Tuesday, June 21, 2016

திருக்குர்ஆன் 39:42


Senthil Nathan திருக்குர்ஆன் 39:42 - இந்த வசனம் குறித்த விளக்கம் தாருங்களேன்.

Jaleel Rahman உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும்,மரணிக்காதவற்ற அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான் எதற்க்கு மரணத்தை விதித்து விட்டானோ அதை தனது கைவசத்தில் வைத்துக்கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான் சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன 39;42

Michael P உயிர்னா என்னானு உங்க அல்லாவுக்கும் தெரியாது உங்களுக்கும் தெரியாது என்று விளங்குகிறது ..உயிர் உடலில் எங்கே இருக்கிறது பதில் வருமா?

Jaleel Rahman விபத்தில் செத்துட்டார் என நாம் நினைப்போம் ஆனால் அவர் உயிருடன் மீண்டு வருவோரை பார்த்து இருக்கிறோம்..,உறக்கம் என்பதும் சிறு மரணம் தான் நைட்டு நல்லா தான் சாப்பிட்டுட்டு தூங்குனாரு காலைல இறந்துட்டாருன்னு சொல்வோறை பார்த்து இருக்கிறோம் அனைத்து உயிர்களும் இறைவனின் கைவசம் இருக்கும் அவர்களின் மரண நேரம் வந்து விட்டால் ஒரு நொடி முந்தவும் முடியாது பிந்தவும் முடியாது சிந்தித்தால் பல சான்றுகள் அல்லாஹ் இருக்கிறான் என்பதும் இருக்கும்...

Michael P உயிர் எங்கே இருக்கிறது ?
தூக்கத்தில் இறப்பது ஹார்ட்அட்டேகில் தான் உமது அல்லாவால் அல்ல ..ஹார்ட்அட்டேக் வர பல காரணங்கள் உள்ளது

Dhanaraj Nagappan எப்போ செத்தாலும் இதுதான் அல்லா சொன்ன நேரம் என்பதற்கு பதில் இருக்க இயலுமா என்ன? போத தெளிய வேண்டும் உங்களுக்கு

Jaleel Rahman உங்களைபோல் சிந்திக்கும் திரன் குறைவுள்ளவர்கள் இருக்கக் கூடும் என்று தான் அல்லாஹ் அதே வசனத்திலேயே கூறுகிறான் சிந்தித்தால் அதில் பல சான்றுகள் உள்ளன என்று....உங்கள் மரண தேதி எதிர் வர கூடிய 16ம் தேதியும் உங்கள் தாய்க்கு அடுத்த மாதம் 8ம் தேதியும் உங்கள் குழந்தை இன்னும் 2நாளில் அடிப்பட்டு சாகப்போகிறார்கள் என்று அனைவருக்கும் மரண தேதியை அல்லாஹ் முன்கூட்டியே சொல்லியிருந்தால் உலகம் இயங்காது அதற்க்கு தான் சிந்தியுங்கள் என கூறுகிறான்!!!

Michael P ஏன் சொல்லிதான் பார்க்கட்டுமே உங்க அல்லா!!!
முடியாததை சொல்ல மட்டும் பூடகமான வசனங்கள் இதே மாதிரிதான் குரான் முழுவதும் உள்ள வசனங்கள் அம்புலிமாமா கதைகளுக்கு பஞ்சமில்லை

Senthil Nathan அதாவது ஒவ்வொறு நாளும் மனிதன் தூங்கும் நிகழ்வு என்பது மரணிப்பது ஆகும், அப்படித்தானே?

Jaleel Rahman ஆமாம்

Senthil Nathan அப்படியானால் (திரும்பவும்) தூக்கத்திலிருந்து விளிப்பவரை மறுபிறவி எடுத்தவர் எனக்கூறலாமா?

Jaleel Rahman உறக்கம் என்பது மரணத்திற்க்கு சமம் தூங்கி காலையில் எழுந்தால் தான் நிச்சயம்

Michael P தூங்காம இருந்துதான் பாருங்களேன் ..ஒரேயடியா போய் விடுவீர்கள்

Senthil Nathan கண்டிப்பாக, ஆனாலும், தூங்கும் பெரும்பாலான மக்கள் எழுந்து விடுயரார்களே, அப்படி எழுந்திருப்பவர்களை மறுபிறவி எடுத்தவர்கள் என கூறுதல் தகுமா? என்பதுதான் எனது கேள்வி.

Jaleel Rahman அப்படி ஆகாது அப்படி சிந்தித்தால் தினம் தினம் பல்லாயிரக்கணக்கானோலர் மறு பிறவி எடுத்துக்கொண்டே உள்ளார் எனப் பெருள் படும்

Senthil Nathan பொருள் படத்தானே செய்யும். மரணித்தவர் அதே நினைவுகளுடன் பிறப்பதனைத் தானே மறுபிறப்பு என்கிறோம், அப்படி இறுக்கையில் ஏன் அப்படி ஆகாது?

Jaleel Rahman உறங்கியவர் திரும்ப எழும் போது அந்த மரணம் முழுமையடையாது

Senthil Nathan புரியவில்லை, தாங்கள், உறங்குவது என்பது முழுமையான மரணம் இல்லை என சொல்ல முயல்கிறீர்களா?

Michael P அது அல்லாவிற்கே புரியாத ஒன்று

Murugesh Murugesh அப்போ
எல்லா பயலும்
தூங்கபோகும் போது

உயில் எழுதிட்டுதான் போணும்

Michael P //சாட்சியத்தில் ஆண், பெண் பாரபட்சம் ஏன்? இரண்டு பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சிக்குச் சமமாகத் திருக்குர்ஆன் 2:282 கூறுகிறது. பெண்களை மட்டம் தட்டுவது போல் இது சிலருக்குத் தோன்றலாம்.//

தோன்றுவது என்ன மட்டம் தட்டுவதேதான்
Michael P // சாட்சியம் என்பது உண்மையை உலகறியச் செய்வதும், இன்னொருவரின் எதிர்காலத்தை முடிவு செய்வதுமாகும். தனக்கு வேண்டியவர்களிடம் காணப்படும் மிகப்பெரும் குறையையும் மிகச் சிறிய குறையாகக் காண்பதும், தனக்கு வேண்டாதவர்களிடம் காணப்படும் சின்னஞ் சிறிய குறையையும் மிகப்...
Michael P //மேலும் சாட்சி கூறுவதற்காக அதற்கான சபைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் செல்பவர்கள் எதிரிகளால் மிரட்டப்படுவதை சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். ஆண்களை விடப் பெண்கள் மிரட்டலுக்கு அதிகம் அஞ்சுவார்கள் என்பதும் இரு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணின் சாட்சியத்திற்குச் ...
Michael P மற்ற கேள்விகளுக்கு சீக்கிரம் பதிலை சொல்லுங்கப்பா இன்னும் குரானின் பல குளருபடிகளை சொல்ல வேண்டும் ...குரானில் தவறு இருக்கிறதா என்று கேட்ட புண்ணியவான் எங்கே ?

அன்பு. மூட நம்பிக்கையாளர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்துவிடுவோம் என்கிறீர்களா?

Michael P உளறமா பதிவை படிச்சுட்டு வந்து பதில் சொல்லவும்

அன்பு. Senthil Nathan அப்படியானால் (திரும்பவும்) தூக்கத்திலிருந் து விளிப்பவரை மறுபிறவி எடுத்தவர் எனக்கூறலாமா?//குறள் 339: உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. மு.வ உரை: இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்க ம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

Michael P எங்கே இன்னும் குட்டையை குழப்ப வரலையேனு பார்த்தேன்

அன்பு. பதிவில் தவறு உள்ளது மூடநம்பிக்கையாளர்கள் அனைவரும் மாற்றப்பட்டு இனி அனைவரும் பகுத்தறிவாளர்கள் என்ற நிலை வந்தால்தான் முதல் இடம் என்று அர்த்தமாகும்.அவர்கள் வரிசையில் நீங்கள் ஏன் இடம் பிடிக்கவேண்டும்?.உங்கள் கூற்றுபடி பார்த்தால் மதங்களோடு பகுத்தறிவும் மொத்த மக்கள் தொகையில் மூடநம்பிக்கை 98 சதமாகிவிடும்.

Dhanaraj Nagappan உவமானம் உவமேயம் பற்றி போய் படித்து வாருங்கள் அன்பு. பஞ்சு போல் இட்டிலி என்றால் பஞ்சைச் சாப்பிடுவீர்களா. உறங்குவது போலும் சாக்காடு என்பது உவமான உவமேயத்தில் வரும். உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்பா மொக்கை பார்ட்டி அய்யா நீர்.

Dhanaraj Nagappan போல, புரைய என்பனவெல்லாம் என்ன என்று மறுபடியும் ஒன்றாம் வகுப்பிலிருந்து போய் படியும். உறங்குவது போலும் .......... புரியுதா. போலும், போலும். ம்ம்ம்ம்ம்ம்

Dhanaraj Nagappan அன்பு. முதல் இடம் என்பது ஒப்பீடு. 100 விழுக்காடு அல்ல. மொக்கை போடாதீர்.

Dhanaraj Nagappan மத வெறியர்களிடமிருந்து மொக்கை போட என்றே சிலர் கிளம்பியிருக்கின்றார்கள் போல் உள்ளது.

Michael P //பதிவில் தவறு உள்ளது மூடநம்பிக்கையாளர்கள் அனைவரும் மாற்றப்பட்டு இனி அனைவரும் பகுத்தறிவாளர்கள் என்ற நிலை வந்தால்தான் முதல் இடம் //

நாத்திகர்கள் அதிகரிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் மூடநம்பிகையாளர்கள் பகுத்தறிவாளர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம்
...See more

Senthil Nathan திரு அன்பு. அவர்களுக்கு. திருவள்ளுவர் சொல்லுவது போல மரணம் என்பது தூங்குவது போல என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. மறுஜென்மம் என்பதனை நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இதனை மறுக்கும் இஸ்லாத்தினரிடமே விளக்கம் பெறும் நோக்கில் கேள்விகள் கேட்டேன்.

Senthil Nathan அதில் கேள்விகள் கேட்க முடியவில்லை, பலமுறை முயற்சி செய்து விட்டேன். என்னுடைய குறைந்த பட்ச இஸ்லாம் பற்றிய அறிவின் பெரும்பங்கு இத்தளத்திற்கே உரியது.

Michael P மறுஜென்மம் என்று ஒன்றில்லையே ..

Senthil Nathan நிருபணம் செய்யுமளவுக்கு என்னிடம் இல்லை.

Michael P மறுஜென்மத்தை நிறுபித்தவர்கள் யாரும் இல்லை

Sey7 May at 00:01nthil Nathan நிருபிக்க படாத நிருபிக்க முடியாத அநேகம் உள்ளது இவ்வுலகிலே.

Michael P அதில் பெரிய அண்ணன் கடவுள் அவன் தம்பிகள் பேய் பிசாசு சைத்தான்

No comments:

Post a Comment