தில் இச்சந்நதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்யப்படுகின்றன.

வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் இடையில் தம்மில் யார் பலசாலி என்ற போட்டி ஏற்பட்டு, வாயு பகவான் தன் வலிமையால் மலைகளை எல்லாம் புரட்டி வீச, ஆதிசேஷன் மலைகள் பெயரா வண்ணம் அவற்றைச் சுற்றி வளைத்து காக்க முயற் சித்தார். இருவரும் சம பலம் காட்டி நின்றதால், வெற்றியடைய  முடியாத வாயு பகவான் தன் இயக்கத்தை நிறுத்திவிட, உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் உள்ளிட்ட தேவர்களின் வேண்டுகோளின்படி ஆதிசேஷன் போரிலிருந்து ஒதுங்கிக் கொண்டான். வாயு பகவான் வெற்றிக் களிப்பில் மலைகளை புரட்டி வீசினான்.

அதனால் கோபமுற்ற ஈசன் வாயு பகவானையும், ஆதிசேஷ னையும் பேயுருவாகும்படி சபித்தார். இருவரும் தம் குற்றம் உணர்ந்து ஈசனை வணங்கி தம்மைப் பொருத்தருளும்படி வேண்டிக்கொள்ள, வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கே, மதுரைக்கு கிழக்கில் பூஜை செய்து விமோசனம் பெறுமாறும், ஆதிசேஷனை திரு ப்பாம்புரத்தில் தம்மை பன்னிரண்டு ஆண்டுகள் பூஜை செய்து விமோசனம் பெறுமாறும் அருளினார். அதன்படி ஆதிசேஷன் இத்தலத்தில் தீர்த்தம்  ஏற்படுத்தி விமோசனம் பெற்றான்.

சிவராத்திரியில் மூன்றாம் கால பூஜையை ஆதிசேஷன் இத்தலத்தில் நிகழ்த்துகிறார். இறைவன் பாம்புரேச்வரரின் சிவலிங்கத் திரு உருவை வணங்கிய வண்ணம் உற்சவர் ஆதிசேஷன் கருவறையில் எழுந்தருளியுள்ளார். அம்பாள் வண்டுசேர் குழலியின் சந்நதி இறைவன் சந்நதிக்கு இடப்புறமாக வடக்குப் பிராகாரத்தில் அமைந் துள்ளது. இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல்-பேரளம் வழியில் இருக்கிறது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையி லிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம்.

ஸ்ரீவாஞ்சியம்
 

ஸ்ரீவாஞ்சியம் என்றாலே எல்லோருக்கும் எமதர்மன் ஈசனுக்கு வாகனமாக அமைந்த புராணக் கதைதான் நினைவுக்கு வரும். இங்கிருக்கும் குப்த கங்கை எனும் தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தட்சன் இயற்றிய யாகத்தில் பங்கு கொண்டவர்களில் சூரியனும் ஒருவன். ஈசன் ஆணைப்படி வீரபத்திரர் அவனை தண்டிக்க, சூரியன் தன் பிரகாசத்தை இழந்தான். ஈசனின் பாதங்களில் விழுந்தான். அவன் ஸ்ரீவாஞ்சியத்தில் குப்தகங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் சிவ துரோகம் நீங்கும் என்றார் ஈசன். அவ்வாறே சூரியன் தன் ஒளியை மீண்டும் பெற்றான்.

இதனால் சூரியனுக்கு உகந்த கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு குப்த கங்கையில் நீராடினால் பஞ்சமா பாவங்களும் மன்னிக்கப்படும் என்பது ஐதீகம். தலவிருட்சம் - சந்தன மரம். கோயில் முதல் சுற்றில் வெண்ணெய்ப் பிள்ளையார், விநாயகர், சுப்பிரமணியன், பஞ்சபூத லிங்கங்கள்,  ஜேஷ்டாதேவி, சனிபகவான், மகிஷாசுரமத்தினி ஆகிய சந்நதிகள் உள்ளன. காசிக்கு சமமாக அகோரேஸ்வரர், பஞ்சநாதேஸ்வரர், மயூரநாதேஸ்வரர்,  மகாலிங்கேஸ்வரர் சந்நதிகளும் உள்ளன.

இத்தலத்தில் யோகபைரவரும் அருள்புரிகிறார். இவரை வழிபட, யோகங்கள் கிட்டும் என்பார்கள். பொதுவாக பிற கோயில்களில் தனித்தனி மூர்த்தியாகக் காட்சியளிக்கும் ராகுவும் கேதுவும் ஒரே மூர்த்தத்தில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை வேறெங்கும் காண முடியாது. இந்த அமைப்பு ‘சண்டராகு’ என்று சொல்லப்படுகிறது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிருந்து நன்னிலம் வழியாக இத்தல த்தை அடையலாம்.

பேரையூர்

இந்த அருந்தலத்தை பேரேஸ்வரம் என்றும் செண்பகவனம் என்றும் அழைப்பர். சுயம்பு லிங்கமாக விரித்த நாகமோடு நாகநாதர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்பாலிக்கிறார். எல்லா நாக சக்திகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் கம்பீரத்தோடு வீற்றிருக்கிறார். யோகம் வளர்க்கும் இந்த நாயகர் இகலோகமான நம் வாழ்க்கையில் வேண்டுவன யாவையும் நாம் கேட்காமலேயே அருள்கிறார். முக்கிய நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும்போது உடலில் நீலநிறம் காட்டுவது அதிசயத்திலும் அதிசயம்.

அம்பாளின் இணையற்ற நாமம் பிரஹதாம்பாள். இந்தக்  கோயிலின் தீர்த்தமும் நாகதீர்த்தம்தான். புண்ணிய புஷ்கரிணி என்றும் அழைப்பர். இந்த தலத்தின் பிரதான விஷயமே நாத ஒலி எழும் சுனைதான். சுற்றிலும் நாகர்கள் படமெடுத்து காக்க, என்றும் வற்றாத சுனைக்குள் நாக நாதரே அருவமாக வீற்றிருக்கிறார். நீர்ச்சுழியலோடு வரும் தென்றல் காற்றே ஒரு பாம்பு மூச்சு விடுவது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. எண்ணி மாளாத அளவுக்கு இங்கு நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆமாம், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டோர் இங்கு பரிகாரமாக நாகர் சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர். புதுக்கோட்டை -  திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் நமனசமுத்திரத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

நயினார்கோவில்


நாகராஜன் இறைவனை வணங்கிய தலம் இது. எனவே, இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். இத்தலத்திற்கு திருமருதூர், வாசுகி மங்கலம், சேஷபுரம்,  நயினார் கோவில் என்று பல்வேறு திருப்பெயர்கள் உள்ளன. வாய் பேசமுடியாத ஒரு முகமதியப் பெண்ணை இத்தல இறைவன் பேச வைத்தமையால் இறைவன் நயினார் ஆண்டவர் என்றழைக்கப்படுகிறார். நாகலிங்கப் பெருமானின் சந்நதி மேற்கு முகமாக அமைந்திருக்கிறது. நாமதேவரின் கீதம் கேட்பதற்காகவே பெருமான் இப்படி மேற்கு முகமாக திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை, ‘‘நாமதேவர் நல்லிகை கேட்டு போற்றுபவர்க்காய் மேற்திசை திரும்பியும்’’ என்று நாகநாதர் சதகம் குறிப்பிடுகிறது.

கருவறைக்கு பின்புறம் புற்று அமைந்துள்ளது. இங்கு மருத மரத்தினடியில் நயினார் பெருமான் நாகவடிவில் காட்சியளித்ததாக தல புராணம் கூறுகிறது. அம்பாள் சௌந்தர்ய நாயகி எனும் பெயரோடு அருள்பாலிக்கிறாள். அர்த்த மண்டபத்திற்கு எதிரேயுள்ள தடாகத்து நீரைப் பருக, நோய்க ளெல்லாம் நீங்குவதாக ஐதீகம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தோர் இத்தலத்திற்கே வந்து ராகு-கேது தோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்து கொள்கின்றனர். மருதமும், வில்வமும்  தலவிருட்சங்களாக உள்ளன. இத்தலம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

நாகப்பட்டினம்

நாகை நகரம் சரித்திரமும், புராணமும் கலந்து இழைந்த கடற்கரைப் பட்டினம். ஈசனும், திருமாலும் நிகரிலா அருளாட்சி புரியும் புண்ணிய பூமி.  புண்டரீகன் எனும் பக்தனை காயம் என்கிற உடம்போடு ஈசன் தன்னிடத்திலே ஆரோகாணமாக அதாவது அப்படியே ஏற்றுக் கொண்டதால் (காயம் - ஆரோகணம் ஈஸ்வரர்) காயாரோகணேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். நாகராஜனான ஆதிசேஷன் இத்தல ஈசனை வணங்கி பெரும்பேறு பெற்றான். இதனாலேயே இத்தலம் நாகப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. மீனவர் குலத்தில் பிறந்த அதிபத்தரை கடலன்னை தாலாட்டி வளர்த்தாள்.

அதிபத்தர், துள்ளித் தாவும் மீன்களைப் பிடித்து, ‘‘காரோணத்தோனிடம் சேர்ந்துவிடு. ஆதிபுராணரை அடைந்திடு’’ என்று சொல்லி, தாம்  முதலில் பிடித்த மீனை மீண்டும் கடலில் விடுவார். கைநழுவி நீரில் வழுக்கியோடிய மீன்கள் மாயமாக மறைந்து காயாரோகணரை அடைவதைப்  பார்த்து மகிழ்வார். அதிபத்தரை வறுமை வாட்டியது. ஆனால், அந்த வறுமையிலும் தனக்கு அடுத்தடுத்து மீன்கள் கிடைக்காவிட்டாலும், முதலில்  பிடிக்கும் மீனை காயாரோகணருக்கே அர்ப்பணித்தார். வறுமை, தன் கடுமையைக் காட்டியது. வயிறு காய்ந்தது.

ஆனால், அவரது பக்தியோ  வற்றாத கடலாக நாகைக் கரையில் அலை அலையாக புரண்டது. ஒருமுறை வலையைப் பிரித்துச் சோதித்த அதிபத்தர் அதில் ஒரே ஒரு நவரத்ன  மீனைக் கண்டார். ‘இன்று வந்த முதல் மீன் நீயே’ என்று சொல்லி தம் வறுமையை முற்றிலுமாகப் போக்கியிருக்கக்கூடிய அந்த மதிப்பு வாய்ந்த  மீனையும் ஈசனுக்கே சமர்ப்பித்தார். நீரில் விழுந்த மீன் மறைந்தது. ஆனால், அங்கே காயாரோகணர் ரிஷிபாரூடராகக் காட்சி அளித்தார்.

அதீத பக்தியால் சிவந்தவரை ‘அதிபத்தா... அதிபத்தா’ என அன்போடு அழைத்தார். மீனவர்கள் அதிபத்தநாயனாரை கொண்டாடினர். இன்றும் கூட மீனவர்கள் இத்தல பெருமானையே முழுமுதற் கடவுளாக வணங்குகின்றனர். அம்பாளின் அருட்பெயர் நீலாயதாட்சி என்பதாகும். அழகுத் தமிழில் கருந்தடக்கண்ணியம்மை. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. நாகை நகரின் மையத்தில் நீலாயதாட்சி உடனுறை காயாரோகணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

சென்னை - குன்றத்தூர்

ஈடிணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது  கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாகக் கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு, அதை நிறைவேற்றி மனநிறைவு கொண்டார். இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். இத் தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈசன். கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நதி அமைந்துள்ளது.

கருவறையில் நாகேஸ்வரர் அருள் பொழிகிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டு அருணாசலேஸ்வரரை மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள். நாகேஸ்வரர், சேக்கிழார் பிரதிஷ்டை செய்த ஈசனல்லவா? அதனால் குளம் திடீரென ரத்தச் சிவப்பாயிற்று. சிவனடியார் கனவில், ‘ஏற்கெனவே இருந்த இடத்திலேயே பழையபடி நாகேஸ்வரரைப் பிரதிஷ்டை செய்யுங்கள்’ என்று தோன்றிய உத்தரவுக்கிணங்க பக்தர்கள் மீண்டும் அருணாசலேஸ்வரரை பிராகாரத்திலும், நாகேஸ்வரரை மூலவராகவும் பிரதிஷ்டை செய்தனர்.

பிராகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியும் பிராகார முடிவில் காமாட்சி அம்மனும் தரிசனம் தருகிறார்கள். நாகேஸ்வரர் எனும் நாமத்தோடு அருள்பாலிப்பதாலும், ராகுவின் அம்சத்தோடு ஈசன் விளங்குவதாலும் ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடலாம். இன்றும் சர்ப்பங்கள் இரவில் இறைவனை வழிபட்டு வருவதாகக் கூறுகின்றனர். தாம்பரம், கோயம்பேடு, பூவிருந்தவல்லியிலிருந்து பேருந்து வசதி உண்டு.

சென்னை - கெருகம்பாக்கம்

                                                        
இத்தலத்தில் கேது பகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில், நடுவில் காளிங்க நர்த்தன கண்ணன் வடிவில் இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம். கோயிலில் முதலில், ஆதிகாமாட்சி, ஐந்தரை அடி உயரத்தில் அன்பே வடிவாய் திருக்காட்சி அளிக்கிறாள். மூலக் கருவறையில் ஈசன், நீல கண்டேஸ்வரராக அருள்கிறார். அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, வலி தாங்காமல் வாசுகி நஞ்சைக் கக்கியது. பாற்கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. இரண்டும் சேர்ந்து ஆலாலம் எனும் கொடிய விஷமாய் மாறின. யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த நஞ்சை சட்டென விழுங்கினார் ஈசன்.

அதைக் கண்டு பதைபதைத்த பார்வதி, அந்த நஞ்சு தொண்டை யைவிட்டு நெஞ்சுக்குள் இறங்காதபடி அதை ஈசனின் கண்டத்திலேயே நிறுத்தினாள். ஈசன் நீலகண்டேஸ்வரர் ஆனார். ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடு பலன்கள் குறைகிறது. சென்னை, போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் உள்ளது, இந்த ஆலயம். போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ தொலைவு.

கோடகநல்லூர்


கோடகநல்லூரை கார்கோடக க்ஷேத்திரம் என்று அழைப்பார்கள். கார்க்கோடகன் எனும் பாம்பு ஒருமுறை காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டது. அந்தச் சமயத்தில் நளமகாராஜா கார்கோடகன் எனும் ராஜசர்ப்பத்தை காப்பாற்றினார். தன்னைக் காப்பாற்றிய நளனுக்கு உதவி செய்யும் பொருட்டு அவரைத் தீண்டி, அவரை யாரும் அடையாளம் கொள்ள இயலாதபடி மாற்றியது கார்க்கோடகன். உருமாறியதால், தன் மாமனாரின் அரண் மனையில் தேரோட்டியாகப் பணியாற்ற முடிந்தது அவரால். அது மட்டுமல்ல, அவர் தேரோட்டும் நேர்த்தியைக் கண்டு இது தன் கணவரைத் தவிர வேறு யாராலும் இயலாது என்று புரிந்து கொண்டு அவரை தமயந்தி அடையாளம் கண்டுகொண்டாள்.

அதேபோல அவள் சமைத்த உணவை உண்ட நளனும், தமயந்தியைத் தெரிந்துகொண்டார். இதற்கிடையில் ஏழரை ஆண்டுகள் சனி பாதிப்பு விலகியதால், மீண்டும் கார்க்கோடகன் நளனைத் தீண்ட அவர் பழைய ராஜ உருவைப் பெற்றார். நன்மைக்கே என்றாலும் நளனைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள  வழிதேடியது கார்க்கோடகன். தாமிரபரணி நதிக்கரையில் கயிலைநாதனை நோக்கி தவமிருந்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்று அறிவுறுத் தப்பட, அதன்படியே தவமிருந்தது அந்தப் பாம்பு. அதனாலேயே அந்தத் தலம் கார்க்கோடகநல்லூர் என்று பெயர் பெற்றது.

அதன் தவத்தினை மெச்சிய பரமேஸ்வரன், கார்க்கோடகன் முன் தோன்றி பாவ விமோசனம் அளித்தார். அங்கே கயிலைநாதனாகக் கோயில் கொண்ட அவர், அந்தத்  தலத்தில் எந்தப் பாம்பும் யாரையும் தீண்டக்கூடாது என்றும் ஆணையிட்டார். அதனால்தான் தற்போதும் கோடகநல்லூரில் விதவிதமான பாம்புகள்  அலைந்து திரிந்தாலும் மனிதர்கள் யாரையும் அவை தீண்டியதாக சரித்திரம் இல்லை. கிழக்குப் பகுதியில் நாக தீர்த்தம் உள்ளது. பிரமாண்டமான நந்தி மேற்கு நோக்கியபடி உள்ளார். உள்ளே சென்றால் அன்னை சிவகாமி பேரருள் பொழிகிறார். கருவறையில் கயிலாயநாதர் எனும் பெயரோடு லிங்கத் திருமேனியில் ஈசன் அருள்பாலிக்கிறார்.    

திருநெல்வேலி-பேட்டை வழியாக சேரன்மகாதேவி மற்றும் முக்கூடல் செல்லும் டவுன் பஸ்ஸில் சென்று கல்லூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். அங்கிருந்து கோயிலுக்கு ஆட்டோ பிடித்து செல்லலாம்.

ஆம்பூர் 

இத்தலத்தில் நாகரத்தின சுவாமி எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்பாலிக்கிறார். ஒரு பசு ஒரு புற்றில் பால் சொரிவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர் மக்கள். அருகே சென்று பார்த்தபோது உள்ளுக்குள் சிவலிங்கம் இருந்தது தெரிந்தது.  உடனே அவருக்கு ஒரு கோயில் நிர்மாணித்தார்கள்.  பாம்புப் புற்றில் இருந்தது சிவலிங்கம் என்பதால், மூலவர் நாகரத்தினசுவாமி என்று அழைக்கப்படுகிறார். அம்மனுக்கு அபயவல்லி என்பது திரு நாமம். தலவிருட்சமாக வில்வமும், தலத் தீர்த்தமாக நாகதீர்த்தமும் திகழுகின்றன. மேலும், கோயிலுக்குள்ளேயே ஞானாம்பிகை உடனுறை காளத் திநாதர் தனிச்சந்நதியில் அருள்பாலிக் கிறார். மூன்று நிலை ராஜகோபுரங்களோடு பாலாற்றின் தென்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.  வேலூர் மாவட்டம், வாணியம்பாடியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

உருளைக்கிழங்கு

ஆரோக்கியப் பெட்டகம்: உருளைக்கிழங்கு

மாற்றம் செய்த நேரம்:6/19/2014 4:36:34 PMI wonder if it's even possible to imagine the world without potatoes. The taste of fresh potatoes as a dentist

NATO Secretary General Statement in...
MORE VIDEOS
உருளைக் கிழங்கு இல்லாத உலகம் கற்பனையில் கூட சாத்தியமா என்று தெரியவில்லை. பல் முளைக்காத பருவத்திலேயே உருளைக்கிழங்கின்  சுவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. பால்யத்திலேயே தொடங்கும் அந்த உருளைக்கிழங்கு பந்தம், பல் போன காலத்துக்குப் பிறகும்கூட  பிரிய மறுக்கிறது. உணவியல் துறை சர்ச்சைகளில் அதிகம் அடிபட்டது உருளைக்கிழங்காகவே இருக்கும். உருளைக்கிழங்கு நல்லதா, கெட்டதா என்ற  விடை தெரியா கேள்வி, வருடங்கள் கடந்தும் நம்மை விரட்டிக் கொண்டே இருக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு பவுடரை குழந்தைகளுக்கான உணவாக உபயோகிக்கிறார்கள் வெளிநாடுகளில். பெரிய தொழிற்சாலைகளில்  பிரத்யேக அவன்களில் முழு உருளைக்கிழங்கை வேக வைக்கிறார்கள். பிறகு அதிலுள்ள தண்ணீர் சத்தெல்லாம் வெளியேற்றப்படுகிறது. அடுத்து அது  மாவாக்கப்பட்டு, பேக்கரி தயாரிப்புகள் உள்ளிட்ட பல பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஓட்டல்களில் சூப், கிரேவி போன்றவற்றைக்  கெட்டியாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

கோதுமை, பார்லி உள்ளிட்ட குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்ளும் போது, சிலருக்கு க்ளூட்டன் ஒவ்வாமை என ஒன்று வரும். வயிற்றுப்போக்கு  அல்லது மலச்சிக்கல், வயிற்று வலி, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், களைப்பு, படபடப்பு உள்ளிட்ட அறிகுறிகளை உணர்வார்கள். அவர்களுக்கான  உணவுத் தயாரிப்பில் க்ளூட்டன் நிறைந்த உணவுகளுக்குப் பதில், இந்த உருளைக்கிழங்கு மாவை மாற்றாகப் பயன்படுத்தும் போது, ஒவ்வாமையின்  தீவிரம் குறைவதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைகளுக்கான முதல் திட உணவுப் பட்டியலில் உருளைக்கிழங்கு மாவுக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக உடல்  மெலிந்த குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மாவில் பால் சேர்த்து ஊட்டி, புஷ்டியாக்குகிறார்கள். நம்மூரிலும் குழந்தைகளுக்கு முதல் திட உணவை  அறிமுகப்படுத்தும் போது, குழைவான சாதத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மசித்துக் கொடுக்கும் பழக்கம் உண்டு. பொரியலாக,  வறுவலாக, கூட்டாக, குருமாவாக... எப்படிக் கொடுத்தாலும் உருளைக்கிழங்கைக் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

வகை வகையாக விருந்தே சமைத்து வைத்துக் கொண்டு கெஞ்சினாலும் சாப்பிட அடம் பிடிக்கிற குழந்தைகளை, காரசார உருளைக்கறியோ,  மொறுமொறு உருளைக்கிழங்கு சிப்ஸோ கண நேரத்தில் தட்டையே காலி செய்யச் செய்து விடுவது வீட்டுக்கு வீடு நடக்கிற வாடிக்கை. அது மட்டுமா?  சின்னச் சின்ன பண்டிகைகள் தொடங்கி, திருமணப் பந்திகள் வரை சகலத்திலும் உருளைக்கிழங்குக் கறி இருந்தால்தான் விருந்தே  முழுமைஅடையும்.இத்தனை சிறப்புகளை சுமந்து கொண்டிருக்கிற உருளைக்கிழங்குக்கு, இன்னொரு முகமும் உண்டு.

பருமனா? மூச்சுப் பிடிப்பா? நீரிழிவா? வயதாகி விட்டதா?
எல்லோருக்கும் உருளைக் கிழங்கைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. உருளைக்கிழங்கை உணவியல் துறையின் வில்லனாக சித்தரிப்பது  சரிதானா?‘‘உருளைக்கிழங்கு பிடிக்காதவங்களை உலகத்துல பார்க்க முடியுமா? எனக்கு நல்லா ஞாபக மிருக்கு... என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்  சித்ராவுக்கு உருளைக்கிழங்கே பிடிக்காது. அதனாலயே அவளை நான் வேற்றுகிரகவாசி மாதிரி பார்ப்பேன். ‘உருளைக்கிழங்கு பிடிக்காதுனு எப்படிச்  சொல்ல முடியும்’னு மாஞ்சு போயிருக்கேன். ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ், மசாலா தோசை, பூரி மசால், கட்லெட், பொடிமாஸ், சாண்ட் விச்சுக்கு நடுவில வச்சுக்  கொடுக்கிற மசாலானு உருளைக்கிழங்கு எந்த வடிவத்துல இருந்தாலும் என்னால தவிர்க்க முடியாது...’’ உருளைக்கிழங்கு கீர் ருசித்தபடியே பேச  ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன்.

‘‘எடைக் குறைப்பைப் பொறுத்தவரை, உருளைக்கிழங்கை நாங்க மாவுச்சத்து லிஸ்ட்டுல தான் வச்சுப் பார்ப்போம். அதனால எடைக் குறைப்பு  சிகிச்சைக்கு வர்றவங்களுக்கு உருளைக்கிழங்கு சாப்பிடற ஆசை வந்தா, அரை கப் எண்ணெயில்லாத உருளைக்கிழங்கு எடுத்துக்கிட்டாங்கன்னா,  அதுக்குப் பதிலா அதே அளவு சாதத்தை தவிர்க்கச் சொல்லி அட்வைஸ் பண்ணுவேன். சரியான முறையில சமைக்கிற போதும், அதிக சாதம்,  சப்பாத்தி, பிரெட் கூட சேர்த்து அளவுக்கதிகமா சாப்பிடாத வரைக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப நல்ல ஒரு உணவு.  நம்ம முன்னோர்கள் எல்லாம்  உருளைக்கிழங்கை ஒரு மருந்து உணவா பயன்படுத்தியிருக்காங்க. ருமாட்டிசம் பிரச்னைக்கு உருளைக்கிழங்கு மிகச்சிறந்த மருந்தா  பயன்படுத்தப்பட்டிருக்கு.  ஜெர்மனியில சாதத்துக்குப் பதிலா வேக வச்சு மசிச்ச உருளைக்கிழங்கை சாப்பிடற பழக்கம் இருக்கு...’’ - உருளைக் கிழங்கின்  உன்னதங்களைப் பற்றிப் பேசுகிற ஷைனி, அதன் பாதகங்களையும் பகிர்கிறார்.

‘‘கார்போஹைட்ரேட் அதிகமுள்ளதுங்கிறதாலதான் எடை குறைக்க நினைக்கிறவங்க உருளைக்கிழங்கை தவிர்க்கிறாங்க. ஆனா, இதுல உள்ளது  காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட். அதனால அளவோட சாப்பிடறப்ப, அது அப்படியொண்ணும் எடையை அதிகரிச்சிடாது. மனித உடல் என்ற வண்டி  தடையின்றி ஓட, கார்போ ஹைட்ரேட் என்ற எரிபொருள் தான் முக்கியம். அந்த கார்போஹைட்ரேட் முழுக்கவே தவிர்க்கப்படறப்ப, பெட்ரோல்  இல்லாத வண்டி மாதிரி இயங்க மறுக்கும் உடம்பு.  தசைகள் பலமிழக்கும். எடையைக் கட்டுப்பாட்டுல வச்சிருக்கணும்னு நினைக்கிறவங்க, சரியான  அளவு கார்போஹைட்ரேட் உணவை, சரியான முறையில சமைச்சு சாப்பிடறது தான் முக்கியமே தவிர, அதை அறவே தவிர்க்கிறது சரியில்லை.

உருளைக்கிழங்குல உள்ள கார்போஹைட்ரேட், குழந்தைகளுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படற கார்போஹைட்ரேட் தேவையில் 80  சதவிகிதத்தையும், பெரியவங்களுக்கு 50 சதவிகிதத்தையும் கொடுக்கக்கூடியது.உருளைக்கிழங்குல உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். அதனாலதான் உடம்பு சரியில்லாத நேரத்துல அதைக் குணப்படுத்த பச்சை உருளைக்கிழங்கை அந்தக் காலத்துல  உபயோகிச்சிருக்காங்க. உருளைக்கிழங்குல 19.7 மி.கி. வைட்டமின் சி கிடைக்கும். வாழைப்பழத்தைவிட அதிக பொட்டாசியம் சத்து கொண்டது  உருளை. இது பக்கவாதம் வர்றதைத் தடுத்து, அதிக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதுல கொழுப்போ, கொலஸ்ட்ராலோ கிடையாது. சோடியம்  அளவும் கம்மிங்கிறதால ஆரோக்கியமானது.

உருளைக்கிழங்கோட தோலில் இயற்கையான நார்ச்சத்து உண்டு. உருளைக்கிழங்கு தோலில் உள்ள கெமிக்கல், செல்கள்ல பாக்டீரியா தொற்றுவதைத்  தவிர்க்கும். சுருக்கமா சொல்லணும்னா, உருளைக்கிழங்கு ரொம்ப நல்ல உணவு.  ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸாகவா, ரோஸ்ட்டாகவா, சிப்ஸாகவா... அது எப்படி  நம்ம வயித்துக்குள்ள போகுதுங்கிறதைப் பொறுத்து தான் அது நல்லதா, கெட்டதாங்கிறதும் தீர்மானிக்கப்படுது. விளையாட்டு வீரர்களுக்கு போட்டிக்கு  முந்தைய நாள் உணவா நான் பரிந்துரைக்கிறது, சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதம்... கூட உருளைக்கிழங்கு பொரியல் அல்லது மசால் தோசை  அல்லது ஆலு பரோட்டா.

ஓட்டப் பந்தய வீரர்களைக் கவனிச்சீங்கன்னா, அவங்க பொங்கல், ஆலு பரோட்டா அல்லது மசால் தோசை சாப்பிட்டு, சக்தி ஏத்திக்கிறது தெரியும்.  காரணம், அதுல உள்ள கார்போஹைட்ரேட். சிறுநீரகங்கள் தீவிரமா பழுதடைஞ்ச நிலையில இருக்கிறவங்க மட்டும் உருளைக்கிழங்கைத் தவிர்க்கிறது  நல்லது. அதுல உள்ள பொட்டாசியம் சத்தை அவங்களால வெளியேற்ற முடியாதுங்கிறதுதான் காரணம். நீரிழிவு பாதிச்சவங்களுக்கும், சாதாரண  மனிதர்களுக்குத் தேவைப்படற அதே கார்போஹைட்ரேட் தேவைப்படும்.

நீரிழிவு வந்தா உருளைக்கிழங்கை அறவே தவிர்க்கணும்னு அவசியமில்லை. அளவும், சமைக்கிற விதமும்தான் கவனிக்கப்படணும்.
எடைக் குறைப்பு முயற்சியில உள்ளவங்களுக்கும் இதே விதிதான். சாதம், பிரெட், சப்பாத்தினு எல்லாத்தையும் தவிர்த்துட்டு, ஒரு சின்ன கப் உருளைக்  கிழங்கு சப்ஜியும், அதோட சேர்த்து நார்ச்சத்து நிறைஞ்ச ஏதாவது ஒரு காயும், புரதம் நிறைஞ்ச ஒரு உணவையும் எடுத்துக்க்கலாம். இப்படி சாப்பிட்டா  உருளைக்கிழங்கு சாப்பிட்டாலும், எடையைக் கட்டுப்பாட்டுல வச்சுக்கலாம்...’’ உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு உற்சாக சேதி  சொல்லி முடிக்கிறார்  ஷைனி.

எப்படி வாங்குவது?
  • உறுதியாக, கெட்டியாக, பளீரென இருக்க வேண்டும்.
  •  கரும்புள்ளிகளோ, பச்சைத் திட்டுகளோ இருக்கக் கூடாது. பசுமை படர்ந்த கிழங்குகளில் நச்சுத் தன்மை இருக்கலாம்.
  •  முளைவிட்டிருந்தால் வாங்கக்கூடாது.
  •  கெட்ட வாடை வீசாமலிருக்க வேண்டும்.
  •  நறுக்கியதும் உள்ளே கருமைத் திட்டோ, குழியோ இருந்தால் உபயோகிக்கக் கூடாது.
எப்படிப் பாதுகாப்பது?

உருளைக்கிழங்கை பிளாஸ்டிக் பைகளிலோ,  ஃப்ரிட்ஜிலோ வைக்கக்கூடாது. பாத்திரம் தேய்க்கிற சிங்கின் அடிப்பகுதியிலும் உருளைக்கிழங்குகளை  போட்டு வைக்கக்கூடாது. அந்த ஈரப்பதத்தில் கிழங்கு சீக்கிரமே கெட்டுவிடும். அதே போல உருளைக்கிழங்கை வாங்கியதும், அதைக் கழுவாமல்  அப்படியே தான் வைக்க வேண்டும். கழுவி வைத்தாலும் கெட்டுப் போகும். காற்றோட்டமான, இருட்டான, அதிக வெப்பமில்லாத இடத்தில்  வைக்கலாம். 

எப்படி சமைப்பது?

பொரிக்கலாம். வறுக்கலாம். வேக வைக்கலாம். மசிக்கலாம். இன்னும் எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். அதுதான் உருளைக்கிழங்கின் சிறப்பே.  உருளைக்கிழங்கை வாங்கியதும், முதலில் அதன் மேல் தோலை லேசாகத் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும். தோலின் மேலுள்ள மண்ணும் அழுக்கும்  நீங்கத் தேய்த்தால் போதும். தோலை நீக்க வேண்டியதில்லை. தோலில்தான் அதன் சத்துகள் அடங்கியிருக்கின்றன. உருளைக்கிழங்கை வெட்டிய  உடனே சமைக்காவிட்டால் கருத்துப் போகும். கிழங்கிலுள்ள கார்போஹைட்ரேட், ஆக்சிஜனுடன் இணைவதாலேயே இப்படி உண்டாகிறது. ஆனால், இது  பயப்படுகிற விஷயமல்ல. இதைத் தவிர்க்க, நறுக்கிய கிழங்கை குளிர்ந்த தண்ணீரிலோ, எலுமிச்சைச்சாறு கலந்த தண்ணீரிலோ போட்டு வைக்கலாம்.  அதே நேரம் நறுக்கிய கிழங்குகளை நீண்ட நேரத்துக்கு தண்ணீரில் போட்டு வைப்பதால், தண்ணீரில் கரைகிற வைட்டமின்களை இழக்க  வேண்டியிருக்கும்.சின்ன கிழங்குகள் பெரியதை விட அதிக இனிப்பாக இருக்கும். 

உருளைக்கிழங்கு கீர்  
என்னென்ன தேவை?


உருளைக்கிழங்கு - 3, பால் - ஒன்றரை லிட்டர், சர்க்கரை - 6 டேபிள்ஸ்பூன், பனீர் - சிறிது, ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன், நெய்யில் வறுத்த  முந்திரி, திராட்சை - சிறிது.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை தோல் நீக்கி, குட்டிக் குட்டி சதுரத் துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் வேக வைத்து, வடித்து வைக்கவும். பாலை முக்கால் பாகமாக  சுண்டும் வரை காய்ச்சவும். அதில் உருளைக்கிழங்கு, சர்க்கரை சேர்த்து 3 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து, ஏலக்காய் தூள்,  பனீர், முந்திரி, திராட்சை தூவிப் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு ஸ்டியூ

என்னென்ன தேவை?


உருளைக்கிழங்கு - 4, பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, தேங்காய் - அரை மூடி, கறிவேப்பிலை - சிறிது, தேங்காய்  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, தோல் நீக்கி, 8 துண்டுகளாக வெட்டவும். தேங்காயை முதல், இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். பச்சை  மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியை நீளமாக, மெலிதாக நறுக்கவும். இரண்டாவது தேங்காய்ப் பாலில் உருளைக்கிழங்கு, பச்சை    மிளகாய், இஞ்சி, மெலிதாக   நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு உப்பு சேர்த்து, சில நொடிகள் கழித்து முதல் தேங்காய்ப் பால்  சேர்க்கவும். கலவை  கொதிக்கக் கூடாது. சூடானதும் இறக்கி நடுவில் குழித்து, பச்சை கறிவேப்பிலையையும், தேங்காய் எண்ணெயையும் விட்டு, மூடி  வைத்து விடவும். பரிமாறும் போது கலந்து சாப்பிடவும். இது சப்பாத்தி, பூரி, இடியாப்பம் என எல்லாவற்றுக்கும் பொருத்தம்.

கல்யாண ஸ்பெஷல் உருளைக்கிழங்கு காரக் கறி

என்னென்ன தேவை?


உருளைக்கிழங்கு - 1 கிலோ, வெங்காயம் - 3, மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கப், உப்பு -  தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க...

தனியா - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10,  பெருங்காயம் - சிறு துண்டு.

தாளிக்க...

கடுகு - 2 டீஸ்பூன், உளுந்து - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?


உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களில் தனியா முதல் காய்ந்த மிளகாய் வரை  வெறும் கடாயில் வறுத்து, பெருங்காயத்தை மட்டும் சிறிது  எண்ணெயில் பொரித்து, எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு  தாளிக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, சிட்டிகை உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வதக்கவும். பிறகு கிழங்கையும் மிளகாய் தூளையும்  சேர்த்து 5 நிமிடங்களுக்குப் பிரட்டவும். பொடித்து வைத்துள்ளதைத் தூவி, நன்கு பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.

பழங்களின் பலன்கள்

பழங்களின் பலன்கள்

மாற்றம் செய்த நேரம்:4/22/2014 5:44:45 PMFruits are rich in medicinal, FIG. The leaves of the fig tree grows to a height of up to 8 meters banana leaves used as food to eat.

NATO Secretary General Statement in...
MORE VIDEOS
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல்  உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும்  இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும்.  ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து  வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10  மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை  சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்தி பழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம்  தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து  பொருளாக பயன்படுகிறது.

அத்தி, ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில்  இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து  காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும்.  பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா, இந்திய பழ  வகைகளில் 4வது இடத்தை பெற்றுள்ளது.

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் சத்துகளும் வைட்டமின் சி 260 மில்லி கிராமும் உள்ளது. கொய்யா பழத்தை முழுப்பழமாக, ஜாமாக,  ஜெல்லியாக, சர்பத்தாக எந்த முறையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். வயிற்றில் புண்களை நீக்கும், நீரிழிவை குறைக்கும், விந்துவை பெருக்கும்.  அடிக்கடி ஏற்படும் விக்கலை குணப்படுத்தும். வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும். உடல் வளர்ச்சி கூடும். கொய்யா  பழம் சாப்பிடுவதால் குடல், ஜீரண பை, கல்லீரல் மண்ணீரல் புத்துணர்வு பெற்று பலம் பெறும். கொய்யா காய் வயிற்று போக்கை குணமாக்கும்.  கொய்யா இலை வயிற்று புண்ணுக்கு மருந்தாகிறது.

கொய்யா பழத்துக்கு அடுத்து மிகவும் சிறந்த பழம் மாதுளம் பழம். மாதுளம் பழம் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயன்களை  கொண்டது. மாதுளம் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். ஜீரணத்தை அதிகரித்து ரத்த விருத்தி பெற வைக்கும். பித்தம் நீக்கும். எலும்பு,  பற்களுக்கு உறுதி தரும். குடல், வயிற்று புண் ஆற்றும். நெஞ்சு எரிச்சலை குறைக்கும். மலச் சிக்கலை தீர்க்கும். புதிய ரத்தத்தை உருவாக்கும்.  மாதுளம் பழ சாறுடன் கற்கண்டை கலந்து சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மூல நோய் தீரும்.

மாதுளம் பழ சாறுடன் அருகம் புல் சாறு கலந்து சாப்பிட்டால் அறுந்த மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். மாதுளம் பழ தோலை இடித்து சாறு  எடுத்து மிளகு பொடியை கலந்து சாப்பிட்டால் போதை மயக்கம் தீரும். மாதுளம் பூவை கொதிக்க வைத்து குடித்தால் பித்த கோளாறு நீங்கும். வேர்  பட்டையை அரைத்து நீர் சேர்த்து கசாயமாக காய்ச்சி மூன்று வேளை குடித்தால் வயிற்று பூச்சிகள் ஒழியும். மாதுளம் பூவை உலர வைத்து  பொடியாக்கி தூளை நீரில் கலந்து குடித்தால் இருமல் தீரும். பூவை இடித்து சாறு எடுத்து அத்துடன் ஓரிரு துளி இஞ்சி சாறு கலந்து குடித்தால் சளி,  இருமல் தீரும். பூச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்று கடுப்பு நீங்கும். கோடை துவங்கி விட்டதால் நாளும் ஒரு பழத்தை சாப்பிட்டு உடல்  நலனை பேணி பாதுகாப்போம்.