Wednesday, March 2, 2016

இயேசு ஒரு முஸ்லிம்தான்;


இயேசு ஒரு முஸ்லிம்தான்;
அவர் போதித்த மார்க்கம் இஸ்லாம்தான்
என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி தெள்ளத்தெளிவாக
விளங்கிக் கொள்ளுங்கள் ! பைபில் வசனங்களே இதற்கு போதிய ஆதாரமாகும்..!
1) இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது;
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இயேசு கர்த்தர்
அனுப்பிய தூதர்தான் என்பது இங்கு தெளிவாகிறது..! இயேசு கடவுள் என்றால் தானே சுயமாக செய்யும் சக்தி பெற்றிருக்க வேண்டும் ! கடவுளுக்கு பலஹீனம் இருக்கவே முடியாது என்ற உண்மையாவது கிருஸ்த்துவர்களுக்கு விளங்குதா ? தனக்கு சுயமாய் எதையுமே செய்ய இயலாது என்று இயேசு சொன்னால் இயேசுவின் பலஹீனம் வெளிக்காட்டப் படுகிறது !:
"நான் சுயமாய்ப் பேசவில்லை, நான்
பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும்
என்னை அனுப்பின பிதாவே எனக்குக்
கட்டளையிட்டார்.
யோவான் 12:49
2) இயேசுவால் சுயமாக யாரையும்
ஆசிர்வதிக்க இயலாது
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹:
20. அப்பொழுது, செபதேயுவின்
குமாரருடைய தாய் அவரிடத்தில்
வந்து அவரைப் பணிந்துகொண்டு:
உம்மிடத்தில்
ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள்.
21. அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன
வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்:
உம்முடைய ராஜ்யத்திலே என்
குமாரராகிய இவ்விரண்டுபேரில்
ஒருவன் உமது வலது பாரிசத்திலும்,
ஒருவன் உமது இடதுபாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி அருள்
செய்யவேண்டும் என்றாள்.
22. இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள்
கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத்
தெரியவில்லை. நான் குடிக்கும்
பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான்
பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும்
கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும்
என்றார்கள்.
23. அவர் அவர்களை நோக்கி: என்
பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்,
நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள்
பெறுவீர்கள்;ஆனாலும், என்
வலது பாரிசத்திலும்
இடது பாரிசத்திலும்
உட்கார்ந்திருக்கும்படி என்
பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்
பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும்
அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
மத்தேயு 20 : 20 முதல் 23 வரை
3) தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும்
இல்லை
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை)
நோக்கி: நல்ல போதகரே,
நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த
நன்மையைச் செய்யவேண்டும்
என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ
என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன்
ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும்
இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க
விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்
என்றார்.
மத்தேயு 19 : 16, 17
4) நித்திய ஜீவனில் பிரவேசிக்க
விரும்பினால் கற்பனையைக்
கைக்கொள்ள வேண்டும்...!
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இங்கு இயேசு பிரதான
கற்பனை எது என்பதையும்
தெளிவுபடுத்தியுள்ளார் இயேசு கடவுளாக இருந்தால் நிச்சயமாக இந்த இடத்தில் தன்னையும் இறைமையில் சேர்த்திருப்பார்..ஆனால், இயேசு சொன்ன.
பிரதானமான கற்பனை இதுதான்..! கிருஸ்த்துவர்களுக்கு அறிவிருக்குமானால் இந்த ஒரு வசனமும் போதும்..!
28. வேதபாரகரில் ஒருவன் அவர்கள்
தர்க்கம் பண்ணுகிறதைக்
கேட்டு, அவர்களுக்கு நன்றாய்
உத்தரவு சொன்னாரென்று அறிந்து,
அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம்
பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
29. இயேசு அவனுக்குப்
பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம்
பிரதான கற்பனை எதுவென்றால்:
இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய
கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
30. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்
முழு இருதயத்தோடும், உன்
முழு ஆத்துமாவோடும், உன்
முழு மனதோடும், உன் முழுப்
பலத்தோடும் அன்புகூருவாயாக
என்பதே பிரதான கற்பனை.
மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை
ஒரே இறைவனைத் தானே இயேசு வணங்கும் படி போதித்தார்..அப்புறம் எதற்காக இறைமையில் இயேசுவை கூட்டுச்சேக்கிறீர்கள் ?
5) இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால்
பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில்
பிரவேசிப்பானேயல்லாமல்,
என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே!
என்று சொல்லுகிறவன் அதில்
பிரவேசிப்பதில்லை.!
22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி:
கர்த்தாவே! கர்த்தாவே!
உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம்
உரைத்தோம் அல்லவா?
உமது நாமத்தினாலே பிசாசுகளைத்
துரத்தினோம் அல்லவா?
உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச்
செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23. அப்பொழுது, நான் ஒருக்காலும்
உங்களை அறியவில்லை.
அக்கிரமச் செய்கைக்காரரே,
என்னைவிட்டு அகன்று போங்கள்
என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
24. ஆகையால், நான் சொல்லிய இந்த
வார்த்தைகளைக்
கேட்டு, இவைகளின்படி செய்கிறவன்
எவனோ, அவனைக் கன்மலையின்மேல்
தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள
மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம்
வந்து, காற்று அடித்து,
அந்த வீட்டின்மேல் மோதியும்
அது விழவில்லை; ஏனென்றால்
அது கன்மலையின்மேல் அஸ்திபாரம்
போடப்பட்டிருந்தது.
26. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்
கேட்டு,
இவைகளின்படி செய்யாதிருக்கிறவன்
எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல்
கட்டின புத்தியில்லாத
மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.
27. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம்
வந்து, காற்று அடித்து,
அந்த வீட்டின்மேல்
மோதினபோது அது விழுந்தது;
விழுந்து முழுவதும்
அழிந்தது என்றார்.
28. இயேசு இந்த வார்த்தைகளைச்
சொல்லி முடித்தபோது,
அவர் வேதபாரகரைப்போல் போதியாமல்,
அதிகாரமுடையவராய்
அவர்களுக்குப் போதித்தபடியால்,
29. ஜனங்கள் அவருடைய
போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை
மேற்கண்ட பைபிள் வசனங்கள் அனைத்தும்
இயேசுவின் வாயிலிருந்து மொழிந்த
சொற்கள்தான். அவை அனைத்தும் புதிய
ஏற்பாட்டிலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப் படுகிறது ! பழைய ஏற்பாட்டில் ஓரிரைக் கொள்கையே மலிந்து காணப்படுகிறது ! இதனை நம்ப கிருஸ்த்துவர்கள் தயாரில்லை ! ஆனால் கிருஸ்த்துவ ஆண்களையும் பெண்களையும் அவர்களது வீடுகளுக்கே சென்று கட்டி இழுத்து வந்து, அவர்களை சித்திரவதை செய்து, கொலை செய்த கொலைகாரன் யூதப் பவுலின் கொள்கையில் மட்டும் நம்பிக்கை வந்துவிட்டதாம் ! இயேசுவை கடவுளாக்கி அந்த ஒரே இறைவனுக்கு இணை கற்பிக்கிறீர்களே..உங்களை விட வழிகெட்டவர்கள் யார் ? இதற்கு கிடைக்கப் போற வெகுமதி " நரக நெருப்பு " தான் ! படைப்பாளனை மறந்து, அவனால் படைக்கப் பட்டதை கடவுளாக்கியுள்ளீர்கள்..இப்படி கடவுளாக்கிய பவுலை பற்றி அன்றே இயேசுவின் குடும்பத்தினரும், அப்போஸ்தலர்களும் கூறிவிட்டார்கள்..! அவர்கள் கூறிய வார்த்தை என்ன தெரியுமா ?
" துரோகி"
இந்த பவுலின் புதுக்கொள்கையை இயேசுவின் வழியில் நின்ற மக்கள் எதிர்த்தார்கள்..

Comments
Senthil Nathan கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் குரானில் உள்ளது பைபிளில் உள்ளதா? அல்லது பைபிளில் உள்ளது குரானில் உள்ளதா?

மில்லத்நகர் மன்சூர் அலி அன்பு சகோ. பைபிளும் குரானிலும் சொல்லப்படுகிறது இந்த இரு புத்தகத்தையும் பாருங்கள் புரியும் மேலும் சந்தேகம்
இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.


Sahul Hameed பைபிளில் உள்ளது மாதிரி குர்ஆனில் இல்லை !..

Senthil Nathan இந்த பதிவு என்ன சொல்கிறது?

மில்லத்நகர் மன்சூர் அலி முலுமையாக படித்து பாருங்கள் புரியும்

மில்லத்நகர் மன்சூர் அலி பைபிளும் குரானும் இயேசு ஒரு இறைத்தூதர் என்று சொல்கிறது.அவர் கடவுள் இல்லை

மில்லத்நகர் மன்சூர் அலி அல்லாஹ் ஒருவனே என்று குர்ஆன் சொல்கிறது

Senthil Nathan எங்களுக்கும் ஒரே தெய்வம் (குலதெய்வம்),

Senthil Nathan என்னுடைய முதாதையோர்.

LikeReply12 hrs
Senthil Nathan கடவுளாக இருக்கிறார்கள்.

மில்லத்நகர் மன்சூர் அலி எங்கே இருக்கிறர்கள்.

Senthil Nathan எனக்குத் தெரியவில்லை.

மில்லத்நகர் மன்சூர் அலி மன்னிக்கவும் அப்பறம் எப்படி அவர்கள் கடவுளாக முடியும்?

மில்லத்நகர் மன்சூர் அலி எங்கே இருக்கிறார்கள் என்பதை உங்களால் அறியமுடியவில்லையா

Senthil Nathan ஆமாம்.

மில்லத்நகர் மன்சூர் அலி மன்னிக்கவும் அப்பறம் எப்படி அவர்கள் கடவுளாக முடியும்?

Senthil Nathan எல்லாவகையிலும் எங்களை காக்கின்றனர், எதனையும் அவர்களை கேட்டே செய்கிறோம்.

Senthil Nathan கண்கண்ட தெய்வமாக உள்ளார்கள்.

Senthil Nathan வேண்டியது நிறைவேறுகிறது.

மில்லத்நகர் மன்சூர் அலி நீங்கள் உங்கள் மத வேதநூல்களை படித்து உள்ளீர்களா??

Senthil Nathan தீயவைகளில் இருந்து காத்துக்கொள்ள சமிக்கைகள் செய்கிறார்கள்.

Senthil Nathan இல்லை.

Senthil Nathan அனுமதியுமில்லை, எனக்கு தகுதியுமில்லை.

மில்லத்நகர் மன்சூர் அலி ஒரு முறை உங்கள் மதநூல்களை படித்து பாருங்கள் உங்களுக்கு புரியும்.

மில்லத்நகர் மன்சூர் அலி ஏன் அனுமதி இல்லை

மில்லத்நகர் மன்சூர் அலி நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்.

மில்லத்நகர் மன்சூர் அலி தகுதியில்லை என்று உங்களை நீங்களே மதிப்பு குறைக்காதீர்கள்.

Senthil Nathan இந்து, படிக்க அநேக கட்டுபாடுகள் சொல்லுகிறார்கள், என்னால் கடைபிடிக்க முடியவில்லை(குறிப்பாக மாமிச உணவை என்னால் தவிர்க்க முடியவில்லை.)

மில்லத்நகர் மன்சூர் அலி யார் சொன்னது வேதங்களை படிப்பதற்க்கும் மாமிசம் உண்வதற்க்கும் என்ன சம்பந்தம்? இறைவன் மனிதனுக்காக தான் மாமிசத்தை படைத்தான்

மில்லத்நகர் மன்சூர் அலி அண்ணா நான் ஒரு முஸ்லீம் தினமும் மாமிசம் உண்கிறேன். தொழுக்கைக்கு செல்கிறேன் இதில் என்ன இருக்கிறது.

Senthil Nathan நானும் இதையே தான் கேட்டேன், தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்கள், விளக்க தற்போது எனக்கு நேரம் இல்லை.

Senthil Nathan மற்றுமொரு சந்தர்ப்பத்தில் தொடர்வோம், நன்றிகள்.


Senthil Nathan உணவு என்பது கீழ்க்கண்ட முறைகளில் பெறப்படுகிறது.

1.தன் உணவை தன்கட்டுப்பாட்டில் உயிருடன் வைத்து
கொஞ்சம் கொஞ்சமாக துடிக்க துடிக்க தின்பது.

2.மருந்துக்காக சுவைக்காக என்று பல்வேறு காரங்களுக்காக சிசு, இறந்த/கொல்லப்பட்ட குழந்தைகள் சிறுவயது காரர்களை தின்பது.

3.தன்னை அறுக்கும் போது மட்டும் எதிப்பை காட்டும் ஆடு மாடு போன்ற விலங்குகளை தின்பது.

4.தன்னைத்தீண்டும் போதும் உயிர் இருந்தும் எதிர்க்காத தாவரங்களை உண்பது.

5.பயிற்சியின் மூலமாக காற்றிலிருந்தே தனக்கான சக்தியை உருவாக்கி கொள்ளுதல்,

இவர்கள் அனைவரும் ஒரே குணங்கள் உடையவர்களாகவோ, ஒரே விதமான செயல்பாடுகள் உடையவர்களாகவோ, சொல்லும், கற்கும், படிக்கும் விடயங்களை சரியான விதத்தில் புரிந்து கொள்ளும் தன்மை உடையவர்களாகவோ இருப்பார்களா என்பது ஐயமே.

புலால் உணவை தவிர்த்தல் என்பது நடைமுறைப்படி சாத்தியமற்றது, இன்றைய மக்கள் பெருக்கத்தில் பட்டினியையே ஏற்படுத்தும்.

வேதமானது சூச்சமமானது, அதனை அது சொல்லவரும் கருத்தினை முழுமையாக அறிந்து கொள்ள தெளிந்த அறிவும், நிதான சிந்தனையும் மிகவும் அவசியம்.

குறைந்த பட்சம் வேதம் கற்போறும் அதனை கர்ப்பிப்போருமாவது கற்பிக்கப்படும் காலம் மட்டுமாவது மாமிச உணவைத்தவிர்த்தல் சரியான விதத்தில் கற்றுக்கொள்ள உறுதுணையாக இருக்கும் என்றார்கள். திரு மில்லத்நகர் மன்சூர் அலி அவர்களே
மில்லத்நகர் மன்சூர் அலி தேவன் ஒருவனே என்று பைபிள் சொல்கிறது.இயேசு(எ) ஈஸா நபி தேவன் ஒருவனே அவனையே வணங்குங்கள் என்னை பின்பற்றுங்கள்.என்று கூறுகிறது.

Senthil Nathan இதனை யார் செய்கிறார்கள்? இதன் பொருள் என்னை யாரும் வணங்கக்கூடாது என்பதா? வணங்க வேண்டாம் என்பதா?

மில்லத்நகர் மன்சூர் அலி என்னை வணங்காதீர்கள் என்னையும் உங்களையும் படைத்த இறைவனை மட்டும் வணங்குங்கள். என்பதுதான் இந்த வசனம்.

மில்லத்நகர் மன்சூர் அலி இது பைபிள் வசனம் இதை இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா??

Raj Stephan ஆமாம் சகோ.மில்லத்நகர் மன்சூர் அலி.......தேவன் ஒருவரே என்பதை தான் பைபிள் போதிக்கிறது இங்கே ஒருவரே என்பதற்கு ஹெப்றேவ் மொழியில்" echad " என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது கிரக்க மொழியில் " Hen " என்ற பதம் பயன்படுதப்பட்டுளது இதற்க்கு அர்த்தம் பன்மையிலான ஒருமை.... தேவன் மூன்று தன்மை உள்ளவர் அவர் ஒரே சர்வவல்லமையுள்ளவர் என்பதை இது உணர்த்துகிறது....mathew 15:9 யில் என்ன சந்தேகம் அந்த அதிகாரத்தை முழுவதும் படியுங்கள்......இயேசு கிறிஸ்துவை வணங்க கூடாது என்று நீங்கள் வாதம் வைகிறீர்களா அல்லது மாதாவை சொல்லுகிறீர்களா????

Raj Stephan 8. இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து,#தங்கள்_உதடுகளினால்_என்னைக்_கனம்பண்ணுகிறார்கள்;#அவர்கள்_இருதயமோ_எனக்குத்_தூரமாய் விலகியிருக்கிறது.

9. மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப்போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று,#ஏசாயா_தீர்க்கதரிசி_நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.


மில்லத்நகர் மன்சூர் அலி தேவன் ஒருவனே என்பதை தான் பைபிள் கூறுகிறது.ஆமாம் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் நீங்கள் 3 கடவுளை வழிபடுகிறீர்கள்.

Raj Stephan யாரு சொன்ன மூன்று கடவுள் என்று???

Raj Stephan ஒரு மனிதன் = சரிரம், ஆவி, ஆத்துமா.

ஒரு கர்த்தர் = பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.


மில்லத்நகர் மன்சூர் அலி பிதா என்றால் யார்?
குமாரன் என்றால் யார்?
பரிசுத்த ஆவி என்றால் யார்?


மில்லத்நகர் மன்சூர் அலி 1+1+1= 3 எப்படி ஒன்றாக முடியும்.
LikeReply5 hrs
மில்லத்நகர் மன்சூர் அலி பைபிளில் எந்த இடத்திலாவது கர்த்தர். நான்தான் உங்களை படைத்தேன்,நான்தான் உங்களுக்கு உணவளிக்கிறேன் நான்தான் உங்களுக்கு உயிர்குடுத்தேன் நான்தான் உங்களை மரணிக்கவும் செய்வேன் என்று செல்கிறாரா.செல்லுங்கள்.

Raj Stephan சரிரம் என்றால் என்ன ஆவி என்றால் என்ன ஆத்துமா என்றால் என்ன என்பது அப்போ உங்களுக்கு புரிகிறது அப்படி தானே சகோ....
1+1+1=3 தான் இதில் சந்தேகம் இல்லை. பிதா + குமரன்+ பரிசுத்த ஆவி = ஒரே கர்த்தர்....இதை தான் 1+1+1=1 என்று சொல்லுகிறார்கள் இதில் என்ன தவறு ஒரே கர்த்தர் மூன்று தன்மையில் செயல் படுகிறார்கள். அவர் ஒரே சர்வ வல்லமை யுள்ளவர் 1*1*1=1.


மில்லத்நகர் மன்சூர் அலி இல்லை நண்பா 1+1+1=3 ஒன்று ஆக முடியாது

மில்லத்நகர் மன்சூர் அலி மேலே உள்ள கேள்விக்கு பதில் தரவும்.

Raj Stephan 1+1+1=3 தான் நாங்கள் யாரும் ஒன்று என்று சொல்லவில்லை.... இவை என்ன போதிக்கிறது என்றால் கர்த்தருக்குள் மூன்று தன்மை உள்ளதை சொல்லுகிறது. அந்த முன்றும் ஒரே சர்வவள்ளமையுல்லவர் 1*1*1=1.

Raj Stephan பைபிளில் எந்த இடத்திலாவது கர்த்தர். நான்தான் உங்களை படைத்தேன்,நான்தான் உங்களுக்கு உணவளிக்கிறேன் நான்தான் உங்களுக்கு உயிர்குடுத்தேன் நான்தான் உங்களை மரணிக்கவும் செய்வேன் என்று செல்கிறாரா.செல்லுங்கள்./////////////ஹா ஹா ஹா நீங்கள் எங்கள் வேதத்தை படிக்கவே இல்லை போல....இதில் இருந்து தெரிகிறது.

மில்லத்நகர் மன்சூர் அலி வைத்துக்கொள்ளுங்கள் நான்உங்கள் வேதத்தை படிக்கவில்லை என்று ஆதாரத்துடன் எனக்கு தாருங்கள் பார்க்கலாம்.

மில்லத்நகர் மன்சூர் அலி அந்த முன்றும் ஒரே சர்வவள்ளமையுல்லவர்
அவர்யார்????

1 comment:

  1. நண்பா இயேசுவை இறைத்தூதர் என்று வைத்துக் கொள்வோம்.ஆனால் முகம்மது என்கிற நபர் மனிதன் மட்டுமே.அதனால் முதலில் உங்கள் டவுசரில் இருக்கும் அழுக்கை துடையுங்கள்

    ReplyDelete