Thursday, January 21, 2016

கைரேகை

Siddhayogi Sivadasanravi
கிரக மேடுகள்
உள்ளங்கையில் விரல்களின் அடிப்பாகங்களில் சதைப்பற்றுடன் உப்பலாக காணப்படும் பகுதிகள் கிரக மேடுகள் என அழைக்கப்படுகின்றன.
மோதிர விரலுக்கு கீழே உள்ள மேட்டுப்பகுதி சூரிய மேடாகும்.
புத மேட்டிற்கு கீழும் சுக்கிர மேட்டிற்கு பக்கவாட்டிலும்,மணிகட்டிற்கு மேலுமாய் அமைந்துள்ள மேட்டுப்பகுதி சந்திர மேடாகும்.
குரு மேட்டிற்கு கீழும் பெரு விரலின் அடிப்பாகத்திற்கு மேலுமாக அமைந்துள்ள மேட்டுப்பகுதி செவ்வாய் மேடாகும்.
சிறு விரலுக்கு கீழே அமைந்துள்ள மேட்டுப்பகுதி புத மேடாகும்.
ஆள்காட்டி விரலுக்கு கீழே அமைந்துள்ள மேட்டுப்பகுதி குரு மேடாகும்.
பெருவிரலின் அடிப்பாகம் முதல் மணிக்கட்டு வரை அமைந்துள்ள மேட்டுப்பகுதி சுக்கிர மேடாகும்.
நடு விரலுக்கு கீழே அமைந்துள்ள மேட்டுப்பகுதி சனி மேடாகும்.


=================================================================================





===================================================================================



Siddhayogi Sivadasanravi
சுக்கிர மேட்டில் எத்தனை தெளிவான கோடுகள் உள்ளனவோ அத்தனை குழந்தைள். படத்தில் உள்ளது எனது வலது உள்ளங்கை. எனக்கு இரண்டு குழந்தைகள்.


=========================================================================

Siddhayogi Sivadasanravi
ஆண்கள் கையில் சுக்கிர காரக அபிவிருத்தி ரேகை இருந்தால் அவர்களுக்கு மனைவியைத்தவிர வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கிய நட்பு இருக்கும்.


=====================================================================


===============================================================================


ராசிக்கட்டத்தில் எப்படி உள்வட்ட கிரகங்களின் வீடுகள் ஒரு புறமாகவும், வெளிவட்ட கிரகங்களின் வீடுகள் இன்னொரு புறமாகவும் அமைந்துள்ளனவோ, அதே போல் தான் உள்ளங்கையிலும் உள்வட்ட கிரக மேடுகள் ஒரு புறமாகவும்,வெளிவட்ட கிரக மேடுகள் இன்னொரு புறமாகவும் அமைந்துள்ளன.

=====================================================================


Siddhayogi Sivadasanravi
கைரேகை கலைக்கும் ஜோதிட கலைக்கும் உள்ள தொடர்பு
கையிலுள்ள கிரஹ மேடுகளுக்கும் ராசி கட்டத்திலுள்ள கிரஹ ஆட்சி வீடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அது எப்படி என்பதைப்பார்ப்போம்.
ராசிகட்டத்தில் சூரியனுக்கும் புதனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான சிம்மமும், கன்னியும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதனாலேயே கையில் சூரிய மேடும் புதமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் சனிக்கும் ,குருவுக்கும் உரிய ஆட்சி வீடுகளான தனுசும், மகரமும் அடுத்தடுத்த ராசிகளாகும். இதுபோல் கும்பமும்.மீனமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் சனி மேடும் ,குருமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் செவ்வாய்க்கும் ,சுக்கிரனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான மேசமும், ரிசபமும் அடுத்தடுத்த ராசிகளாகும். இதுபோல் துலாமும்,விருச்சிகமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் செவ்வாய் மேடும், சுக்கிரமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் குருவுக்கும் ,செவ்வாய்க்கும் உரிய ஆட்சி வீடுகளான விருச்சிகமும் , தனுசும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதுபோல் மீனமும் .மேசமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் குருமேடும் ,செவ்வாய் மேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் புதனுக்கும்,சந்திரனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான மிதுனமும், கடகமும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதனாலேயே கையில் புதமேடும்,சந்திர மேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் ராஹு,கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் கிடையாது என்பர்.இதனால்தான் கையில் ராஹு,கேதுக்களுக்கு மேடுகள் எதுவும் இல்லை.இதுவே கிரஹ ஆட்சி வீடுகளுக்கும், கிரஹ மேடுகளுக்கும் உள்ள தொடர்பாகும்.

===========================================================================


அடிப்படை ரேகைகள்
-----------------------------------
உள்ளங்கையில் இடமிருந்து வலமாகச்செல்லும் ரேகைகளுக்கு அடிப்படை ரேகைகள் என்று பெயர்.குரு ரேகை,செவ்வாய் ரேகை,சுக்கிர ரேகை ஆகிய மூன்று ரேகைகளும் உள்ளங்கையில் இடமிருந்து வலமாகவும்,வலமிருந்து இடமாகவும் குறுக்கு வசமாக, அதாவது படுக்கையாக செல்கின்றன.எனவே இவை மூன்றும் அடிப்படை ரேகைகளாகும்.
மனிதராகப்பிறந்தவர்கள் அனைவருடைய கைகளிலும் இந்த மூன்று ரேகைகளும் காணப்படும்.இம்மூன்று ரேகைகளும் உள்ளங்கையில் பழுதில்லாமல் காணப்பட்டால் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் எல்லாம் ஓரளவிற்கு அமையும். உள்ளங்கையில் இம்மூன்று ரேகைகளைத்தவிர வேறு ரேகைகள் இல்லாமல் இம்மூன்றில் ஒன்றிரண்டு ரேகைகள் பழுதுபட்டு காணப்பட்டால் வாழ்க்கை சராசரி நிலைக்கும் கீழாகத்தான் இருக்கும்.அடிமை வாழ்க்கை வாழ நேரிடும்.
=================================================================================




விரல் நுனி வரிகீற்று ரேகை வகைகள்


=====================================================================================



்த முன்னேற்றத்தை அடைவார்கள்.
சூரிய ரேகை காணப்பட்டால் வாழ்க்கையில் மதிப்பு,மரியாதை,புகழ்,கீர்த்தி,பட்டம்,பதவிகளை அடைவார்கள்.
சனிரேகை காணப்பட்டால் தொழில்,வியாபாரம்,உத்யோகம் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைவார்கள்.
உள்ளங்கையில் முன்னேற்ற ரேகைகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் சொல்லிக்கொள்கிறமாதிரி எதுவும் இருக்காது.

===================================================================================



Siddhayogi Sivadasanravi
கைரேகைகளைக்கொண்டு பலன் கூறும் முறை

நாடி ஜோதிடத்தில் ஜாதகத்தில் உள்ள கிரஹ சேர்க்கைகளைக்கண்டறிந்து எப்படி பலன் கூறப்படுகிறதோ அதே முறையில் கைரேகை கலையில் ஒரு ரேகைக்கும் மற்றொரு ரேகைக்கும் உள்ள தொடர்பைக்கண்டறிந்து அதன் மூலம் கிரஹ சேர்க்கையைக்கண்டறிந்து பலன் கூறவேண்டும்.அதாவது கரேகை மூலம் கிரஹ சேர்க்கைகளைக்கண்டறிந்து பலன் கூறவேண்டும்.
இரண்டு கிரஹங்கள் சேர்க்கைப்பெற்றால் அவை தங்களுடைய காரக பலன்களை ஒன்றோடொன்று பகிர்ந்துகொள்ளும் என்பது நாடி ஜோதிட விதியாகும்.அதே நாடி ஜோதிட விதிதான் கைரேகைக்கலையிலும் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக ஜாதகத்தில் குருவும் சூரியனும் சேர்க்கைப்பெற்றால் என்ன பலன் என்று பார்ப்போம்.
ஆண் ஜாதகத்தில் ஜாதகனைக்குறிக்கும் கிரஹம் குருவாகும்.தகப்பனைக்குறிக்கும் கிரஹம் சூரியனாகும். குருவுடன் சூரியன் சேர்க்கை பெற்றதால் ஜாதகன் பேர்,புகழுடையவன்,நிர்வாகத்திறமையுடையவன்.சுய மரியாதையுடையவன்.
சூரியனுடன் குரு சேர்க்கைப்பெற்றதால் ஜாதகருடைய தகப்பன் சாந்த குணமுடையவன்,தர்மகுணமுடையவன்,தெய்வ பக்தியுடையவன்.
குருவும் சூரியனும் பரஸ்பர நட்புக்கிரஹங்களாகும்,எனவே ஜாதகனுக்கும் அவனுடைய தகப்பனுக்கும் இடையே உள்ள உறவு நெருக்கமாக இருக்கும்.இவ்வாறு மற்ற கிரஹ சேர்க்கைகளுக்கும் பலன் அறியலாம்.
அடுத்து கை ரேகையில் கிரஹ சேர்க்கையை கண்டறிவது எப்படி எனப்பார்ப்போம்.
இயல்பாக ரேகைகள் எந்த மேட்டில் தொடங்கி ,எந்த மேட்டில் முடிய வேண்டுமோ அதன்படி உள்ளங்கையில் அமைந்திருக்கவேண்டும் என்பது பொதுவான விதியாகும்.அதாவது ரேகைகள் தங்களுக்குரிய மேட்டை நோக்கி செல்லவேண்டும் என்பது பொது விதி.இதற்கு மாறாக ஒரு ரேகை தனக்குரிய மேட்டை நோக்கிச்செல்லாமல் வேறு ஒரு கிரஹ மேட்டை நோக்கிச்செல்லுமானால் அந்த ரேகைக்குரிய கிரஹமும் அந்த மேட்டுக்குரிய கிரஹமும் சேர்க்கைப்பெற்றதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக சூரிய ரேகையிலிருந்து தொடங்கும் ஒரு கிளை ரேகை குரு மேட்டை நோக்கி செல்லுமானால் சூரியன்,குருவினுடைய வீடுகளில் ஒன்றான தனுசுவிலோ அல்லது மீனத்திலோ இருப்பான் அல்லது ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு திரிகோண ராசியிலோ (1-5-9) அல்லது சப்தம ராசியிலோ (1-7),அல்லது முன் பின் ராசியிலோ (2-12) சூரியன் நின்றிருப்பான்.
அடுத்து ஒரு ரேகை மற்றொரு ரேகையுடன் இணைவு பெற்றிருந்தால் அவ்விரு ரேகைகள் குறிக்கும் கிரஹங்களும் சேர்க்கை பெற்றதாக எடுத்துக்கொண்டு பலன் கூற வேண்டும்.ரேகை இணைவுகள் எப்படி இருக்கும் என்றால் ஒரு ரேகை வளைந்து சென்று மற்றோரு ரேகையுடன் இணந்திருக்கலாம் அல்லது ஒரு ரேகையிலிருந்து தோன்றும் கிளை ரேகை மற்றொரு ரேகையுடன் இணைந்திருக்கலாம்.
உதாரணமாக விளக்கப்பட்டுள்ள குரு,சூரியன் சேர்க்கை ஜாதகத்திலும் ,கைரேகையிலும் எப்படி இருக்கும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஜாதகத்தில் குருவுக்கு திரிகோணத்தில்(5ல்) சூரியன் நிற்கிறார். இது குரு, சூரியன் சேர்க்கையாகும்.கைரேகையில் சூரிய ரேகையானது குரு ரேகையுடன் இணைந்துள்ளது.இது கைரேகையில் காணப்படும் குரு,சூரியன் சேர்க்கையாகும்.எனவே குரு,சூரியன் சேர்க்கைக்குரிய பலாபலன்களை கூறவேண்டும்.

================================================================================



கை ரேகைக்கலை - அறிமுகம்
-----------------------------------------------
கை ரேகை கலையை ஆங்கிலத்தில் “Palmistry” (பாமிஸ்டிரி) என அழைக்கிறார்கள். “Palmistry” என்னும் வார்த்தையில் Palm, Mastery என இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. Palm என்றால் உள்ளங்கை எனப்பொருள்படும். Mastery என்றால் ஞானம் எனப்பொருள்படும்.எனவே Palmistry என்றால் உள்ளங்கை பற்றிய ஞானம் எனப்பொருள்படும்.
கை ரேகை கலையை ஆங்கிலத்தில் வேறு ஒரு வார்த்தையிலும் குறிப்பிடுகிறார்கள். Cheirosopy (கீரோஸபி) என்பது அந்த வார்த்தையாகும். அதில் Cheiro, Sopy என இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. Cheiro என்றால் கை எனப்பொருள்படும். Sopy என்றால் ஞானம் எனப்பொருள்படும்.எனவே Cheirosopy என்றால் கையைப்பற்றிய ஞானம் எனப்பொருள்படும்.
கை ரேகை கலையை சமஸ்கிருதத்தில் "ஹஸ்த ரேகா சாஸ்திரம்" எனக்குறிப்பிடுகிறார்கள்."ஹஸ்தம்" என்றால் கை என்று பொருள்."ரேகா" என்றால் "கோடு" என்று பொருள்."சாஸ்திரம்" என்றால் "அறிவியல்" என்று பொருள்.எனவே "ஹஸ்த ரேகா சாஸ்திரம்" என்றால் கையிலுள்ள கோடுகளைப்பற்றிய அறிவியல் எனப்பொருள்படும்.
"ஹஸ்த ரேகா சாஸ்திரம்" என்ற சமஸ்கிருத சொல்லின் தமிழாக்கமே "கை ரேகை கலை" என்னும் வார்த்தையாகும். இதை ஒரு முழுமையான தமிழ்ச்சொல்லாகக்கருத முடியாது. ஏனென்றால் "ரேகை" என்பது " ரேகா" என்ற சமஸ்கிருத சொல்லின் திரிபே ஆகும். "கை ரேகை கலை" என்பதை "கை வடிவ இயல்" எனக்குறிப்பிடுவது சரியாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
Cheirosopy (கீரோஸபி) என்னும் கை வடிவ இயலில் இரு பிரிவுகள் உள்ளன.அவை
1) Cheirognomy (கீரோக்னமி)-கை புறத்தோற்றவியல்
2) Cheiromancy (கீரோமன்ஸி)-கை அகக்கோட்டியல்

Cheirognomy (கீரோக்னமி) என்னும் கை புறத்தோற்றவியலில் கைகளின் ஒட்டுமொத்த புறத்தோற்றம்,விரல்களின் தோற்றம்,விரல் நகங்களின் தோற்றம், உள்ளங்கையில் காணப்படும் கிரஹ மேடுகளின்(கோள் மேடு) தோற்றம் இவகளைக்கொண்டு பலாபலன்கள் கூறப்படுகிறது.
Cheiromancy (கீரோமன்ஸி) என்னும் கை அகக்கோட்டியலில் உள்ளங்கையில் காணப்படும் ரேகைகள் (கோடுகள்) மற்றும் குறியீடுகளைக்கொண்டு பலாபலன்கள் கூறப்படுகிறது.
பஞ்சாங்கத்தில் வாரம்,திதி,நட்சத்திரம்,யோகம்,கரணம் என ஐந்து அங்கங்கள் உள்ளது போல் கை ரேகை கலை என்னும் கை வடிவ இயலிலும் ஐந்து அங்கங்கள் உள்ளன.அவை கீழே தரப்பட்டுள்ளன.
1.கைகளின் வகைகள்
2.விரல்களின் வகைகள்
3.உள்ளங்கையிலுள்ள கிரஹ மேடுகள்
4.உள்ளங்கையிலுள்ள ரேகைகள்
5.உள்ளங்கையிலுள்ள குறியீடுகள்
உள்ளங்கை என்பது மணிக்கட்டு முதல் விரல் நுனிகள்வரை உள்ள பகுதியாகும். இந்த உள்ளங்கையில் மொத்தம் 27 எலும்புகள் உள்ளன.
மணிகட்டில் - 8
மணிகட்டிற்கும் விரல்களுக்கும் நடுவில் -5
விரல்களில் -14
-------
மொத்தம் -27
-------
ராசி சக்கரத்தில் உள்ள மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் 27 தான்.
உள்ளங்கையில் ராசி சக்கரம் போல் கிரஹ மேடுகள் அமைந்துள்ளன.கை ரேகை கலையில்
கைகளின் வகைகள்-7
கிரஹ மேடுகள்-7
முக்கிய ரேகைகள்-7


=======================================================================



====================================================================================




====================================================================


Siddhayogi Sivadasanravi
உள்ளங்கை ரேகைகள்
உள்ளங்கையில் பல ரேகைகள் காணப்படுகின்றன. உள்ளங்கை ரேகைகள் ஒருவருக்கு அமைந்தது போல் இன்னொருவருக்கு அமைந்திருக்காது. உள்ளங்கையில் பல ரேகைகள் காணப்பட்டாலும் அவைகளில் முக்கிய ரேகைகள் ஏழாகும். அவை:
1.சூரிய ரேகை 2.சந்திர ரேகை 3.செவ்வாய் ரேகை 4.புத ரேகை 5.குரு ரேகை 6.சுக்கிர ரேகை 7.சனி ரேகை என்பவையாகும்.
சந்திர மேட்டில் தொடங்கி சூரிய மேட்டில் முடியும் ரேகை சூரிய ரேகையாகும்.
சந்திர மேட்டில் குறுக்கு வசமாக காணப்படும் ரேகை சந்திர ரேகையாகும்.
செவ்வாய் மேட்டில் தொடங்கி சந்திர மேட்டில் முடியும் ரேகை செவ்வாய் ரேகையாகும்.
சந்திர மேட்டில் தொடங்கி புத மேட்டில் முடியும் ரேகை புத ரேகையாகும்.
புத மேட்டில் தொடங்கி குரு மேட்டில் முடியும் ரேகை குரு ரேகையாகும்.
கட்டை விரலுக்கு கீழே சுக்கிர மேட்டை சுற்றி வளையமாகச் செல்லும் ரேகை சுக்கிர ரேகையாகும்.
சந்திர மேட்டில் தொடங்கி சனி மேட்டில் முடியும் ரேகை சனி ரேகையாகும்.
எந்த ரேகையில் பிளவுக்குறி காணப்படுகிறதோ அந்த ரேகைக்குரிய கிரகத்துடன் ராகு இணைந்துள்ளதாக பொருள்.
எந்த ரேகையில் பாம்பின் வால் போன்ற தோற்றம் காணப்படுகிறதோ அந்த ரேகைக்குரிய கிரகத்துடன் கேது இணைந்துள்ளதாக பொருள்.
உள்ளங்கையில் முக்கிய ரேகைகளை மட்டுமே நிரந்தரமாக வெகு நாட்கள் காண முடியும். ஆனால் அவ்வப்பொழுது சில ரேகைகள் கையில் தோன்றி மறைவதையும் காணலாம். கோட்சார கிரகங்களால் ஜாதக பலன்கள் மாறும்பொழுது உள்ளங்கையில் புதிய ரேகைகள் தோன்றி மறைகின்றன.


======================================================================

ஓம் ஆச்சார்ய தேவாய நம :
குறிஞ்சி நிலம் என்பது பண்டைத்தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில்ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு சேயோன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. "சேயோன் மேய மைவரை உலகமும்" எனத் தொல்காப்பியம் குறிஞ்சி நிலம் பற்றிக் கூறுகிறது.
சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில்குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் சிவந்தவன் என்ற பொருளை தரும் என்பதால் சிவன்,முருகன் இரண்டு பேருமே சேயோன் என்று கூறப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
_________________________________________
கொல்லிமலை எனக்கிளையசெல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலைபழநிமலை அம்மே
எல்லுலவும் விந்தைமலை எந்தைமலைஅம்மே
இமயமலை என்னுடையதமையன்மலை அம்மே
சொல்லரிய சாமிமலை மாமிமலைஅம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டுவேள்விமலை அம்மே
செல்இனங்கள் முழவுகொட்டமயிலினங்கள் ஆடும்
திரிகூடமலை யெங்கள் செல்வமலைஅம்மே;
_________________________________________
(5) கொல்லி மலையானது எனக்குப் பின்பிறந்த செல்லி என்னும்பெயருடையாளுக்குரிய மலையாகும்;அவளின் கணவனுக்குக்குடிக்காணியாட்சியாக இருப்பதுபழனிமலை ஆகும் அம்மே! ஞாயிறுமேலே செல்கின்ற விந்தை என்னும்மலையே என் தந்தைக்குரியமலையாகும் அம்மே! இமயமலைஎன்னுடைய தமையனுக்குரியமலையாகும் அம்மே! சொல்லுதற்கரியசுவாமி மலை என்னும் மலையே என்மாமியாளுக்குரிய மலையாகும் அம்மே!என் தோழிக்குரிய மலையோ நாஞ்சில்நாட்டிலுள்ள வேள்வி யென்னும்மலையாகும் அம்மே! மேகங்கள்குமுறலாகிய பறையை முழக்க,அதற்கேற்ப மயிலினங்கள்நடனஞ்செய்கின்ற திரிகூட மென்னும்திருக்குற்றாலமலையே எங்களுக்குச்செல்வப்பொருளாக இருக்கின்றநாங்கள் வாழும் மலையம்மே!
___________________________________________
I . குறிஞ்சியின் கருப்பொருள்கள்
01. தெய்வம் - முருகக் கடவுள் (சேயோன்)
02. உணவு - மலைநெல், மூங்கில் அரிசி, தினை.
03. விலங்கு - யானை, புலி, பன்றி, கரடிஃசிங்கம்.
04. மரம் - சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்.
05. புள் - மயில், கிளி.
06. பறை - வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை.
07. தொழில் - வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேன்
எடுத்தல், கிழங்கு கிண்டி எடுத்தல், சுனை நீராடல்.
08. பண் - குறிஞ்சிப் பண்.
09. பூ - வேங்கை, குறிஞ்சி, காந்தள், சுனைக்குவளை.
10. நீர் - அருவி நீர், சுனை நீர்.
11. உயர்ந்தோர் - பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி.
12. தாழ்ந்தோர் - குறவர், கானவர், குறத்தியர், வேட்டுவர், குன்றுவர்.
13. ஊர் - சிறுகுடி, குறிஞ்சி.
14. யாழ் - குறிஞ்சி யாழ்.
இதிற் கூறப்பட்டுள்ள குறிஞ்சியின் பதினான்கு (14) கருப்பொருள்களை மேலும் சிறப்புறச் செய்வதற்காக நாற்பத்தேழு (47) வகையான சிறப்புற்ற பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.
_______________________________________________
இதன் மூலம் கைரேகை கலையானது ஆதி தமிழர்களுக்கு
முருகப்பெருமான் அருளால் சித்திக்கப்பெற்றது என்பது தெளிவாகிறது!
கைரேகை கலை ஆரம்ப காலங்களில் மலை வாழ் குறவரின கன்னிப்பெண்களின்
கை வசத்திலேயே இருந்தது.
ஜோதிடக்கலையின் படி
கைரேகைக்கலையோடு தொடர்புடைய நட்சத்ரங்கள்
ஹஸ்தம் = கைகள்
திருவோணம் = முழக்கோல்
ரோகிணி = கூடை & மலை
இவை இடம்பெறும் இராசிகள்
எல்லாமே நிலம் & பெண் இராசிகளாக அமைவதைக்காணலாம்.
தென் குமரி ஆளும் எங்கள் கன்னி பகவதி
திருவடிகளே சரணம்!
ஓம் தத் ஸத்!
ஜோதிடம் ஒளிர்கிறது!
ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
இரா.ஜோதி சண்முகம்
பறக்கை கிராமம்
குமரிமாவட்டம்®
ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ


========================================================================


Siddhayogi Sivadasanravi
நவ ரத்தினங்கள் அணிய வேண்டிய விரல்கள்



==============================================================================



Siddhayogi Sivadasanravi
கைரேகை கலைக்கும் ஜோதிட கலைக்கும் உள்ள தொடர்பு
கையிலுள்ள கிரஹ மேடுகளுக்கும் ராசி கட்டத்திலுள்ள கிரஹ ஆட்சி வீடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.அது எப்படி என்பதைப்பார்ப்போம்.
ராசிகட்டத்தில் சூரியனுக்கும் புதனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான சிம்மமும், கன்னியும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதனாலேயே கையில் சூரிய மேடும் புதமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் சனிக்கும் ,குருவுக்கும் உரிய ஆட்சி வீடுகளான தனுசும், மகரமும் அடுத்தடுத்த ராசிகளாகும். இதுபோல் கும்பமும்.மீனமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் சனி மேடும் ,குருமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் செவ்வாய்க்கும் ,சுக்கிரனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான மேசமும், ரிசபமும் அடுத்தடுத்த ராசிகளாகும். இதுபோல் துலாமும்,விருச்சிகமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் செவ்வாய் மேடும், சுக்கிரமேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் குருவுக்கும் ,செவ்வாய்க்கும் உரிய ஆட்சி வீடுகளான விருச்சிகமும் , தனுசும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதுபோல் மீனமும் .மேசமும் அடுத்தடுத்த ராசிகளாகும் இதனாலேயே கையில் குருமேடும் ,செவ்வாய் மேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் புதனுக்கும்,சந்திரனுக்கும் உரிய ஆட்சி வீடுகளான மிதுனமும், கடகமும் அடுத்தடுத்த ராசிகளாகும்.இதனாலேயே கையில் புதமேடும்,சந்திர மேடும் அடுத்தடுத்து அருகருகே அமைந்துள்ளன.
ராசிகட்டத்தில் ராஹு,கேதுக்களுக்கு ஆட்சி வீடுகள் கிடையாது என்பர்.இதனால்தான் கையில் ராஹு,கேதுக்களுக்கு மேடுகள் எதுவும் இல்லை.இதுவே கிரஹ ஆட்சி வீடுகளுக்கும், கிரஹ மேடுகளுக்கும் உள்ள தொடர்பாகும்.


=====================================================================


Siddhayogi Sivadasanravi
கைரேகைகளைக்கொண்டு பலன் கூறும் முறை

நாடி ஜோதிடத்தில் ஜாதகத்தில் உள்ள கிரஹ சேர்க்கைகளைக்கண்டறிந்து எப்படி பலன் கூறப்படுகிறதோ அதே முறையில் கைரேகை கலையில் ஒரு ரேகைக்கும் மற்றொரு ரேகைக்கும் உள்ள தொடர்பைக்கண்டறிந்து அதன் மூலம் கிரஹ சேர்க்கையைக்கண்டறிந்து பலன் கூறவேண்டும்.அதாவது கரேகை மூலம் கிரஹ சேர்க்கைகளைக்கண்டறிந்து பலன் கூறவேண்டும்.
இரண்டு கிரஹங்கள் சேர்க்கைப்பெற்றால் அவை தங்களுடைய காரக பலன்களை ஒன்றோடொன்று பகிர்ந்துகொள்ளும் என்பது நாடி ஜோதிட விதியாகும்.அதே நாடி ஜோதிட விதிதான் கைரேகைக்கலையிலும் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக ஜாதகத்தில் குருவும் சூரியனும் சேர்க்கைப்பெற்றால் என்ன பலன் என்று பார்ப்போம்.
ஆண் ஜாதகத்தில் ஜாதகனைக்குறிக்கும் கிரஹம் குருவாகும்.தகப்பனைக்குறிக்கும் கிரஹம் சூரியனாகும். குருவுடன் சூரியன் சேர்க்கை பெற்றதால் ஜாதகன் பேர்,புகழுடையவன்,நிர்வாகத்திறமையுடையவன்.சுய மரியாதையுடையவன்.
சூரியனுடன் குரு சேர்க்கைப்பெற்றதால் ஜாதகருடைய தகப்பன் சாந்த குணமுடையவன்,தர்மகுணமுடையவன்,தெய்வ பக்தியுடையவன்.
குருவும் சூரியனும் பரஸ்பர நட்புக்கிரஹங்களாகும்,எனவே ஜாதகனுக்கும் அவனுடைய தகப்பனுக்கும் இடையே உள்ள உறவு நெருக்கமாக இருக்கும்.இவ்வாறு மற்ற கிரஹ சேர்க்கைகளுக்கும் பலன் அறியலாம்.
அடுத்து கை ரேகையில் கிரஹ சேர்க்கையை கண்டறிவது எப்படி எனப்பார்ப்போம்.
இயல்பாக ரேகைகள் எந்த மேட்டில் தொடங்கி ,எந்த மேட்டில் முடிய வேண்டுமோ அதன்படி உள்ளங்கையில் அமைந்திருக்கவேண்டும் என்பது பொதுவான விதியாகும்.அதாவது ரேகைகள் தங்களுக்குரிய மேட்டை நோக்கி செல்லவேண்டும் என்பது பொது விதி.இதற்கு மாறாக ஒரு ரேகை தனக்குரிய மேட்டை நோக்கிச்செல்லாமல் வேறு ஒரு கிரஹ மேட்டை நோக்கிச்செல்லுமானால் அந்த ரேகைக்குரிய கிரஹமும் அந்த மேட்டுக்குரிய கிரஹமும் சேர்க்கைப்பெற்றதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக சூரிய ரேகையிலிருந்து தொடங்கும் ஒரு கிளை ரேகை குரு மேட்டை நோக்கி செல்லுமானால் சூரியன்,குருவினுடைய வீடுகளில் ஒன்றான தனுசுவிலோ அல்லது மீனத்திலோ இருப்பான் அல்லது ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு திரிகோண ராசியிலோ (1-5-9) அல்லது சப்தம ராசியிலோ (1-7),அல்லது முன் பின் ராசியிலோ (2-12) சூரியன் நின்றிருப்பான்.
அடுத்து ஒரு ரேகை மற்றொரு ரேகையுடன் இணைவு பெற்றிருந்தால் அவ்விரு ரேகைகள் குறிக்கும் கிரஹங்களும் சேர்க்கை பெற்றதாக எடுத்துக்கொண்டு பலன் கூற வேண்டும்.ரேகை இணைவுகள் எப்படி இருக்கும் என்றால் ஒரு ரேகை வளைந்து சென்று மற்றோரு ரேகையுடன் இணந்திருக்கலாம் அல்லது ஒரு ரேகையிலிருந்து தோன்றும் கிளை ரேகை மற்றொரு ரேகையுடன் இணைந்திருக்கலாம்.
உதாரணமாக விளக்கப்பட்டுள்ள குரு,சூரியன் சேர்க்கை ஜாதகத்திலும் ,கைரேகையிலும் எப்படி இருக்கும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஜாதகத்தில் குருவுக்கு திரிகோணத்தில்(5ல்) சூரியன் நிற்கிறார். இது குரு, சூரியன் சேர்க்கையாகும்.கைரேகையில் சூரிய ரேகையானது குரு ரேகையுடன் இணைந்துள்ளது.இது கைரேகையில் காணப்படும் குரு,சூரியன் சேர்க்கையாகும்.எனவே குரு,சூரியன் சேர்க்கைக்குரிய பலாபலன்களை கூறவேண்டும்.


===========================================================================


கிரக சேர்க்கை பலன்கள்
நாடி ஜோதிடத்தில் கிரக சேர்க்கைகளுக்கு எப்படி பலன் கூறப்படுகிறதோ,அதே முறையில் கைரேகை கலையிலும் கிரக சேர்க்கை பலன்களையே கூறவேண்டும்.
சூரியன்+சந்திரன்
ஜாதகரின் தந்தையார் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு இடத்தில் குடியேறுவார். ஜாதகரின் தந்தையார் சலன புத்தியுடையவர்,பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். ஜாதகருடைய தாய் தந்தையினிடையே ஒற்றுமை நிலவும்.
சூரியன்+செவ்வாய்
ஜாதகரின் தந்தையார் ஆணவமிக்கவர், தான் என்ற கர்வமுடையவர், அதிகார தோரணையுடையவர்.யாருக்கும் அடங்கிப்போகமாட்டார். சொந்தமாக நிலபுலன் உடையவர்.
சூரியன்+புதன்
ஜாதகரின் தந்தையார் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர்.
சூரியன்+குரு
ஜாதகரின் தந்தையார் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர்.
சூரியன்+சுக்கிரன்
ஜாதகரின் தந்தையார் செல்வந்தராக இருப்பார். பெண்கள் மீது மோகமுள்ளவர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகருக்கு புத்திர தோசம் உண்டு.
சூரியன்+சனி
ஜாதகரின் தந்தையார் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார். ஜாதகருக்கும் அவருடைய தந்தையாருக்கும் ஒத்துப்போகாது.
சூரியன்+ராகு
ஜாதகரின் தந்தையார் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு.ஜாதகருக்கு கண் நோய் வரும்.
சூரியன்+கேது
ஜாதகரின் தந்தையார் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகருக்கு கண் நோய் வரும்.
சந்திரன் + சூரியன்
ஜாதகரின் தாயார் நிர்வாகத்திறமை உள்ளவர். தியாக மனப்பான்மை உள்ளவர். பிறர் நலம் காப்பதில் விருப்பம் உடையவர். ஜாதகருடைய தாய் தந்தையினிடையே ஒற்றுமை நிலவும்.
சந்திரன் +செவ்வாய்
ஜாதகரின் தாயார் ஆணவமிக்கவர், தான் என்ற கர்வமுடையவர், அதிகார தோரணையுடையவர்.யாருக்கும் அடங்கிப்போகமாட்டார். சொந்தமாக நிலபுலன் உடையவர்.
சந்திரன் +புதன்
ஜாதகரின் தாயார் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர். ஜாதகருக்கு தோல் வியாதி வரும்.
சந்திரன் +குரு
ஜாதகரின் தாயார் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர். ஜாதகர் அனைவரையும் வசீகரிப்பார்.
சந்திரன் +சுக்கிரன்
ஜாதகரின் தாயார் செல்வந்தராக இருப்பார். சொகுசு விரும்பி. ஆடம்பர பிரியர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகர் காம உணர்ச்சி அதிகம் உள்ளவர். ஜாதகருக்கு நீரழிவு வியாதி வரும். ஜாதகர் பெண்ணானால் அவருக்கு கருச்சிதைவு உண்டாகும்.
சந்திரன் +சனி
ஜாதகரின் தாயார் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார். ஜாதகருக்கு அஜீரண கோளாரு உண்டு.
சந்திரன் +ராகு
ஜாதகரின் தாயார் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு. ஜாதகருக்கு கண் நோய் வரும்.
சந்திரன் +கேது
ஜாதகரின் தாயார் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகருக்கு கண் நோய் வரும்.
செவ்வாய்+ சூரியன்
ஜாதகரின் இளைய சகோதரர் நிர்வாகத்திறமை உள்ளவர். தியாக மனப்பான்மை உள்ளவர். பிறர் நலம் காப்பதில் விருப்பம் உடையவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சந்திரன்
ஜாதகரின் இளைய சகோதரர் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு இடத்தில் குடியேறுவார். ஜாதகரின் இளைய சகோதரர் சலன புத்தியுடையவர்,பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +புதன்
ஜாதகரின் இளைய சகோதரர் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +குரு
ஜாதகரின் இளைய சகோதரர் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சுக்கிரன்
ஜாதகரின் இளைய சகோதரர் செல்வந்தராக இருப்பார். சொகுசு விரும்பி. ஆடம்பர பிரியர். சொந்தமாக வீடு வாகனங்கள் இருக்கும். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +சனி
ஜாதகரின் இளைய சகோதரர் சோம்பேறியாக இருப்பார் அல்லது எதிலும் மந்தமாக செயல்படும் குணமுள்ளவராக இருப்பார்.
செவ்வாய் +ராகு
ஜாதகரின் இளைய சகோதரர் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு. ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும்.
செவ்வாய் +கேது
ஜாதகரின் இளைய சகோதரர் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகர் பெண்ணானால் அவருடைய கணவருக்கு இந்த பலன்களை சொல்லவேண்டும். ஜாதகருக்கு மூலம் வியாதி,குடலிறக்கம்,குடல் வால் வெடிப்பு போன்ற நோய்கள் வரும். ஜாதகர் ஆணானால் ஆண்மை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு.



=====================================================================



==========================================================




========================================================================



============================================================


சுக்கிர ,சந்திர ரேகைகள் இணைவு
-------------------------------------------------
கையில் சுக்கிர ரேகையும் சந்திர ரேகையும் இணைந்திருந்தால். வீட்டில் பணம் தங்காது. ஆடம்பர செலவுகள் அதிகமாக இருக்கும். பணம் வீண் விரையமாகும். வீடு வாகனங்கள் தங்காது,அவைகளை விற்க நேரிடும். பெண்களால் ஆண்களுக்கு அவமானம் உண்டாகும். இரு பாலாருக்கும் நீரழிவு வியாதி வரும். பெண்களுக்கு இந்த சேர்க்கை இருந்தால் வெள்ளைப்படுதல், கருச்சிதைவு உண்டாதல், கருப்பை சம்பந்தமான நோய்கள் வரும். ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போகும். ஆண் பெண் இருவருக்கும் காம சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.


=================================================================================




சுக்கிர காரக விருத்தி ரேகை
------------------------------------------
இந்த ரேகை உள்ளங்கையில் இருந்தால் சுக்கிரனின் காரகங்கள் விருத்தி அடையும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட வீடுகள், ஒன்றுக்கு மேற்ப்பட்ட வண்டி வாகனங்கள், என அமையும். தன் மனைவியைத்தவிர வேறு ஒரு பெண்ணிடமும் நெருக்கம் உண்டாகும். இது சிலருக்கு அழுத்தமாக நிரந்தரமாக அமைந்திருக்கும். அவர்களுக்கு நிரந்தமாக இரண்டு வீடுகள் அமைந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு சில காலம் கையில் தோன்றி பின் மறைந்துவிடும். அவ்வாறு மறைந்துவிட்டால் இரண்டாம் வீடு நிரந்தமில்லை. அது வந்து போகும். அவ்வளவுதான்.


================================================================





No comments:

Post a Comment