Friday, February 14, 2014

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
*****************

பணம் இல்லாத போது...
ஹோட்டல்ல வேலை
செஞ்சாலும் வீட்ல வந்து
சாப்பிடுகிறான்.

பணம் இருக்கும் போது...
வீட்டுல சமச்சாலும்
ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான்.

பணம் இல்லாத போது...
வயத்தை நிரப்ப சைக்கிள்ல போறான்.

பணம் இருக்கும் போது...
வயத்தைக் குறைக்க சைக்கிள்ல போறான்.

பணம் இல்லாத போது...
சோத்துக்காக அலைகிறான்.

பணம் இருக்கும் போது...
சொத்துக்காக அலைகிறான்.

பணம் இல்லாதபோது...
பணக்காரனாக நடந்து கொள்கிறான்.

பணம் இருக்கும் போது...
ஏழையாக காட்டிக் கொள்கிறான்.

நிம்மதியாக இருக்கும் போது...
பணத்தைத் தேடுகிறான்.

பணம் இருக்கும் போது...
நிம்மதியை தேடுகிறான்.

# பணம் மட்டுமல்ல
பணத்தை வைத்திருக்கும்
மனிதனின் மனமும் ஒரு குரங்கு.

No comments:

Post a Comment