Saturday, April 12, 2014

வாடகை கார்

Posted Image
பார்ட்டிக்கு சென்று விட்டு போதையில் வெளியே வந்த மூன்று நண்பர்கள் ஒரு டாக்சியை பிடித்தனர் 

செல்ல வேண்டிய இடத்தை சொல்லி விட்டு அவர்கள் வாகனத்தில் ஏறிய அழகிலேயே அவர்கள் போதையில் இருக்கின்றனர் என்பதை கண்டு பிடித்து விட்டார். 
கொஞ்ச தூரம் சென்ற உடன், வண்டியை நிறுத்தி, "நீங்க சொன்ன இடம் வந்து விட்டது", என்றார்.

தாங்கள் செல்ல வேண்டிய இடம் இன்னும் வரவில்லை என்பதை கூட உணராமல் மூவரும் இறங்கினார்கள்.


முதலாம் ஆள், நன்றி சொன்னான்.

இரண்டாம் ஆள், பணம் கொடுத்தான்.


மூன்றாம் ஆள், டிரைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அவனுக்கு உண்மை தெரிந்து விட்டதா? போலீசில் புகார் செய்வானோ? தப்பு பண்ணி விட்டோமா என்று நடுங்கி கொண்டு இருக்க, அவன் சொன்னான்.

"முட்டாள்! இவ்வளவு வேகமாகவா வண்டியை ஓட்டுவது? உயிரின் மேல் கொஞ்சம் கூட அக்கறையே இல்லையே? இன்னொரு முறை இவ்வளவு வேகமாக நீ வண்டி ஓட்டுவதை பார்த்தேன் ஓவர் ஸ்பீட் என்று போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணி விடுவேன். ஜாக்கிரதை...."

No comments:

Post a Comment